search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divorced mason"

    • மனைவியை பிரிந்து வாழ்ந்த கொத்தனார் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தார்.
    • இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தோப்புபட்டி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 42), கொத்தனார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி கணவரை பிரிந்து மாசிலாபுரம் என்ற இடத்தில் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே கோவையில் கட்டிடவேலைக்கு சென்று வந்த பாண்டியராஜ், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவர் கோவைக்கு செல்லாமல் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் மது குடித்து வந்தார். இதனை கண்ட அவரது தந்தை சண்முகவேல் கண்டித்தார்.

    நேற்று வீடு திரும்பாத பாண்டியராஜ், ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள கொண்டனேரி கண்மாய் அருகில் உள்ள பெரியார் சிலை பின்புறம் மது குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×