என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK Shivakumar"

    • முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
    • எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.

    கர்நாடகாவில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து சபாநாயகர் மீது வீசி பாஜக எம்எல்ஏக்கள் வீசி அமளியில் ஈடுபட்டனர். இதனால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத ரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

    முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.

    குறிப்பாக இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தேவைப்பட்டால் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியிருந்தார்.

    இந்த பாயிண்டை பிடித்த ஜேபி நட்டா, காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தெற்கில் முஸ்லிம்களுக்கு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.

    கர்நாடக துணை முதல்வர் அங்குள்ள சபையில், தேவைப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறினார். அங்கு அரசியலமைப்பை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என்று சீறினார்.

    மேலும் இதுதொடர்பாக அவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பில் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் அமர்ந்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று கூறும்போது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தனது கருத்துக்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 'நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி திருத்தங்கள் இருக்கும் என்று பொருள்படவே கூறினேன்.

    இயல்பாக பேசியதை வைத்துக்கொண்டு பாஜக பொய்ப் பிரசாரம் செய்கிறது. எனது வார்த்தைகளை தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். நான் 36 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கும் பொது அறிவு இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில், நான் நட்டாவை விட விவேகமான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்கள் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.  

    • ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய சட்டசபை ஒப்புதல் அளித்தது.
    • ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய அம்மாநில சட்டசபை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம். கோடை தொடங்குவதற்கு முன்பு தண்ணீரை சேமிப்பதாக உறுதிமொழி எடுக்க ஒரு பிரசாரம் செய்ய விரும்புகிறோம்.

    நாளை மாலை காவிரி ஆரத்தி எடுப்போம். இது ஒரு அரசு திட்டம். நாங்கள் அரசியலுக்காக அல்ல, வளர்ச்சிக்காக இருக்கிறோம்.

    ராமநகரம் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றப்படும். டெல்லியில் சில அமைச்சர்கள் குறும்பு செய்து வருகின்றனர். சட்டப்பூர்வமாக விஷயங்களை எப்படி கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும் என தெரிவித்தார்.

    • சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்த்தில், "மாநில சுயாட்சி மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் எனக்குக் கிடைத்தது.

    மார்ச் 22 அன்று நான் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார். கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள்.
    • என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது கர்நாடக மாநில விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் இரண்டு கர்நாடக மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இது வெறும் வதந்திகள்தான். ஆதாரங்கள் தேவை. இந்த விவகாரத்திற்குப்பின் பாஜக-வின் சதித்திட்டம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

    ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான். எந்த அமைச்சர்கள் பெயர் வெளியானது? யாராவது பார்த்தீர்கள் அல்லது கேட்டீர்களா?. அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள். என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.

    என்னுடனோ அல்லது முதல்வருடனோ போட்டோ எடுத்துக் கொண்ட ஒரு நபர், குற்றச்செயலில் ஈடுபட்டால் அவருக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று அர்த்தமா?.

    தங்கம் கடத்திய ரன்யா ராவ் உடன் எந்த அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் வெளிப்படுத்துவீர்களா? என முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பாஜக எக்ஸ் பக்க பதிவு மூலம் கேட்டுள்ளது.

    ரன்யா தங்கம் கடத்தல் வழக்கில் ஒருவேளை பாஜக-வுக்கு தொடர்பு இருக்கலாம், ஆனால் காங்கிரஸ்க்கு தொடர்பு இல்லை. எந்த அமைச்சரும் இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட மாட்டார்கள். முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    விமான நிலையங்களில் வாட்ச், பெல்ட் என அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனைகள் இருக்கும்போது 14 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டுள்ளது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

    இது பாஜக-வின் சதி திட்டம். இதில் எந்தவொரு அமைச்சரும் ஈடுபடவில்லை என உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • 2 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
    • ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையின்போது நோட்டீசு அனுப்பினர்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தனக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனை குறித்து பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    சி.பி.ஐ. அதிகரிகள் பெங்களூருவில் உள்ள எங்களுக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் சோதனை செய்துள்ளனர். ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எந்த தகவலை பெற்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. அந்த பணியை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களோ செய்யட்டும்.

    தேர்தல் நேரத்தில் மத்திய விசாரணை அமைப்புகள் அடிக்கடி எனக்கு நோட்டீசு அனுப்பி தொல்லை கொடுக்கிறார்கள். சட்டவிரோதமாக சொத்துகள் சேர்த்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். நானே சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதி, இது தொடர்பாக ஏதாவது தகவல் வேண்டுமென்றால் நான் வழங்க தயாராக உள்ளேன் என்று கூறினேன். அப்போது அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். இப்போது தேர்தல் நெருங்குவதால் மீண்டும் தொல்லை கொடுக்கிறார்கள்.

    ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையின்போது நோட்டீசு அனுப்பினர். நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டேன். ஆஜராகியே தீர வேண்டும் என்று சொன்னதால் நான் டெல்லிக்கு சென்று நேரில் ஆஜரானேன். என்னை ஒரு முறை சிறைக்கு அனுப்பினர். இப்போது மீண்டும் ஒரு முறை சிறைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவில்லை.

    நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது ஒரு தவறு கூட செய்யவில்லை. ஆனால் எனக்கு எதிராக சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்ததாக வழக்கு போட்டுள்ளனர். எனது வக்கீலுக்கு கட்டணமாக ரூ.5 லட்சம் வழங்கினேன். அவருக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • சட்டசபை தேர்தல் வருகிறது.
    • அரசு பணி நியமனங்களிலும் ஊழல் நடந்துள்ளது.

    பெங்களூரு:

    பாகல்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு அந்த அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

    நான் நகர வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தபோது பாகல்கோட்டையில் காங்கிரஸ் அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கி கொடுத்தேன். இன்று (நேற்று) இந்த அலுவலகத்தை திறந்து வைக்கிறேன். சட்டசபை தேர்தல் வருகிறது. இதற்கு நாம் தயாராக வேண்டும். மத்திய-மாநில பா.ஜனதா அரசுகளின் தோல்வியை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். கர்நாடகத்தில் கொரோனாவால் 4½ லட்சம் பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

    இந்த பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தி இருக்கிறோம். கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல், அரசு திட்டங்களில் 40 சதவீத கமிஷன், பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன.

    அரசு பணி நியமனங்களிலும் ஊழல் நடந்துள்ளது. இதை எல்லாம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ரூ.5 கோடி வரை லஞ்சம் வாங்குகிறார்கள்.

    மந்திரி பதவிக்கு ரூ.100 கோடி, முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா யத்னால் எம்.எல்.ஏ.வே கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த இந்த அரசுக்கு தைரியம் உள்ளதா?. மக்களின் கஷ்டங்களை தீர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

    • காங்கிரஸ் ஆட்சியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
    • சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் கூட்டாக மக்கள் குரல் என்ற பெயரில் பஸ் யாத்திரையை தொடங்கியுள்ளனர். அந்த யாத்திரையையொட்டி ஹாவேரியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

    கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதாவை ஆதரிக்குமாறு அக்கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் எதற்காக அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்?. 40 சதவீத கமிஷன் பெறுவதற்கா?, இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க பணம் வாங்குவதற்கா?. ஒவ்வொரு அரசு வேலைக்கும் லஞ்சம் இவ்வளவு என்று நிர்ணயித்து வாங்குகிறார்கள். விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக மத்திய அரசு கூறியது. அதன்படி விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதா?.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சமீபத்தில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அப்படி என்றால் அவரது சொந்த மாவட்டமான ஹாவேரிக்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன?.

    காங்கிரஸ் ஆட்சியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மாநிலத்தின் மின் உற்பத்தி திறனை 10 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 21 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தினோம். நாங்கள் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவை அமைத்தோம்.

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிருஹஜோதி திட்டத்தை அமல்படுத்தி வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளோம். பெண்களுக்கு அதாவது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

    பிரதமர் மோடி கர்நாடகம் வந்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் 40 சதவீத கமிஷன் பெறுவதாக புகார் அளித்துள்ளனர். இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தெருவோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.

    பெங்களூரு:

    தெருவோர வியாபாரிகள் சங்கங்களின் மாநாடு பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:- உங்களின் (தெருவோர வியாபாரிகள்) எண்ணிக்கை குறைவு இல்லை. உங்களால் சொந்தமாக கடையை நடத்த முடியவில்லை. நீங்கள் தவறான வழியில் போகாமல் நேர்மையாக உழைத்து சுயமரியாதையுடன் வாழ்க்கையை நடத்துகிறீர்கள். உங்களின் குறைகள் என்ன என்பதை நான் அறிவேன். உங்களின் சுயமரியாதை வாழ்க்கைக்கு உதவுவது எங்களின் கடமை. அதை நாங்கள் செய்வோம்.

