என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dosha Pariharam"

    • மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.
    • அம்பாளின் பெயர் கிரிசுந்தரி.

    தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது. நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் பெயர் கிரிசுந்தரி. மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும் இந்த கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலையை சிவபெருமானுக்கு சூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டு சென்றால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.

    ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நாள் என்பதால் கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். இதைக்கேட்ட குந்திதேவி, சிவபெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான், குந்தி தேவிக்காக கோவில் எதிரில் உள்ள தீர்த்தக்குளத்தில் உப்பு, கரும்புச்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய 7 கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடி பேறு பெற்றார்.

    இந்த 7 கடல்களை குறிக்கும் 7 கிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் பாபநாசம் அருகே நல்லூர் பகுதியில் கல்யாணசுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் பாபநாசம் அருகே உள்ள நல்லூருக்கு வந்து கல்யாண சுந்தரரை தரிசனம் செய்யலாம். தென் மாவட்டங்களில் இருந்து நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சை வந்து அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் பாபநாசத்துக்கு வந்து கோவிலை அடையலாம்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோவில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும்.
    • திருமணத்திற்கு தடை ஏற்படுபவர்கள் இந்த பரிகாரங்களைச் செய்யலாம்.

    இப்போது திருமணத்திற்கு தடை அல்லது தாமதம் ஏற்படுபவர்கள் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்யலாம், எந்த ஆலயங்களுக்குச் சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயம்... இங்கே முருகப்பெருமானுக்கும் தேவயானைக்கும் திருமணம் நடந்தது என்பது நாம் அறிந்ததே! இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது திருமணத்தடையை நீக்கும்.

    திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், திருமணத் தடைகளை முற்றிலுமாக அகற்றி திருமணத்தை விரைவாக நடத்தி தரக்கூடிய ஆலயம். கருமாரி அம்மனை தரிசித்து வேண்டுதல் வைத்து வந்தால் உடனே திருமணம் நடக்கும்.

    திருமணஞ்சேரி என்னும் திருத்தலம், கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகில் உள்ளது. இந்தத் திருத்தலம் திருமணத் தடைகளை அகற்றி திருமணத்தை நடத்தித் தரும் என்பது உலகறிந்தது! இந்த திருத்தலத்திற்கு சென்று வந்தாலே தடைகள் அனைத்தும் அகன்று திருமணம் நடக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை!

    கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரம் என்னும் ஊரில் இருக்கக்கூடிய ஆலயம், இங்கு இறைவன் உமா மகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அன்னை அங்கவள நாயகி கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள். இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் போல் இருப்பதால் இந்தத் தலம் திருமணத் தடைகளை அகற்றி விரைவாக திருமணம் நடத்தி தரும் ஆலயம் என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனையும் பராசக்தியையும் வணங்கி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

    சென்னை - மகாபலிபுரம் சாலையில் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் ஆலயத்தில் பெருமாளை சேவித்து வேண்டுதல் வைத்து வந்தால் விரைவாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோவில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து பிரார்த்தித்து வருவது நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடும் திருமணத் தடையை அகற்றி வம்சம் செழிக்க வழிவகை செய்யும். எனவே தவறாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்., திருமணத்தடை மட்டுமல்லாமல், குடும்ப வளர்ச்சி, வம்சவிருத்தி போன்றவற்றுக்கும் துணையாக இருக்கும்.

    ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வது, புதுமணத் தம்பதிக்கு ஆடைகள் வாங்கித் தருவது, கட்டில் மெத்தை போன்றவற்றை பரிசாகக் கொடுப்பது போன்றவையும் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாகும்.

    • பழனி மற்றும் பூம்பாறையில் உள்ள நவபாஷாண சிலைகள் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது.
    • ‘நவ’ என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும்.

