என் மலர்
நீங்கள் தேடியது "Electoral bonds"
- தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
- வேட்பாளர்கள் விவரங்களை வாக்காளர்கள் கேட்கும் உரிமை போன்று இதில் கோர முடியாது
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம் ஒரு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனம் வங்கி மூலம் தேர்தல் பத்திரங்களை பெறலாம். இந்த பத்திரங்களை கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக வழங்கலாம். இதை எந்தவித கட்டுப்பாடும் இன்றி அரசியல் கட்சி நிதியாக மாற்றிக்கொள்ளலாம். இந்த பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது மற்றவர்களுக்கு தெரியாது.
இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதத்தை நேற்று உச்சநீதிமன்றத்தில், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி தாக்கல் செய்துள்ளார். அதில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படாமல் எதையும் மற்றும் அனைத்தையும் அறிய பொதுவான உரிமை இருக்க முடியாது. குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் விவரங்களை வாக்காளர்கள் கேட்கும் உரிமை என உச்சநீதிமன்றம் 2020-ல் உறுதிப்படுத்தியது, கட்சி பெறும் நிதி விவரங்களை கோரும் உரிமையாக கருத முடியாது.
குறிப்பிட தகுந்த காரணங்கள் இன்றி, பொதுவாக அனைத்து விவரங்களை கேட்கும் உரிமை கிடையாது. பொதுமக்களின் உரிமை பாதிக்கப்படாத வகையில், எல்லா தரவுகளையும் வழங்க வேண்டியது அவசியம் இல்லை. நீதிமன்றத்தின் வரம்பிற்குள் இந்த விவகாரம் அடங்காது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்.
- தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த கருத்தாக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தலைமை நீதிபதி ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்சில் சஞ்ஜீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நிதிபதிகள் இடம் பிடித்திருந்தனர்.
எங்களுக்குள் ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளது. எனக்கும், நீதிபதி சஞ்சய் கண்ணாவுக்கும் இடையில் இரண்டு கருத்துகள் இருந்தன. அதன்பின் ஒரே முடிவுக்கு வரப்பட்டது. முடிவுக்கு வருவதில் சிறு வேறுபாடு இருந்தது" என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
- ரூ. 10 லட்சம் அல்லது ரூ. 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள்.
- அரசியல் கட்சிக்கு ரூ. 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும் என்று நீங்கள் கற்பனை செய்யலாம்.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் பத்திரம் செல்லாது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும்.
இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். அவர்கள் மார்ச் 31-ந்தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிக்கு செல்லும் நிதி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம்.
கருப்பு பணத்தை ஒழிப்பது என்பதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தை மீறுவது நியாயம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் கூறியதாவது:-
அரசியல் கட்சிகளுக்கும், நிதி அளிப்பவர்களுக்கும் இடையிலான பிணைப்பு குறித்து நாங்கள் அறிந்து கொள்வோம். அதேபோல், பிரதிபலன் (Quid pro quo) குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவர் கூட இதுபோன்ற மிகப்பெரிய தொகையை பிரதிபலன் இல்லாமல் வழங்க மாட்டார்கள்.
10 லட்சம் அல்லது 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள். அது கோடிக்கணக்கில் இருக்கும். எனவே அரசியல் கட்சிக்கு 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும். மேலும் அவர்கள் செயல்பாட்டில் சில சலுகைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
பிரதமர் மோடி ஊழல் எங்கே? ஊழல் எங்கே? என கேட்கிறார். இப்போது மோடி ஜி, உங்கள் கண்முன் உங்களுடைய ஊழல், இந்த அரசாங்க ஊழல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர் "அரசியல் கட்சியின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனை இந்த தீர்ப்பு பாதுகாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
- தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பு விவரங்களை வெளியிட வேண்டும்.
- தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் வழங்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தைக் கொண்டு வந்தது. ரொக்கமாக நன்கொடை அளிக்கும் நடைமுறையை மாற்றுவதற்கும், அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்கும் ஒரு தீர்வாக இந்தத் திட்டம் கருதப்பட்டது. ஆனால் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திர திட்டத்தை ரத்துசெய்து இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக்கூறிய நீதிபதிகள், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் நிறுத்தவேண்டும்
தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என உத்தரவிட்டனர்
இந்நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவற்றின் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வழங்கிய தகவல்கள் வருமாறு:
மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் விற்பனையின் மூலம் மொத்தம் ரூ.16,518.11 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பா.ஜ., ரூ.6,565 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் 2வது இடம் பிடித்து ரூ.1,547 கோடியைப் பெற்றுள்ளது.
3-ம் இடத்தில் இடத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.823 கோடியையும், 4ம் இடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.367 கோடியையும், 5ம் இடத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.231 கோடியையும் பெற்றுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலமாக வந்த நிதியில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வந்துள்ளன. மொத்த தொகையில் பா.ஜ.க. ஏறக்குறைய 60 சதவீதம் பெற்றுள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
- சமத்துவம், நியாயம் மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை தேர்தல் பத்திரம் திட்டம் மீறியது.
- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை, தேர்தலில் சமநிலை ஆகியவற்றிற்கு கிடைத்த வெற்றி.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், நன்கொடை பெற்ற விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதனால் ஒவ்வொரு கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் முதலாளிகளிடம் இருந்து எவ்வளவு பணம் நன்கொடையாக பெற்றது என்ற விவரம் மார்ச் 31-ந்தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது:-
சமத்துவம், நியாயம் மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை தேர்தல் பத்திரம் திட்டம் மீறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை, தேர்தலில் சமநிலை ஆகியவற்றிற்கு கிடைத்த வெற்றி.
தற்போது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலாளிகள் மூலம் பா.ஜனதா பெற்ற 90 சதவீத நன்கொடைகள் அம்பலமாகப் போகிறது.
யார் பணம் கொடுத்தார்கள். அவர்கள் பணம் கொடுத்தபோது, அதற்கு பிரதிபலமான கட்சி கொடுத்தது என்ன? என்பதை உலகம் தெரிந்து கொள்ள போகிறது. அரசியல் கட்சிக்கு ஏன் பணம் கொடுக்கப்பட்டது என மக்கள் கேள்வி கேட்பார்கள். அதன்பின் மக்கள் தனது சொந்த முடிவை எழுதுவார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. எஸ்.பி.ஐ. வங்கி விவரங்களை அளிக்க வேண்டும்.
- தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இணை தளத்தில் பதவி ஏற்றம் செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் மூலமாக ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுள்ள தொகை குறித்த விவரத்தை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் தனது இணைய தளத்தில் விவரத்தை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.
இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30-ந்தேதி வரை காலஅவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்துள்ளது.
ஆனால், உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரியவில்லை. இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் மூலம கட்சிகளுக்கு நிதி பெறுதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னதாக,
அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்களும், தனி நபர்களும் தேர்தல் நன்கொடை வழங்குவது வழக்கம். அதன்படி அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால், அதுபற்றி தேர்தல் கமிஷனிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் பின்பற்றப்பட்டு வந்தது. அதில் திருத்தம் செய்து, கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், தேர்தல் நிதி பத்திரத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன்படி தனிநபர்களோ, நிறுவனங்களோ ரொக்கம் மற்றும் காசோலையாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் பத்திரங்களாக நன்கொடை அளிக்கலாம்.
இந்த பத்திரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. தனிநபர்களும், நிறுவனங்களும் அந்த வங்கியில் பல்வேறு மதிப்பு கொண்ட பத்திரங்களை வாங்கி, தங்களுக்கு விருப்பப்பட்ட அரசியல் கட்சிகளிடம் அளிக்கலாம். அந்த கட்சிகள், 15 நாட்களுக்குள் அவற்றை பாரத ஸ்டேட் வங்கியில் கொடுத்து, தங்களது வங்கிக்கணக்கில் பணமாக வரவு வைக்கலாம்.