    நமது நாட்டிற்கு நீங்கள் அனைவரும் சொத்து. தரமான பொருட்களை நீங்கள் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள். நான் மாணவராக இருந்தபோது, தெருவோர கடையில் உணவு சாப்பிட்டது உண்டு. உங்களின் மீது காங்கிரஸ் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது. உங்களின் வாழ்க்கையை தினசரி வட்டி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

    வங்கிகளில் உங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. நிலத்தை உழுபவரே அதன் உரிமையாளர் என்று சட்டத்தை கொண்டு வந்ததும் காங்கிரசே. இதன் மூலம் நிலம் இல்லாதவர்களுக்கும் நிலம் கிடைத்தது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ வரை இலவச அரிசி வழங்கும் அன்ன பாக்கிய திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் உங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபை தேர்தலையொட்டி நாங்கள் பெலகாவியில் இருந்து பஸ் யாத்திரையை தொடங்கியுள்ளோம். முதல் நாளில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளோம்.

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்துவோம். விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த திட்டங்களை அமல்படுத்தினால் அது நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தெருவோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

    • பா.ஜனதா அரசு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது.
    • தற்போதைய பா.ஜனதா ஆட்சியால் பெண்கள் அவதிப்படுகிறார்கள்.

    ஹாசன் :

    கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தனித்தனியாக யாத்திரை நடத்தி வருகிறது. மேலும் 3 கட்சிகளின் முக்கிய தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார்கள். இதனால் கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரஜா சக்தி யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை நேற்று ஹாசன் மாவட்டத்தில் நடந்தது.

    ஹாசன் தண்ணீருஹல்லா பகுதியில் பிரஜா சக்தி யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பலர் வந்தனர். டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு ஹாசன் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரேன் மூலம் அவர்கள் 2 பேருக்கும் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

    பின்னர் மேடைக்கு சென்று டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் பிரஜா சக்தி யாத்திரை பொதுக்கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும் நகரில் முக்கிய பகுதிகள், சர்க்கிள்களில் காங்கிரஸ் கட்சியின் பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.

    இந்த பொதுக்கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:- ஹாசனில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த பிரமாண்ட வரவேற்பை பார்த்து ஒரு குடும்பத்தினருக்கு (ஜனதாதளம்(எஸ்) கட்சி) அச்சம் ஏற்படும். இங்குள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதற்கு இங்கு திரண்டிருக்கும் மக்களே சாட்சி.

    தற்போதைய பா.ஜனதா ஆட்சியால் பெண்கள் அவதிப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவை விலக்கி வைக்கவே விரும்புகிறது. இதனால் தான் கடந்த முறை காங்கிரசை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால், ஓராண்டில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு காரணம் குமாரசாமி தான்.

    பா.ஜனதா அரசு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது. கொரோனா சமயத்தில் கூட இந்த அரசு பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்தது. விலைவாசி உயர்வு, மக்களின் பிரச்சினை பற்றி பா.ஜனதாவினருக்கு கவலை இல்லை. ஆட்சி அதிகாரம், பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

    பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். அனைவரும் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியை காங்கிரஸ் வழங்கும். லஞ்சம், ஊழலை ஒழிக்க மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். 200 யூனிட் மின்சாரத்தை எப்படி வழங்க முடியும் என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை அனைவரும் பார்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைக்க போவதாக குமாரசாமி கூறி இருக்கிறார்.
    • எந்த மாதிரியான வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது குமாரசாமிக்கு தெரியவில்லை.

    பெங்களூரு :

    பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைக்க போவதாக குமாரசாமி கூறி இருக்கிறார். குமாரசாமியின் இந்த பேச்சால், அந்த கட்சியில் இருக்கும் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அவ்வாறு குழப்பத்தில் இருக்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் காங்கிரசில் சேரலாம். அந்த கட்சி தொண்டர்களுக்கு நானே அழைப்பு விடுக்கிறேன்.

    எனது கனகபுரா தொகுதியில் இருந்து மாநிலம் முழுவதும் பல தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருப்பவர்கள் காங்கிரசில் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர். ஜனதாதளம் (எஸ்) கட்சி மீது நான் எந்த குற்றச்சாட்டும் கூறுவதில்லை, அந்த கட்சியின் தலைவர்களுடன் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதாக கூறுவது உண்மை இல்லை.

    ஏனெனில் சமீபமாக ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் எந்த மாதிரியான வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது குமாரசாமிக்கு தெரியவில்லை. குமாரசாமி ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைப்பதாக தனது வாயால் சொல்லி முடித்து விட்டார். அந்த கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாது என்று நான் சொல்லவில்லை.

