என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dil raju"

    • விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் தயாராகியுள்ளது.
    • ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 'வாரிசு' படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

    விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளதால், வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருந்தனர்.

     

    வாரிசு

    வாரிசு

    இதனிடையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

     

    வாரிசு

    வாரிசு

    விஜய்யின் வாரிசு திரைப்பட ரிலீஸ் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம் என்றும் அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்திருந்தார்.

     

    வாரிசு

    வாரிசு

    இந்நிலையில், வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என்றும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 'வாரிசு' அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

    • அஜித், விஜய் திரைப்படங்கள் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இருவரும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது.

    விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன.


    வாரிசு - துணிவு

    இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.


    வாரிசு - துணிவு

    இந்நிலையில், 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்துள்ள பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், "விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது.


    வாரிசு படக்குழு

    துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென பேசப்போகிறேன்" என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • வாரிசு, துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது.


    துணிவு - வாரிசு

    இதைத்தொடர்ந்து 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, "விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் சமமாக திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென பேசப்போகிறேன்" என்று கூறினார்.


    துணிவு - வாரிசு

    இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் தில் ராஜு அளித்துள்ள பேட்டியில், "மீடியா முன்னாடி பேச வேண்டும் என்றாலே பதட்டமாகுது. நான் என்ன பேசினாலும் சர்ச்சை ஏற்படுத்திவிடுகிறார்கள். சமீபத்தில் நான் ஒரு சேனலுக்கு 45 நிமிடம் பேட்டி கொடுத்திருந்தேன். ஆனால் அதிலிருந்து ஒரு 20 செகன்டை மட்டும் எடுத்து போடுகிறார்கள். அதற்கு முன்னாடி பின்னாடி என்ன பேசியிருந்தேன் என்று முழுவதும் தெரியாமல் சமூக வலைதளத்தில் வைரல் செய்து விட்டார்கள்.


    தில் ராஜு

    அந்த பேட்டியை முழுவதும் பார்த்திருந்தால் நான் என்ன பேசினேன் என்று தெரியும். மீடியாவிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அந்த 20 செகன்ட் வீடியோவை மட்டும் வைத்து முடிவு எடுக்காதீர்கள். ஒருவரை நக்கல் செய்வதிலோ கிண்டல் செய்வதிலோ எனக்கு உடன்பாடில்லை. சினிமாவில் இன்னும் நான் சாதிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு" என்று பேசினார்.

    • நடிகர் சிரஞ்சீவி தற்போது ‘போலா ஷங்கர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015-ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு 'போலா ஷங்கர்' என பெயரிடப்பட்டு உள்ளது.


    இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த புரொமோஷனில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி, 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, எமோஷன் வேணுமா எமோஷன் இருக்கு' என தயாரிப்பாளர் தில் ராஜு பாணியில் படத்தை புரொமோஷன் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'வாரிசு' திரைப்படத்தின் புரொமோஷனின் போது தயாரிப்பாளர் தில் ராஜு 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு' என இப்படத்தை புரொமோஷன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர்.
    • இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான 'ஜாபிலம்மா' என்ற பாடல் ரிலீஸாகுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக்கானதால் பாடல் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.


    இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தில் ராஜு பகிர்ந்துள்ளார். அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தில் ராஜு 'கேம் சேஞ்சர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

    • பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து நட்சத்திர தயாரிப்பாளராக உயர்ந்திருப்பவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
    • ஆதித்யா ராம் படப்பிடிப்பு வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து நட்சத்திர தயாரிப்பாளராக உயர்ந்திருப்பவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு. இந்த தருணத்தில் தயாரிப்பாளர் தில் ராஜுடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபடுகிறார் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான படப்பிடிப்பு வளாகம்- கட்டுமான நிறுவனம் படத் தயாரிப்பு நிறுவனம் என பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிரபல தொழிலதிபர் ஆதித்யா ராம்.

    இவர் ஏற்கனேவே நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு இவர் திரைப்படத்துறையின் தயாரிப்பு மற்றும் விநியோகத் துறையில் அனுபவம் மிக்க தில் ராஜுடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை அறிவிப்பதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் படப்பிடிப்பு வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தயாரிப்பாளர் தில் ராஜு பேசுகையில், ''

    எங்கள் நிறுவனம் தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் 50 ஆவது திரைப்படமாக 'கேம் சேஞ்சர்' தயாராகி இருக்கிறது. இந்த படத்தின் கதையை மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் விவரித்த போது வியந்தேன். தற்போது இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இருக்கிறது.

    தயாரிப்பாளர் ஆதித்யா ராம்- என் நண்பர். அவர் 2002 ஆம் ஆண்டில் நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். அதன் பிறகு சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு பரபரப்பாக இயங்கி வருகிறார்.