    'பாஷாணம்' என்றால் 'விஷம்' என்று பொருள். 'நவ' என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும். நவபாஷாணத்தையும் முறைப்படி கட்டுப்படுத்தி, உபயோகிக்கும் தன்மையை சித்தர்கள் பெற்றிருந்தனர். ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும், தனித்தனியாக வேதியியல், இயற்பியல்பண்புண்டு. சித்தர்கள், அதில் உள்ள அணுக்களை முறைப்படி பிரித்து மீண்டும் சேர்ப்பதை 'நவபாஷாணம் கட்டுதல்' என்பார்கள்.

    1. சாதிலிங்கம், 2. மனோசிலை, 3. காந்தம், 4. காரம், 5. கந்தகம், 6. பூரம், 7. வெள்ளை பாஷாணம், 8. கவுரி பாஷாணம், 9. தொட்டி பாஷாணம் என்பதே 'நவ பாஷாணங்கள்' ஆகும்.

    இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவக்கிரகங்களின் குணங்கள் ஒத்திருப்பதாக சித்தர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை கட்டுதல் என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுவதாக நம்பிக்கை.

    தமிழ்நாட்டில் பழனிமலை முருகன் கோவில், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் மற்றும் தேவிப்பட்டினத்தில் உள்ள ஒரு கோவில் ஆகிய மூன்று இடங்களில்தான் நவபாஷாண சிலைகள் இருக்கின்றன. இதில் பழனி மற்றும் பூம்பாறையில் உள்ள நவபாஷாண சிலைகள் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது.

    நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை கொண்டிருப்பவை. நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள், நவக்கிரகங்களை ஒருங்கே வழிபட்டதற்கான பலன் கிடைக்கும். இதற்காகவே பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை, போகர் சித்தர் பிரதிஷ்டை செய்தார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால், தீராத நோய் கூட தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    • பாதகமான சூரிய திசை நடப்பதாலும் சூரிய தோஷம் ஏற்படுகிறது.
    • சூரிய தோஷம் ஏற்பட்ட நபர்களுக்கு உடல் அடிக்கடி நோய்வாய்ப்படும்.

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். 2-ல் அமர்ந்த சூரியன், குடும்பம் அமைவதை காலதாமதப் படுத்துகிறது 7-ல் அமர்ந்த சூரியன் களத்தரத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. 8-ல் அமர்ந்த சூரியன் திருமணத் தடையை ஏற்படுத்தும். மகர, கும்ப லக்னத்தாருக்கு 7, 8-ல் அமர்ந்த சூரியன் விதிவிலக்கு பெறும்.

    ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியனின் நிலை கெட்டிருந்தாலும், பாதகமான சூரிய திசை நடப்பதாலும் சூரிய தோஷம் ஏற்படுகிறது. மேலும் தங்கள் தந்தையை அவரின் வயதான காலத்தில் சரியாக பராமரிக்காதவர்களும் சூரிய தோஷம் ஏற்படும். சூரிய தோஷம் ஏற்பட்ட நபர்களுக்கு உடல் அடிக்கடி நோய்வாய்ப்படும். கண், இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். கம்பீரம் இருக்காது. தங்களின் தகுதிக்கு கீழான வேலைகள், பணிகளை செய்யும் நிலை ஏற்படும். பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வு பெறுவதில் தடை மற்றும் தாமதங்கள் உண்டாகும்.

    சூரிய தோஷம் நீங்கி சூரியனின் நற்பலன்களை பெறுவதற்கு மாதம் ஒரு ஞாயிற்று கிழமை தினத்தில் ஒரு வேளை உணவை தவிர்த்து விரதம் இருந்து, சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று சிவபெருமானையும், நவகிரகங்களில் சூரிய தேவரையும் வணங்கி அந்த கோவிலிலோ அல்லது கோவிலுக்கு அருகிலோ அரச மரம் இருந்தால், அந்த அரச மரத்திற்கு உங்கள் கைகளால் நீரூற்றி வருவது உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும்.

