என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhanthonriyamman Temple"

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கிராம சாந்தி பூஜையுடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து கணபதி பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) யாக சாலை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நாளை (வியாழக்கிழமை) 2-ம் கால யாக பூஜை, சுவாமிகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சான்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கலச ங்கள் யாக சாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    அன்று காலை 10 மணிக்கு மகா அபிஷே கமும், கோதரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடை பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×