என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug gang"

    • அடையாளம் தெரியாத வாலிபர்கள் திடீரென்று லாரிக்குள் ஏறி மணிமாறன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
    • 3 மோட்டார் சைக்கிள் வந்த 9 வாலிபர்கள் காளிமுத்துவை வழிமறித்தனர்.

    கடலூர்:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகனம் செல்வதற்கு அனுமதித்தனர்.

    இதனை தொடர்ந்து தினந்தோறும் 24 மணி நேரமும் ஏராளமான லாரி, பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆலஞ்சேரியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 34) லாரி டிரைவர். இவர் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறைக்கு எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தார் .

    நள்ளிரவு நேரத்தில் தூக்கம் வந்ததால் கடலூர் அடுத்த பெரியப்பட்டு பகுதியில் லாரியை ஓரமாக நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் திடீரென்று லாரிக்குள் ஏறி மணிமாறன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

    தூக்கத்தில் இருந்த மணிமாறனுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்தார். அக்கும்பல் செல்போன், பணம் மற்றும் பொருட்கள் கொடுக்க வேண்டும் என மணிமாறனை மிரட்டினர். அப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறிய போது திடீரென்று சரமாரியாக மணிமாறன் தலை மற்றும் உடலில் மர்ம நபர்கள் வெட்டினார்கள். இதில் மணிமாறன் அலறி துடித்து கத்திக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வாகனங்கள் வந்தவுடன் மர்மகும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள்.

    பின்னர் மற்ற வாகனத்தில் இருந்தவர்கள் மணிமாறனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ஒதவந்தான்குடியை சேர்ந்தவர் பிரபு (வயது 45). நேற்று மாலை திண்டிவனத்தில் இருந்து சீர்காழிக்கு எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது பெரியப்பட்டு பகுதியில் அவரும் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் லாரிக்குள் ஏறி பிரபுவிடம் இருந்த 5 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி கொண்டு இறங்கியபோது சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு உடனடியாக எழுந்து பார்த்தபோது அவசர அவசரமாக இறங்கி சாலையில் ஓடும்போது அவ்வழியாக வந்த மற்றொரு லாரி டிரைவர் இவர்களை பார்த்து லாரி மூலம் துரத்தினர்.

    அப்போது அதிலிருந்து ஒரு வாலிபர் தன்னிடம் இருந்து கத்தியை எடுத்து வெட்ட மீண்டும் வந்தபோது லாரி டிரைவர் விரட்டியதால் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். ஆனால் இவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து பிரபு அவசர அவசரமாக அங்கிருந்து லாரி மூலம் தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    கடலூர் அடுத்த எம். புதூரை சேர்ந்தவர் காளிமுத்து(50). இவர் தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள் வந்த 9 வாலிபர்கள் காளிமுத்துவை வழிமறித்தனர். பின்னர் அவரிடமிருந்து செல்போன், 100 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொண்டிருந்தபோது அதிலிருந்து ஒரு வாலிபர் சரமாரியாக காளிமுத்து தலை மற்றும் உடலில் வெட்டினார்.

    இதில் மயக்கம் அடைந்த காளிமுத்து சாலையில் விழுந்தார். அப்போது ஒரு வாலிபர் சதீஷ் என்ற பெயரை அழைத்து இவரை விடக்கூடாது என கூறிய நிலையில் அவ்வழியாக வந்த வாகனங்களை பார்த்து அங்கிருந்து தப்பித்து சென்றனர். 3 பேரையும் கத்தியால் வெட்டிய கும்பல் கடும் போதையில் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் மணிமாறன் மற்றும் காளிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் ஒரே இரவில் போதை ஆசாமிகள் டிரைவர்களை சரமாரியாக வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இன்றி தற்போது விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலை புதிதாக அமைக்கப்பட்டு தற்போது ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் மாலை முதல் காலை வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு போதை கும்பலை பிடித்து திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலையில் லாரி டிரைவர்களை வெட்டி பணம் பறித்த சம்பவத்தால் மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

    • பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.
    • போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் நரேந்திரன்(48). போலீஸ்காரரான இவர் திருமுல்லை வாயல் போலீஸ் நிலையத்தில் தனிப்படைபிரிவில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில நேற்று இரவு அவர் திருமுல்லை வாயல் ஏரிக்கரை அருகே சென்றார். அப்போது அங்கு 8 பேர் கும்பல் மதுகுடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை நரேந்திரன் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

    இதனால் போதை கும்பலுக்கும் போலீஸ்காரர் நரேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. நரேந்திரன் சாதாரண உடையில் இருந்ததால் அவர் போலீஸ்காரர் என்று தெரியாமல் போதை கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அருகில் கிடந்த இரும்பு கம்பியாலும் தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.

    உடனே போதை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு வந்த அவ்வழியே வந்தவர்கள் நரேந்திரன் படுகாயத்துடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். தற்போது அதே போல் மீண்டும் சம்பவம் நடந்து உள்ளது.

    இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காவலரை தாக்கிய 8 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ×