என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "duraimurugan"

    • தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
    • அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்டமாக கருத்து தெரிவித்தார்.

    தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்து பரிமாற்றம் கடுமையாக நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக எம்.பி.க்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகமற்றவர்கள் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அந்த வார்த்தையை திரும்ப பெறுவதாக கூறினார். எனினும் அவரை கண்டித்து தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் நேற்று (மார்ச் 12) தமிழ்நாடு முழுக்க கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் வேலூரில் திமுக சார்பில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

    அந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்டமாக கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம். ஆனால் வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியை திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது. தமிழனை தவறாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவான், ஜாக்கிரதை" என்று பேசியுள்ளார்.

    அமைச்சர் துரைமுருகனின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    • அரசியல் சட்டத்தின் அடையாளத்தை அழிக்கும் விதத்தில் சட்டத் திருத்தம் அமையக் கூடாது.
    • அரசியல் சட்டத்தின் அடிப்படையான கோட்பாட்டிற்கு இந்த தீர்ப்பு எதிரானது.

    திமுக பொதுச் செயலாளரும்,அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களே "செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல்  நீதிபதி ரவீந்திர பட் அவர்களின் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

    திமுகவை பொறுத்தவரை இந்த வழக்கில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தது. ஆனாலும் கேசவானந்த பாரதி, இந்திரா சாஹ்னி (மண்டல் ஆணையத் தீர்ப்பு) உள்ளிட்ட, இந்த அமர்வை விட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

    அரசியல் சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்டத்திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொன் வரிகள்.

    அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள சமத்துவத்திற்கு எதிராக எந்தச் சட்டத் திருத்தங்களும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக கவனமாக நிலைநாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள், ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறது.

    அதனால்தான் இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரபட்,  தனது தீர்ப்பின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

    நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால், மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன் என்று குறிப்பிட்டு விட்டே தனது தீர்ப்பை அவர் எழுதியுள்ளார். இறுதியில் இந்த அரசியல் சட்டத்திருத்தம் சமூகநீதியை வலுவிழக்கச் செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பைத் தகர்க்கும் விதத்தில் உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

    ஆகவே நாட்டில் உள்ள 82 விழுக்காடு பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூக நீதியைக் காப்பாற்றிட, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலை நாட்டிட, சமூகநீதிக்காகத் தொன்று தொட்டுப் போராடி வரும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.
    • நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2960 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.

    மேலும் நீர்வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் 10 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனை அடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

    அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர்வரத்து குறித்தும், உபரி நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர். அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது. இதனால் உபரி நீரை வெளியேற்றி வருகிறோம். சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்வர். பூண்டி ஏரி கரையை ஒரு அடி உயர்த்தும் திட்டம் உள்ளது.

    ஒரு காலத்தில் பூண்டி ஏரி அழகாக இருந்தது, தற்போது இல்லை; இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.

    அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராசன், நீர்வளத்துறை துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்யநாராயணா, செயற்பொறியாளரின் நேர்முக உதவியாளர் ஜி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.
    • துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது "தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள்" நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

    அதன்படி தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி-விவசாயி அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மருத்துவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.

    துணை பொதுச்செயலாளர் பொன்முடி-பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, நெசவாளர் அணி, அயலக அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக செயல்படுவார்.

    துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.

    துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.

    துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி-சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது.
    • நீங்கள் தி.மு.க.வை காப்பாற்றி இருக்கிறீர்கள்.

    சென்னை :

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    கருணாநிதி எப்படி இந்த இயக்கத்தை நடத்தினாரோ, அப்படியே இந்த இயக்கத்தை நடத்தக்கூடிய ஆற்றலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். அவர், ஆட்சியிலும், கட்சியிலும் ஆற்றுகிற பணி எல்லோரையும் வியக்க வைக்கிறது.இந்தியாவில் இப்படிபட்ட ஒரு மாநிலம் இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். இதோடு அவருக்கு பணி தீரவில்லை. இன்றைக்கு அவரை நாடு எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அவரை அகில இந்தியா நோக்குகிறது.