    "ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி" சூரியன் வம்சத்தில் பிறந்தவர். தினந்தோறும் ஸ்ரீ ராமரை பிரார்த்தித்து வந்தால் சூரிய தோஷம் நீங்கும். ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு செம்பு நாணயத்தை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி, ஓடும் ஆற்றில் வீசு வேண்டும். உங்கள் கைகள் மற்றும் விரல்களில் செம்பு வளையம் அல்லது செம்பு மோதிரத்தை எப்போதும் அணிந்திருப்பது நல்லது. கருப்பு நிற பசு மாட்டிற்கு ஞாயிற்று கிழமையில் உணவளிப்பதும் உங்களின் சூரிய தோஷத்தை போக்கும் சிறந்த பரிகார முறையாகும்.

    ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சூரிய ஓரையில் 1 கிலோ கோதுமை தானம் தருவதுடன் 6 வாரம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    • இந்த கோவில் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடு.
    • தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார்.

    குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானை களுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது.

    இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

    • இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
    • திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.

    இங்குள்ள இறைவன் மகாகாளநாதர் என்றும், இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்த பின்னர் அந்த மாலைகளில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மாகாள வாவி என்ற தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும் முருகப்பெருமானையும் வழிபட்டால் விரைவில் மக்கட்பேறு பெறலாம் என்பதும் காலம், காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

    இக்கோவிலுக்கு வரும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை வாங்கி வந்து அம்மனுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து பின்னர் ஒன்றை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது

    அஷ்ட நாகங்களில் 2-வது நாகம் வாசுகி. இந்த நாகத்திற்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தை போக்க என்ன வழி என்று சிவபெருமானை தரிசித்து கேட்டது வாசுகி. கோவில் திருமாளம் மாகாளநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், தோஷம் போகும் என்று இறைவன் கூறியதையடுத்து இங்கு வந்து வழிபாடு நடத்தி தோஷம் நீக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், புத்திரபேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கி, ராகு தோஷம், நாக தோஷம், பிரம்மஹத்தி தோஷங்களை நிவர்த்தி செய்ய விரும்புவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில் இது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் திருவாரூருக்கு செல்லும் ரெயிலில் பயணம் செய்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

    • ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம்.
    • மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றினால் பலன் நிச்சயம்.

    வக்கிர தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் மூன்று கால பூஜைகளுடன் காலை6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வக்ரசாந்தி திருத்தலம் எனப்படும் இத்திருக்கோயிலில் உள்ள வக்ரகாளியம்மனை தரிசனம் செய்வதினால் எவ்வகை வக்கிரதோஷம் இருந்தாலும் நிவர்த்தியும், திருமணபாக்கியம், மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்றவற்றை செய்து பயன் பெறுகிறார்கள். தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் இரவில் ஜோதிதரிசனம் காண நினைத்த காரியங்கள் முடிவடைகின்றன.

    மனநிம்மதி வேண்டி, கிரக தோஷங்கள் நீங்க, காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வக்கிர தோஷ ) புத்திர தோஷங்கள் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

    வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர்.

    நவக்கிரகங்களில் சனி, குரு ஆகிய கோள்கள் தாம் சஞ்சரித்த ராசிகளிலேயே பின் நோக்கி சில சமயங்களில் சில நாட்களோ மாதங்களோ சஞ்சரிப்பதுண்டு. இதை 'வக்கிரகதி' என்று சொல்லுவார்கள்.

    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால் துன்பம் நிச்சயம் குறையும், நீங்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பலன் அடைந்தவர்கள் பலர் என்றும் சொல்லுகிறார்கள்.

    ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம். சனி பகவானின் வாகனமான காகம் தெற்கு நோக்கி இருப்பது இங்கே விசேஷம்.

    • ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
    • இவர்கள் பல வரனை பார்த்து ஒதுக்குவார்கள்.

    கோபம் மற்றும் உஷ்ணத்திற்கு காரககிரகமானவர் சூரியன், ஒருவரின் சமூக மதிப்பையும் நிர்வாகத் திறமையையும் கனவுகளையும், லட்சியங்களையும் பற்றி கூறும் கிரகமாகும். ஏழில் சூரியன் அமர்ந்தவர்கள் தனது வாழ்க்கைத் துணையை பற்றிய மிகைப்படுத்தலான பகல் கனவுகளை கண்டு ஒரு கோட்டை கட்டி சாம்ராஜியம் நடத்துவார்கள்.

    இவர்களுக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் மிகுதியாக இருக்கும். தன் கனவுக் கற்பனை கோட்டையில் வசிக்கும் வாழ்க்கையே கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். அழகு, படிப்பு, பொருளாதாரம், உத்தியோகம், கவுரவம், அந்தஸ்து என பல கனவுகள் இருக்கும். இதில் சிறு குறை இருந்தாலும் திருமணம் கேன்சல் தான். இவர்கள் பல வரனை பார்த்து ஒதுக்குவார்கள்.

    அதனால் எளிதில் திருமணம் நடக்காது. இதனால் திருமணத் தடை அதிகரிப்பதுடன் திருமணத்திற்குப் பிறகு வாழ்வில் குறிப்பிட்ட சில ஆண்டு காலங்கள் தம்பதிகளுக்குள் புரிதல் இல்லாமலே இருக்கும் .கோப உணர்வு மிகுதியால் அடங்கிப் போவதில் சிரமம் மிகும்.

    கர்மா ரீதியாக இதை உற்று நோக்கினால் தந்தை வழி முன்னோர்கள் சிவன் கோவில் சொத்தை அபகரித்த குற்றம், அரசியலில் ஊழல் செய்த குற்றம் , குடும்ப உறுப்பினர்களை முறையாக நிர்வகிக்காத குற்றம் மற்றும் தந்தையை அவமதித்த குற்றத்தின் பதிவு இருக்கும்.

    பரிகாரம்

    ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சூரிய ஒரையில் 6 வாரம் பசும் பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். திருமணம் முடியும் வரை சிவன் கோவில் மூலஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு எண்ணெய் வாங்கி தர வேண்டும். ஆறு அரசு அதிகாரிகளுக்கு ஆறு வாரம் சாம்பார் சாதம் தானம் தர வேண்டும்.

    • ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
    • சந்திரன் என்றால் நீர், நீரும் மனமும் ஒரு நிலையில் நிற்காது.

    சந்திரன் ஒரு குளிர்ந்த கிரகம். திருமண உறவில் சந்திரன் உடலையும் மனதையும் குறிக்கும் காரக கிரகம். சந்திரன் என்றால் நீர், நீரும் மனமும் ஒரு நிலையில் நிற்காது. இங்கும் அங்கும் அலைந்து கொண்டே இருக்கும். திருமண விசயத்தில் வரன் குறித்து தெளிவாக முடிவு செய்யும் தன்மை இருக்காது.

    நடக்காததை நடப்பதாக கற்பனை பண்ணுவார்கள். சந்திரன் ராகுவின் சாரம் பெற்றால் திருமணத்தை நடத்தி பிரச்சனை தரும். கேதுவின் சாரம் பெற்றால் திருமணத்தை நடத்தாமல் பிரச்சினை தரும். சந்திரன் உடைபட்ட நட்சத்திரங்களான சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் திருமணத் தடை இருக்கும்.

    சந்திரன் பாசத்தை பொழியும் கிரகம். ஏழில் சந்திரன் திருமணத்திற்கு பிறகு தாயின் பாசத்தை களத்திரத்திடம் ஒப்பிட்டு பிரச்சினையை அதிகரிப்பார்கள் அல்லது தங்களின் அந்தரத்தைப் பற்றிய அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து களத்திரத்தின் வெறுப்பை சம்பாதிப்பார்கள்.

    கர்மா ரீதியாக இதை உற்று நோக்கினால் தாய் வழியில் 21 தலைமுறையாக வாழாத பெண்கள் இருப்பார்கள்.தினமும் கண்ணீர் விட்டு அழுத பெண் சாபம். தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்தவர் சாபம், வயதான தாயை முறையாக பராமரிக்காத குற்றம், ஒரு பெண்ணை மனநலம் பாதிக்கும் வகையில் துன்புறுத்தியதன் வினைப்பதிவாகும். 

    பரிகாரம்

    திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திர ஓரையில் அம்பிகைக்கு 10 வாரம் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். வயது முதிர்ந்த 11 பெண்களுக்கு பச்சரிசி உணவு 11 வாரம் தண்ணீருடன் தானம் தர வேண்டும்.

    • ஏழில் செவ்வாய் என்றால் திருமணத்திற்கு முன்பு திருமணத் தடையையும் பின்பு ஈகோவால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது.
    • செவ்வாய் முரட்டுத்தனமான கிரகம்.

    ஏழில் செவ்வாய் தோஷம் உண்டா? என்ற விவாதம் எத்தனை நூறு ஆண்டுகளானாலும் முடிவுக்கு வராத விஷயம் என்பதால் நாம் அதைப் பற்றி பேச வேண்டாம். ஏழில் செவ்வாய் என்றால் திருமணத்திற்கு முன்பு திருமணத் தடையையும் பின்பு ஈகோவால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. செவ்வாயுடன் ராகு-கேதுகள் சம்மந்தம் பெறும் போது பிரச்சினை மிகுதியாக இருக்கிறது. செவ்வாய் முரட்டுத்தனமான கிரகம். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும். செவ்வாய் முழுக்க, முழுக்க தாய், தந்தை வழி கர்மாவை மிகுதியாக பிரதிபலிக்கும் கிரகமாகும். செவ்வாயால் ஏற்படும் பிரச்சினைகள் காசு, காமம், சொத்து என்ற மூன்று வினையின் விளைவுகளாகவே இருக்கிறது.

    காமம்

    மனிதர்கள் இல்லற இன்பத்தை வாழ்க்கைத் துணைவியிடம் மட்டுமே பெற வேண்டும். முறையற்ற காமத்தால்பொருள் விரயத்துடன் தீராத நோயும், சாபமும் வினைப்பதிவும் சேரும்.இதனால் பலரின் பரம்பரைச் சொத்துக்கள் சம்பந்தம் இல்லாத நபர்களிடம் சிக்கி பயனற்றுப் போகிறது. பல குடும்பங்கள் பிரிந்து நிர்கதியாக வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள்.

    காசு

    தன் விதிப்பயனையும் மீறிய பொருள் ஆசை அநீதியான வழியில் பொருள் ஈட்டும் உணர்வை தூண்டும்.காசு என்றால் பொருள் மட்டுமல்ல. பணம் சேர்க்க அநீதியை கடைபிடித்து ஒருவரை துன்புறுத்துவது.அடுத்தவரின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றும் போது உன் அடுத்த பிறவி உறுதியாகி சத்ருவும், கர்ம வினையும் மிகுதியாகும். அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைப் பணம் ஒருரூபாய் இருந்தால் கூட அந்தக் கடனை கொடுத்து முடிக்கும் வரை மறு பிறவி எடுத்து வினையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கும் பணம், அடுத்தவரின் வயிற்றெரிச்சலில் ஈட்டிய பொருளால் வாங்கும் சொத்துக்கள்சந்ததிகளுக்கு பாவத்தையே மிகைப்படுத்துகிறது.

    சொத்து

    முறையற்ற குடும்பச் சொத்துப் பங்கீடு, அநீதியான முறையில் சொத்து சேர்த்தாலும், வாரிசு இல்லாதவர்களிடம் விருப்பமின்றி பிடுங்கிய பிள்ளையில்லாச் சொத்தும் வாரிசுகளால் அனுபவிக்க முடியாது. அவர்களுடைய வாரிசுகள் பல தலைமுறைக்கு சொத்தை வைத்து உருட்டி வேடிக்கை பார்ப்பார்கள். முடிவில் சொத்து போன வழித்தடம் தெரியாது. ஆனால் பாவம் மட்டும் சரியான பாதை கண்டுபிடித்து வந்து வாசல் கதவை தட்டும்.