    அவரிடம் ஒரு முறை நான் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை தமிழில் வழங்க முடியுமா? என கேட்டேன். அதற்கு அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் - ஆதித்யா ராம் மூவிஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 'கேம் சேஞ்சர் ' படம் மட்டுமல்ல.. தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். 'வாரிசு' திரைப்படத்திற்கு பிறகு தமிழில் திரைப்படங்களை தயாரிக்க விரும்பினேன். அதனால் நண்பர் ஆதித்யா ராமுடன் கூட்டணி அமைத்து தமிழில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். அத்துடன் பான் இந்திய அளவிலான திரைப்படங்களையும் தயாரிக்கிறோம்.

    தயாரிப்பாளர் ஆதித்யா ராம் பேசுகையில், '' எங்களுடைய தயாரிப்பு நிறுவனமான ஆதித்யா ராம் மூவிஸ் ஏற்கனவே நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஏக் நிரஞ்சன்' என்ற திரைப்படத்திற்குப் பிறகு தயாரிப்பு பணியில் இருந்து விலகினேன். ஏனெனில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட விரும்பினேன். அதனால் படத் தயாரிப்பிற்கு தற்காலிகமாக இடைவெளியை உருவாக்கிக் கொண்டேன்.

    தயாரிப்பாளரும் , நண்பருமான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவான 'கேம் சேஞ்சர்' படத்தில் அவருடன் இணைந்து இருக்கிறேன். இதனைத் தொடர்ந்து விரைவில் தமிழ் திரைப்படங்களையும், பான் இந்திய அளவிலான திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன்.

    இதற்கான பொருத்தமான கதை... இயக்குநர் ..ஆகிய விசயங்களை இத்துறையில் அனுபவிக்க தில் ராஜுவின் வழிகாட்டலுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். அவர் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றி படங்களை அளித்த தயாரிப்பாளர். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை மகிழ்ச்சிகரமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

    ஆதித்யா ராம் குழுமம் - திரைப்படத்துறைக்கு ஏராளமான பணிகளை செய்து வருகிறது. அதனால் நாங்கள் வெற்றிகரமான படைப்புகளை வழங்குவோம் என நம்புகிறோம். அனைவருக்கும் நன்றி'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சோதனை நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பிரபல தயாரிப்பாளர்களான தில்ராஜு, நவீன் எர்னேனி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட படங்கள் நல்ல வசூலை கொடுத்துள்ளது.

    தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங் களை தயாரித்து உள்ளார். நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார்.

    தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக சமீபத்தில் அவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டார். தில் ராஜுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் ஐதராபாத் பெருநகர பகுதியிலேயே அமைந்து உள்ளன.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை 5 மணிக்கு அதிரடியாக புகுந்தனர்.

    இந்த இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் தில் ராஜுவின் சகோதரர் சிரிஷ், மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியோரின் வீடுகள் ஜூப்ளிகில்ஸ் மற்றும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளன. அந்த இடங்களிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

    மேலும் தில் ராஜுவுடன் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    மேலும் சமீபத்தில் வெளியான பான் இந்தியா படமான புஷ்பா-2 படத்தின் தயாரிப்பாளர் நவீன் எர்னேனியின் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

    ஐதராபாத்தில் இன்று ஒரே நாளில் 2 தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான 8 இடங்களில் 55 குழுக்கள் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஜுப்ளிஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

    சோதனை நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தில் ராஜு இந்த மாதம் சங்கராந்தி பண்டிகையையொட்டி 2 படங்களைத் தயாரித்தார். பான்-இந்தியா திரைப்படமான கேம் சேஞ்சர் மற்றொரு வெளியீடான சங்கராந்திகி வஸ்துன்னம் படங்கள் வசூல் சாதனைகளை முறியடித்து குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டி வருகிறது.

    பிரபல தயாரிப்பாளர்களான தில்ராஜு, நவீன் எர்னேனி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட படங்கள் நல்ல வசூலை கொடுத்துள்ளது.

    இதனால் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் முறைகேடாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் புஷ்பா-2 வெளியானபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

    தற்போது புஷ்பா-2 தயாரிப்பாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 'புஷ்பா 2' முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
    • நேற்று 'புஷ்பா 2' தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

    'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

    இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1850 கொடுக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று 'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் அவருடைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஐதராபாத் விமானநிலையத்தில் இருந்து இயக்குநர் சுகுமாரை அவரது வீட்டிற்கு அழைத்து வந்த வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது என்ன கிடைத்தது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

    வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.


    இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது 'ஆர்சி 15' மற்றும் 'எஸ்.வி.சி 50' படங்களையும் தயாரிக்கிறது. இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு அறிமுக நடிகர், நடிகைகள், தேவை படுவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வைரலாக பரவியது. இந்த அறிவிப்பால் பலரும் இதற்கு விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.


    இந்த தகவலை கண்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம். தங்கள் தரப்பிலிருந்து இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.


    ×