என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DonaldTrump"

    • சட்டவிரோதமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
    • ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசு விதித்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட மறுத்ததால், டிரம்ப் நிர்வாகம் உடனடியாகப் பதிலடி கொடுத்தது.

    அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தனது நிர்வாக முறையை மாற்ற வேண்டும். இல்லையென்றால், வரி விலக்கு ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

    பல பல்கலைக்கழகங்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. சட்டவிரோதமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று ஹார்வர்ட் குற்றம் சாட்டியது.

    பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது.

    ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசு விதித்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட மறுத்ததால், டிரம்ப் நிர்வாகம் உடனடியாகப் பதிலடி கொடுத்தது.

    சிவில் உரிமைகள் சட்டங்களை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது என்று தெரிவித்த டிரம்ப் நிர்வாகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடி) நிதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

    பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

    • இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு இந்திய வம்சாவளியினர் 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் நிறுவனம், யூகோவ் நிறுவனத்துடன் இணைந்து 2024 இந்திய-அமெரிக்க மனப்பாங்குகள் என்ற தலைப்பில் புதிய கருத்துக்கணிப்பை நடத்தியது.

    இந்த கருத்துக்கணிப்பில் பதிவு செய்யப்பட்ட இந்திய-அமெரிக்க வாக்காளர்களில் 62 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர், டிரம்பிற்கு 32 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.

    இந்திய-அமெரிக்க பெண்களிடம் கமலா ஹாரிசுக்கு 67 சதவீதம் பேரும், டிரம்பிற்கு 22 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய-அமெரிக்க ஆண்களில் கமலா ஹாரிசுக்கு 53 சதவீதமும், டிரம்பிற்கு 39 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர்.

    • வாஷிங்க்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே போராட்டம் நடைபெற்றது.
    • டிரம்ப் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போரட்டம் நடத்தினர்.

    அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் நாளை [ஜனவரி 20] பதவியேற்கிறார்.

    இந்நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து தலைநகர் வாஷிங்க்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். பீப்புள்ஸ் மார்ச் அமைப்புடன் இணைந்து சவுத் ஏஷியன் சர்வைவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    வாஷிங்க்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே மூன்று போராட்டக்குழுவினர் இணைந்து கோஷங்களை எழுப்பினர்.

     

    நாங்கள் முன்கூட்டியே கீழ்ப்படியவில்லை, பாசிசத்திற்கு அடிபணியவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறோம் என்று பீப்புள்ஸ் மார்ச் தெரிவித்துள்ளது. பெண்கள் உரிமை, சமத்துவம், குடியேற்றம் போன்ற அனைத்தையும் ஆதரிக்க நாங்கள் அணி திரண்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    டிரம்ப் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போரட்டம் நடத்தினர். டிரம்புக்கு ஆதரவளிக்கும் டெஸ்லா நிறுனவர் எலோன் மஸ்க் உட்பட அவருக்கு நெருங்கியவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    அவர்களில் பலர் "F**k ட்ரம்ப்!", "டிரான்ஸ் லைவ்ஸ் மேட்டர்!", "எழுந்து நில்லுங்கள், போராடுங்கள்!", "கறுப்பினப் பெண்களை நம்புங்கள்!" மற்றும் "நாங்கள் அமைதியாக இருக்க முடியாது." என்ற கோஷங்களை எழுப்பினர்.

    நியூயார்க், சியாட்டில் மற்றும் சிகாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டன.

    டிரம்ப் முதல்முறையாக பதவியேற்ற 2017 ஜனவரியிலும் இதே அமைப்பினர் இதேபோன்ற போராட்டத்தை நடத்தியது. நாளை டிரம்ப் பதவி ஏற்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வழக்கு விசாரணை இன்றி அவர்களின் சொந்த நாட்டிற்கே உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #USmigrants #DonaldTrump
    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என கூறி வரும் அதிபர் டொனால்டு டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவோரின் விசா நடைமுறைகளை கடுமையாக்கி உள்ளார்.

    அதேபோல், சட்ட விரோதமாக அந்நாட்டிற்குள் அகதிகளாக நுழைபவர்களை தடுத்து நிறுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    புதிய குடியேற்ற விதிகளைத் தீவிரமாக அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள டிரம்ப், எல்லைகளின் வழியே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை தனியாக பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தார். ஆனால், பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் திட்டத்தை சமீபத்தில் ரத்து செய்து அவர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், அகதிகள் குடியேற்றம் பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள டிரம்ப், ‘‘அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் பட்சத்தில், நீதிபதிகள் அல்லது நீதிமன்ற வழக்குகளின் தலையீடு ஏதும் இன்றி, அவர்களின் சொந்த நாட்டிற்கே அவர்களை உடனடியாக  திருப்பி அனுப்ப வேண்டும். அவர்கள் நம் நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதை நாம் அனுமதிக்க முடியாது.

    மேலும், அமெரிக்காவில் இருந்துகொண்டே அமெரிக்காவை துண்டாட முயற்சி செய்பவர்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வலிமையான எல்லைகளே குற்றம் இல்லாத தேசத்தை உருவாக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கும், புகலிடம் கோரி அமெரிக்காவில் தஞ்சம் அடைபவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் டிரம்ப் தெரிவித்துள்ள இந்த கருத்து குறித்து வெள்ளை மாளிகை, இன்னமும் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #USmigrants #DonaldTrump 
    சிங்கப்பூரில் டிரம்பை சந்திக்கும் போது விளையாட்டுத்தனம் வேண்டாம் என்று வடகொரியா அதிபருக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #DonaldTrump #KimJongUn

    வாஷிங்டன்:

    வடகொரியாவின் எதிரி நாடான தென்கொரியாவுக்கு அமெரிக்கா உதவி வருவதால் அமெரிக்காவை மிரட்டும் நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டு வந்தது.

    அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாகவும் ஏவுகணைகளை வீசப் போவதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அடிக்கடி எச்சரித்து வந்தார்.

    மேலும் அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனையும் அடிக்கடி நடத்தப்பட்டு வந்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட நிலை நிலவி வந்தது.

    பதட்டத்தை தணிக்கும் வகையில் சீனா வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதையடுத்து வடகொரியா இறங்கி வந்தது. தென் கொரியா, வட கொரியா அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடை பெற்றது.

    பின்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தென் கொரியாவில் சுற்றுப் பயணம் செய்து அந்த நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


    இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசுவதாக உள்ளது.

    இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு எதிராக கிம் ஜாங் அன் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வட கொரியா அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் போது, பேச்சுவார்த்தையின் விதிமுறைகள் விதிமுறைகளுக்கு ஏற்றார் போல் கிம் ஜாங் அன் நடந்து கொள்ள வேண்டும்.

    அவர் பேச்சு வார்த்தையின் போது கிம் ஜாங் அன் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டால் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறி விடுவார். பேச்சுவார்த்தை தடை படும். இது, இரு நாட்டு உறவை மேலும் பாதிக்க செய்து விடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DonaldTrump #KimJongUn

    ×