    அந்த கட்சி தலைவர்கள் ஒரு மாதிரியான கொள்கையின் அடிப்படையில் அரசியல் செய்கிறார்கள். அரசியலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி இருக்க வேண்டும். இது காங்கிரஸ் கட்சி மற்றும் என்னுடைய நிலைப்பாடு ஆகும். ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் மென்மை போக்கை கடைப்பிடிப்பதை தவிர்ப்பதற்காக, தினமும் காலையில் எழுந்தவுடன், அந்த கட்சி தலைவர்களுடன் என்னால் சண்டை போட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நேற்று மதியம் கலபுரகி விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அரசின் பாத்திரம் இல்லை என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர். முதல்-மந்திரியும் கூறி வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைதான நபர்கள், ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். பெரிய முறைகேடு நடந்திருக்கும் பட்சத்தில் இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் எப்படி கிடைக்கிறது.

    அரசு மற்றும் பா.ஜனதா தலைவர்களின் ஆதரவு இல்லாமல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதானவர்களுக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியமே இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அரசின் பங்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதி. இதனை மூடி மறைக்கவே போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது, என்றார்.

    • பா.ஜனதாவில் தான் உள்கட்சி பிரச்சினை உள்ளது.
    • பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    போவி சமூகத்திற்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்குவதாக பா.ஜனதா உறுதியளித்து இருந்தது. ஆனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. அதனால் அந்த சமூகத்தை சேர்ந்த பாபுராவ் சின்சனசூர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். ஒக்கலிகர்கள், லிங்காயத் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீட்டை இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. அதுவும் முஸ்லிம் சமூகத்தின் இட ஒதுக்கீட்டை பறித்து வழங்கியுள்ளனர். அதனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், இந்த இட ஒதுக்கீட்டு உத்தரவை நாங்கள் ரத்து செய்வோம்.

    அதே போல் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு உயர்வையும் அரசியல் சாசனத்தில் சேர்க்கவில்லை. பா.ஜனதா அரசு எதையும் சட்டப்படி செய்யவில்லை. பா.ஜனதா அரசு சமீபத்தில் எடுத்த அனைத்து முடிவுகளும், மக்களை முட்டாளாக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன் தாக்கம் வருகிற தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இந்த பா.ஜனதா அரசு செய்த தவறுகளை நாங்கள் சரிசெய்து அனைத்து தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்டுவோம். எங்கள் கட்சியின் தேர்தல் குழு கூட்டம் 4-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாளை (இன்று) நான் டெல்லி செல்கிறேன். இதில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் இறுதி முடிவை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எடுப்பார்.

    எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. பா.ஜனதாவில் தான் உள்கட்சி பிரச்சினை உள்ளது. அதனால் தான் அவர்கள் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சியிலும் மோதல் நிலை உள்ளது. அதனால் தான் அந்த 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். சித்தராமையா 2 தொகுதியில் போட்டியிட உள்ளதாக சொல்கிறீா்கள். டிக்கெட் வேண்டும் என்று கேட்பவர்களை வேண்டாம் என்று கூற முடியுமா?. ஆதரவாளர்கள் கேட்பதில் தவறு இல்லை. இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • பா.ஜனதா 65 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.
    • எனது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கனகபுரா தொகுதியில் என்னை எதிர்த்து மந்திரி ஆர்.அசோக் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அவருக்கு நல்லது நடக்கட்டும். அரசியல் என்பது கால்பந்து விளையாட்டு அல்ல, அது சதுரங்க ஆட்டத்தை போன்றது. சதுரங்க விளையாட்டை யார் வேண்டுமானாலும் விளையாடட்டும். அரசியலில் போட்டி இருக்க வேண்டும்.

    அரசியலில் போராட்டம் என்பது எனக்கு புதிது அல்ல. 1985-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எதிராக போட்டியிட்டேன். குமாரசாமிக்கு எதிராகவும் தேர்தல் களம் கண்டுள்ளேன். தற்போதும் போராடுகிறேன். எனது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது. பத்மநாபநகரில் ஆர்.அசோக்கிற்கு எதிராக நாங்கள் பலவீனமான வேட்பாளரை நிறுத்தவில்லை.

    அவரது தொகுதியில் ஆர்.அசோக்கிற்கு எதிராக அதிருப்தி அதிகமாக உள்ளது. அங்கு முஸ்லிம் வாக்குகள் அதிகமாக உள்ளன. அதை கருத்தில் கொண்டு நாங்கள் நாயுடு சமூகத்தை சேர்ந்த ரகுநாத் நாயுடுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் வெற்றி பெறுவது உறுதி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

    பா.ஜனதா 65 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். அதிருப்தியில் உள்ள பா.ஜனதாவினர் என்னை சந்தித்தது குறித்து விவரங்களை தற்போது வெளியிட மாட்டேன். பா.ஜனதாவில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்களை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    ×