    அன்றைக்கு உங்கள் (மு.க.ஸ்டாலின்) தந்தை (கருணாநிதி) இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றினார். இன்றைக்கு நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். உங்களால்தான் முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

    நீங்கள் கருணாநிதியின் மகன். உங்களுக்கு அந்த வல்லமை, திராணி, தைரியம் உண்டு என்று நாடு கருதுகிறது. நீங்கள் தி.மு.க.வை காப்பாற்றி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வந்து இருக்கிறது. இதற்கு அடையாளமாக தான் பல திசைகளில் இருந்து தலைவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

    மு.க.ஸ்டாலின் அவர்களே, எனது அரசியல் அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். இந்திய நாடு ஒரு நாள் இந்த கோபாலபுரம் இல்லத்துக்கு நுழைந்து உங்களை பார்த்து நீங்கள்தான் நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டும் (பிரதமர் பதவி) என்று சொல்லும் காலம் வரும்... வரும்... வரும்...

    இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

    • இந்த மாநாடு நாளை தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    துபாய் :

    துபாயில் 9-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு நாளை (சனிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.

    இதில் பங்கேற்க சென்னையில் இருந்து துரைமுருகன் நேற்று துபாய் சென்றடைந்தார். அவரை மாநாட்டின் துணைத்தலைவர் தொழிலதிபர் பிரசிடெண்ட் அபூபக்கர் வரவேற்றார்.

    இதுகுறித்து பிரசிடெண்ட் அபூபக்கர் கூறுகையில், 'துபாயில் நடைபெறும் பொருளாதார மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும். தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க இந்த மாநாடு பெரும் துணையாக இருக்கும். 3 நாட்கள் துபாய் மாரியட் அல் ஜடாபில் நடக்கும் நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    எனவே தமிழ்நாட்டில் உள்ள வளம், அரசின் கொள்கை நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கும் முக்கியத்துவம், போன்ற பல விஷயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்' என்று தெரிவித்தார்.

    • சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
    • நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று நீர் வளத்துறை கொள்கை விளக்க குறிப்பின் மீது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    2018-ம் ஆண்டில் சென்னை ஆறுகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் அடையார் ஆற்றின் தொடக்கத்தில் இருந்து முகத்துவாரம் வரை சீரமைப்பு பணிகள் ரூ.555.46 கோடி மதிப்பீட்டில் 56 குறுகியகால உப திட்டங்களாக 7 துறைகளின் மூலம் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டது, இதில் திருநீர்மலை முதல் அடையாறு முகத்துவாரம் வரை ஏழு நிலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறைக்கு ரூ.104.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ.73.13 கோடி மதிப்பீட்டிலான 5 பணிகள் முடிவுற்றுள்ளது.

    மேலும், சென்னை மாவட்டத்தில் ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றின் முகத்துவாரம் முதல் திரு.வி.க. பாலத்தின் கீழ்புறம் வரை அகலப்படுத்தி தூர்வாருதல் பணிக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    பெருநகர சென்னை நீர் வழிகள் மற்றும் நீர் நிலை களை புதுப்பித்து மறுசீரமைக்க பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் தொடர் வடிகால்கள், அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் பெரிய வடிகால்களை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் வரதராஜபுரம், பழைய பெருங்களத்தூர், முடிச்சூர், பள்ளிக்கரணை, ராயப்பா நகர், நந்திவரம், கூடு வாஞ்சேரி, மணலி, வெள்ளி வாயில், கொளத்தூர் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு அடையாறு மற்றும் கொசத்தலை ஆறுகளை அகலப்படுத்துதல், நீர் வழித்தடங்களை மேம்படுத்துதல் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற 8 வெள்ளத்தணிப்பு பணிகளை ரூ. 250 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
    • உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார்.

    கொரோனா வைரஸ் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசும்போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சுமத்தும் வகையில் பேச முயன்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் செல்வ பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார். ஆனாலும் செல்வபெருந்தகை மீண்டும் சில வார்த்தைகள் பேச முயன்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி பேசும் போது, இவருக்கு இதே வாடிக்கையாகி போய்விட்டது. எங்களை குற்றம் சாட்டி பேசுவதுதான் இவருக்கு வேலையா என்று ஆவேசத்துடன் கூறினார். உடனே அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின் சபை அமைதியானது.

    • மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு ஓபிஎஸ் பதில்.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரை மேகதாது அணைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதே கட்சிகளின் நிலைப்பாடு.

    கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் துவங்கப் போவதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கள் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில், டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்துக்களுக்கு ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,

    'கர்நாடக துணை முதலமைச்சருக்கு பதில் அளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.'

    'தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக உள்ள திரு. டி.கே. சிவகுமார் அவர்கள் கர்நாடக சட்டமன்றப் பேரவைக்கு எட்டு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது தெரியாமல், பல ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், ஓராண்டு காலம் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று நீர்வளத் துறை அமைச்சர் சொல்வதில் இருந்து யார் விவரம் அறிந்தவர், யார் விவரம் அறியாதவர் என்பதையும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் வேண்டுமென்றே மேகதாது அணைத் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் என்பதையும் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.'

    'கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் ஏதோ விவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்ற தொனியில் மான்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேகதாது அணைத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு.'

    'தமிழ்நாட்டில் நடைபெறுவது தி.மு.க. ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்தும், சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இசையலில்லை என்றால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.

    • மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
    • கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

    சென்னை:

    மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும் என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என கர்நாடக மாநில துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    • ராமநாதபுரத்தில் டெல்டா மற்றும் தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
    • வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 24-ந்தேதி காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறி வாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பி னர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழ கத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் முழுமையாக சரி பார்க்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 அன்று திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் டெல்டா மற்றும் தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    இப்போது மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்(பி.எல்.ஏ.-2) பயிற்சி பாசறைக் கூட்டம்" வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

    மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டு உள்ள 14 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தமது மாவட்டங்களுக்குட்பட்ட 'வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை' கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூர், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நீலகிரிமாவட்டங்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம்
    • கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தருகிறோம்

    சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். நாங்கள் மறுபரிசீலனை இல்லாமல் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    கே: உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளாரே?

    ப: உச்சநீதிமன்றம் என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அதுதான் உச்சநீதிமன்றம். சென்னைக்கு இந்த பிரச்சினை ஆரம்பித்ததோ, என்றைக்கு இதே பிரச்சினைதான். அவங்க முதலில் நடுவர் மன்றத்தையே ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு நடுவர் மன்றத்துக்கு வாதாடி அதை பெற்றோம். நடுவர் மன்றத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பு கேட்டோம். அதை கொடுக்க கூடாது என்று கர்நாடகா முட்டுக்கட்டை போட்டது.

    அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் சென்று அதற்கும் தீர்வு கண்டோம். அதன் பிறகு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்றனர். அப்போதும் உச்சநீதிமன்றம் சென்றனர்.

    காவிரி நீர் பிரச்சினையில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    அதை நாங்கள் சந்தித்து தமிழ்நாடு மக்களுக்கு வேண்டிய உரிமையை பெற்றுக் கொண்டுதான் வந்துள்ளோம். இனியும் பெறுவோம்.

    கே: சேப்பாக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் மத்தியில் அமலாக்கத்துறை சோதனை நடத்துள்ளதே?

    ப: அதெல்லாம் எனக்கு தெரியாது.

    கே: இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய தமிழக முதல்-அமைச்சர் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். அங்குள்ள கர்நாடக முதல்-மந்திரியிடம் பேசினார் என்றால் சுமூகமாக முடியும் என்று சொல்கிறார்களே?

    ப: அப்படி பேசினால் குளோஸ் ஆகிவிடுவோம். பேச்சுவார்த்தை சரியில்லை என்றுதான் கோர்ட்டுக்கு சென்று இவ்வளவு தூரம் வந்துள்ளோம். மறுபடியும் பேச சென்றால் நாம் சட்டரீதியாக செல்வதை விட்டு விடுவதாக அர்த்தமாகிவிடும்.

    கே: கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுத்தால் இது முடிவுக்கு வரும் என கூறப்படுகிறதே?

    ப: எங்களை கெடுப்பதற்கு அப்படி சொல்கிறார்கள். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே கடைசி வாய்ப்பு. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு இதில் நடவடிக்கை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×