search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drainage of excess water"

    • பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.

    ஏரி முழு கொள்ளளவு எட்டி கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பூஜை செய்து புடவை செலுத்தி கற்பூரம் ஏற்றி தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏரி முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×