    பரிகாரம்

    தொடர்ந்து ஏழு வாரம் செவ்வாய் கிழமை முருகனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும். 27 வாரம் செவ்வாய் கிழமை சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் தந்து ஆசி பெற வேண்டும். ஏழு காவலர்களுக்கு ஏழு வாரம் தலா 1 கிலோ மாதுளை தானம் தர வேண்டும். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் பூமி தானம் செய்யலாம்.

    • தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.
    • களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம்.

    முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும் வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.

    பரிகாரம்: இரு தாரமோ, ஒரு தாரமோ எந்த தோ‌ஷமாக இருந்தாலும் அந்தத் தோ‌ஷங்களைத் தாண்டி அனைவரும் விரும்புவது சந்தோ‌ஷம்தான். அந்த சந்தோ‌ஷம் மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும் என்பதால் குல இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. ஒருவருக்கு திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் அவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி வலு குறைந்து 11-ம் அதிபதி பலம் பெற்றால் ஆணாக இருந்தால் 32 வயதிற்கு பிறகும் பெண்ணாக இருந்தால் 27 வயதிற்கு பிறகும் திருமணத்தை நடத்த வேண்டும்.

    நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் கட்டப் பொருத்தம், தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும். மிகக் குறிப்பாக ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவுமான முழுமையான பரிகாரம்.

    ஒரு ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குற்றம், குறை இருந்தால் எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோவில் இல்லை; பாக்காத வரன் இல்லை. எப்படியாவது திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று கிடைத்த வரனை முடித்து விடுவோம் என்று தவறான வரவை தேர்வு செய்யக் கூடாது.

    • ஏழில் புதன் விவாகரத்திற்கு பிறகு கூட சேர்ந்து வாழ்வார்கள்.
    • புதனின் சேட்டைகளை கணிப்பது கடினம்.

    புதன் புத்திசாலித்தனத்தை குறிக்கும் காரக கிரகமாகும். ஏழில் தனித்த புதன் இருப்பவர்களுக்கு எளிதாக இளம் வயதில் திருமணம் நடக்கும். தாய்மாமன் வழி உறவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். தன் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வாழ்க்கைத் துணையை சந்தோசமாக வைத்து இருப்பார்கள்.

    வாழ்க்கை துணை இளமைப் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள. இது ஒரு அலி கிரகம் என்பதால் ஆண்களுக்கு காதலியையும் பெண்களுக்கு காதலனையும் குறிக்கும் கிரகம் என்பதால் திருமணத்திற்கு பிறகும் காதலர்களாக ஆதர்சன தம்பதியராக வாழ்வார்கள். தனுசு மற்றும் மீன லக்னமாக இருக்கும் போதும் ரிஷப லக்னததிற்கு ஏழாம் அதிபதி புதனின் நட்சத்திரமான கேட்டையில் நின்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை தரும்.

    மற்றபடி தனித்த புதன் எந்த தொந்தரவும் தராது. புதனுடன் பகை கிரகங்களான செவ்வாய், சந்திரன், ராகு, கேதுக்கள் சேரும் போது உலகப் போரே நடந்த பாதிப்பு வாழ்கையில் இருக்கும். ஊருக்காகவும் உறவுக்காவும் கணவன்-மனைவியாக நடிப்பார்கள். வாழ்க்கை துணை இருக்கும் போதே அவரை அலட்சியப்படுத்தி மற்றவரோடு சிரித்து பேசி வாழ்க்கை துணையை வெறுப்படைய செய்வார்கள்.

    அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். ஏழில் புதன் விவாகரத்திற்கு பிறகு கூட சேர்ந்து வாழ்வார்கள். புதனின் சேட்டைகளை கணிப்பது கடினம். சென்ற பிறவியில் இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றிய குற்றத்தின் பதிவால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    பரிகாரம்

    17 வாரம் புதன் கிழமை மகா விஷ்ணுவிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். 17 திருமணம் ஆகாத இளம் பெண்களுக்கு 17 வாரம் இனிப்பு உணவு தானம் தர வேண்டும். புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

    ×