என் மலர்
முகப்பு » Demolition of the temple
நீங்கள் தேடியது "Demolition of the temple"
- நெடுஞ்சாலை துறை சார்பில் நடவடிக்கை
- ஆக்கிரமிப்புகளை அகற்றினர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் கிராமத்தில் ஆரணி செய்யார் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை வருவாய் துறையினர் அகற்றி வருகின்றனர்.
எஸ்.வி.நகரம் பஸ் நிறுத்தம் அருகில் மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலை துறையினர் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கபட்டது. விநாயகர் கோவிலை இடித்து தரை மட்டமாக்கினார்கள்.
பழமை வாய்ந்த கோவிலை இடித்து தரைமட்டாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பதட்டத்தை தணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
×
X