என் மலர்
நீங்கள் தேடியது "Eating"
- உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்வதும் உடலில் நல்ல செரிமானப் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது.
- கூடுதல் கலோரிகளை எரிக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது வேகமாக நடக்க வேண்டும்.
இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலமாக தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி.
தினமும் 5,000 அடிகளுக்கும் குறைவாக நடப்பது மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.
இதற்கிடையே சாப்பிட்ட பிறகு உட்காருவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒவ்வொரு உணவிற்கும் பிறகு நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நோய்களைத் தடுக்க ஒரு நாளைக்கு 100 நடைகள் (steps) நடக்க வேண்டும்.
சரியாக சாப்பிடுவது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதற்கு உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் ஆரோக்கியமும் அடங்கி உள்ளது.
ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் சாப்பிட்ட பிறகு நடக்க வேண்டும், 100 நடைகள் போதும். இது "ஷட்பாவலி" என்று அழைக்கப்படுகிறது.
"ஷட்பாவலி" என்பது ஒரு மராத்தி வார்த்தை என்று வல்லுநர்கள் விளக்குகிறார்கள். இந்த பழக்கம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது மற்றும் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உணவுக்குப் பிறகு நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
நீங்கள் செரிமான பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 100 நடைகள் நடக்க முயற்சிக்க வேண்டும்.
உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்வதும் உடலில் நல்ல செரிமானப் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது.
விறுவிறுப்பான நடைபயிற்சியை முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், உங்கள் செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.
சாப்பிட்ட பிறகு 100 நடைகள் நடப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்க உதவுகிறது.
ஒவ்வொரு உணவிற்கும் பிறகு ஒரு சிறிய நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்க, உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடக்க முயற்சிக்க வேண்டும்.
அதிக டிரைகிளிசரைடு அளவுகள் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளிட்ட பல நிலைமைகளை அதிகரிக்கலாம். இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உயர்த்தும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது டிரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கலோரிகளை எரிப்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும். நீங்கள் தினமும் போதுமான உடற்பயிற்சி செய்யவில்லை, ஆனால் உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவுக்குப் பிறகு நடக்க வேண்டும்.
கூடுதல் கலோரிகளை எரிக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது வேகமாக நடக்க வேண்டும்.
விறுவிறுப்பான நடைபயிற்சி சிறந்த வழி. எனவே, நீங்கள் எவ்வளவு விரைவாக நடக்கிறீர்களோ, அவ்வளவு கலோரிகளை எரிக்க முடியும்.
உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது செரிமானத்தை மெதுவாக்கும். இது உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். தாகமாக உணர்ந்தால் உணவுக்கு இடையில் தண்ணீர் குடிக்கலாம்.
சாப்பிட்ட உடனேயே தூங்க கூடாது. ஏனெனில் இது உடல் கொழுப்பை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. மேலும், உணவு சரியாக ஜீரணமாகாது.
சாப்பிட்ட உடனேயே நீண்ட தூரம் நடப்பது உங்களுக்கு ஆரோக்கியமற்றது மற்றும் செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கிறது.

உங்கள் செரிமான ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உணவுக்குப் பிறகு நீச்சல், பயணம் மற்றும் உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
விறுவிறுப்பான நடைபயிற்சி உங்களுக்கு நல்லது என்றாலும், சாப்பிட்ட உடனேயே வேகமாக நடக்காதீர்கள். மெதுவான வேகத்தில் தொடங்கி வேகத்தை எடுக்க வேண்டும்.
எனவே, சாப்பிட்ட பிறகு உட்காராதீர்கள். உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க உணவுக்குப் பிறகு குறைந்தது 100 நடைகள் நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
- இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை:
உணவும் மருந்தும் ஒன்றே... படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்... பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே... இதுபோன்ற பழமொழிகளை சும்மாவா சொன்னார்கள்...
சத்தான உணவு உள்பட எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடும் முறையில் ஆரோக்கியம் உள்ளது என்பது முன்னோர் வாக்கு.
காலையில் அரசனைப் போன்றும், நண்பகலில் சாதாரண மனிதனைப் போன்றும், இரவில் பிச்சைக்காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என பெரியோர் சொல்வது வழக்கம்.
காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப் பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி. இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.
சாப்பிடும் போது பேசக்கூடாது என சொல்வார்கள். சாப்பிடும்போது வெளியில் இருந்து காற்று வாய் வழியே உள்ளே செல்லும். எனவே பேசாமல் உதடுகளை மூடியபடி சாப்பிட்டால் உடல் நன்கு ஆரோக்கியம் அடையும்.
மனதில் எந்த உணர்வும் இன்றி உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிட்டால் நூறு வயது வரை வாழலாம். அப்படி இல்லையெனில் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
சாப்பிடுவது குறித்துசாஸ்திரம் சொல்வது என்ன?
இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.
ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.
குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக் கூடாது.
சாப்பிடும்போது முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு அதன்பின் நீர் அருந்தவேண்டும்.
சாப்பிடும் வேளை தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை அருந்தக் கூடாது.
இருட்டில் சாப்பிடக் கூடாது.
சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால் சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிடவேண்டும் என தெரிவிக்கிறது.

புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆனந்து. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி செவ்வந்தி (வயது 24) இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இதற்கிடையே செவ்வந்தி ஒற்றை தலைவலியால் அவதி அடைந்து வந்தார். மருந்து- மாத்திரை சாப்பிட்டும் நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று செவ்வந்திக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செவ்வந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி பேஸ்டை (விஷம்) தின்று விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த செவ்வந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை செவ்வந்தி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசி (வயது 64). இவரது மனைவி எலிசி (62). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமகளுக்கு வளைகாப்பு முடித்து தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று இரவு இன்னாசி சாப்பிட வந்துள்ளார். அப்போது எலிசி அவருக்கு தண்ணீர் மற்றும் சாப்பாடு வைத்துள்ளார். காய்கறி, குழம்பு இல்லாததால் இன்னாசி எலிசியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இன்னாசி அருகில் இருந்த பருப்பு கடையும் மத்தால் எலிசியின் தலையில் கடுமையாக தாக்கினார். வலியால் அலறி துடித்த எலிசி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து எலிசியின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்னாசியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாப்பாடு பிரச்சினையில் கணவன் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.