இத்திட்டத்தில், யார், எவ்வளவு நன்கொடை கொடுத்தனர் என்பது வெளியே தெரியாது.

இதனால், வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திரத் திட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் பிரமுகர் ஜெயா தாக்கூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம் உள்பட 4 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்தியில் உள்ள ஆளுங்கட்சியும், பாரத ஸ்டேட் வங்கியும் மட்டும் நன்கொடையாளர் விவரங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக அந்த மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீது கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், ஏற்கனவே பெற்ற நன்கொடைகள் மற்றும் இனிமேல் பெறப்போகும் நன்கொடைகள் பற்றிய தகவல்களை மூடி முத்திரையிட்ட உறையில் தேர்தல் கமிஷனிடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.
கடந்த அக்டோபர் மாதம் வாதங்கள் தொடங்கின. விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு இவ்வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அமர்வு சார்பில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 152 பக்கங்களிலும், நீதிபதி சஞ்சீவ் கன்னா 74 பக்கங்களிலும் தீர்ப்பு எழுதி இருந்தனர்.
இருப்பினும் இரண்டு தீர்ப்புகளும் ஒருமித்த தீர்ப்புகளாக இருந்தன. அமர்வு சார்பில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு அரசியல் கட்சி பெறும் நன்கொடை குறித்து வாக்காளர் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் அவர் தனது வாக்குரிமையை உறுதியான முறையில் செயல்படுத்த முடியும். ஆனால், தேர்தல் பத்திரத் திட்டம் அந்த நோக்கத்தை சிறிதளவு கூட பூர்த்தி செய்யவில்லை.
ஜனநாயக முறையிலான அரசு அமைக்க தேர்தல்முறையில் நேர்மை நிலவுவது முக்கியமானது. அதனால்தான் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதை அரசியல் சட்டம் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு 2 காரணங்களுக்காக நன்கொடை அளிக்கப்படுகிறது. ஒன்று, அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக. இன்னொன்று, பிரதிபலன் எதிர்பார்த்து நன்கொடை அளிப்பது.
பிரதிபலன் எதிர்பார்த்து அளிக்கும் நன்கொடைகளை அரசியல் ஆதரவு நிலைப்பாடாக கருத முடியாது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த நன்கொடை, அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.
ஆனால் அனைத்து நன்கொடைகளும் மக்கள்நலன் சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்காக கொடுக்கப்படுவது இல்லை. ஏனென்றால், நாடாளுமன்ற, சட்டசபைகளில் இடம்பெறாத கட்சிகளுக்கும் நன்கொடை அளிக்கப்படுகிறது.
தேர்தல் முறையில் வெளிப்படைத்தன்மைக்காகவும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் தேர்தல் பத்திரம் கொண்டு வந்திருப்பதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. தகவல் அறியும் உரிமையை பாதிக்காமல், கருப்பு பணத்தை ஒழிக்க மாற்று வழிகள் எத்தனையோ உள்ளன.
ஆனால் தேர்தல் பத்திர திட்டம், அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவு வழங்கும் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கும், தகவல் அறியும் உரிமைக்கும் எதிரானதாக அமைந்துள்ளது.
நன்கொடை அளித்தவரின் ரகசியத்தை பாதுகாப்பது, ரகசிய ஓட்டுமுறை போன்றது என்ற மத்திய அரசின் வாதத்தையும் ஏற்க முடியாது. ஆளுங்கட்சி, தனிநபர்களையும், நிறுவனங்களையும் நிர்பந்தம் செய்து நன்கொடை வசூலிக்க வாய்ப்புள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லையின்றி நன்கொடை அளிப்பதற்காக கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது தன்னிச்சையானது. அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு வழங்கும் சமத்துவ உரிமையை மீறும் செயல்.
இந்த காரணங்களால், தேர்தல் பத்திர திட்டம், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பு அளிக்கிறோம். அந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
தேர்தல் பத்திரத் திட்டத்துக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், கம்பெனி சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட சட்ட திருத்தங்களும் செல்லாதவை என்று அறிவிக்கிறோம்.
இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
- தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
- தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது.
புதுடெல்லி:
தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் சிறப்புவாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
மேலும், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றுள்ள தொகை குறித்த விவரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ம் தேதிக்குள் தனது இணைய தளத்தில் அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.
இதற்கிடையே, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி வேண்டுகோள் வைத்துள்ளது.
இந்நிலையில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, எஸ்.பி.ஐ. வங்கி லோகோவில் பிரதமர் மோடி தெரிவது போல் எக்ஸ் தளத்தில் எஸ்.பி.ஐ. யாரை காப்பாற்ற நினைக்கிறது என கேள்வி எழுப்பி படம் வெளியிட்டது வைரலாகி வருகிறது.
- தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி அதிரடி தீர்ப்பு.
- எஸ்பிஐ வங்கி நன்கொடையாளர்கள் விவரங்களை தேர்தல் ஆணையத்தின் வழங்க உத்தரவு.
கடந்த மாதம் 15-ந்தேதி தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. அது தொடர்பாக திருத்தப்பட்ட சட்டங்களும் செல்லாது.
எஸ்பிஐ வங்கிய உடனடியாக தேர்தல் பத்திரம் வினியோகம் பணியை நிறுத்த வேண்டும். கட்சிகளுக்கு நன்கொடையாளர்கள் பணம் அளித்துள்ள விவரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மார்ச் 31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
ஆனால், எஸ்பிஐ வங்கி அதற்கு அளிக்கப்பட்ட காலஅவகாசத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை வழங்கவில்லை. மாறாக ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. யாரை காப்பாற்றுவதற்காக என்ற சந்தேகம் கிளம்புவதாக எஸ்பிஐ-க்கு எதிராக விமர்சனம் தெரிவித்தனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் எஸ்பிஐ வங்கியின் வேண்டுகோள் மனுவை இன்று விசாரிக்கிறது.
விசாரணை முடிவில் எஸ்பிஐ வங்கிக்கு காலஅவகாசம் கொடுக்குமா? இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்புக்காக கண்டனத்தை தெரிவித்து உடனடியாக விவரங்களை அளிக்க உத்தரவிடுமா? என்பது தெரியவரும்.
- கடந்த 26 நாட்களாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
- வங்கி சீலிட்ட கவரை திறந்து தகவல்களை சேகரித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு காலஅவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.
அதற்கு உச்சநீதிமன்றம், "எங்களுடைய தீர்ப்பின்படி வெளிப்படையாக தெரிவிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். வங்கி சீலிட்ட கவரை திறந்து தகவல்களை சேகரித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அது மட்டும்தான் வேலை. கடந்த 26 நாட்களாக நீங்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், உங்கள் விண்ணப்பம் அது தொடர்பாக ஒன்றும் கூறவில்லை. நன்கொடையாளர்கள் தகவல்கள் எங்கு இருக்கிறதோ, அது அங்கேதான் இருக்கும். எங்களது உத்தரவை பின்பற்றுங்கள்" என உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ. வங்கியை கடினமாக எச்சரித்தது.
- கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள், அவர்களுக்கு இடையிலான தொடர்பு பற்றி எதுவும் கேட்கவில்லை.
- எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) பகிர வேண்டும் என்றும், அவற்றை மார்ச் 13-ந்தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையே 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி கடந்த 4-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் தகவல் தர தாமதிக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
வழக்கின் விசாரணையில், பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஆஜரான ஹரீஷ் சால்வே, எங்கள் கோர் பேங்கிங் அமைப்பில் வாங்குபவரின் பெயர் மற்றும் பத்திர எண் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது.
எனவே தகவல்களை கொடுக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். 55 செயல்முறையையும் நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும். இதனால் தேர்தல் பத்திர விவரங்கள் கொடுக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், ஹரீஷ் சால்வேயின் இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:-
தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட உத்தரவிட்டு 26 நாட்கள் ஆகி விட்டது. இந்த 26 நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட 2 நாட்கள் இருந்த நிலையில் கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தது ஏன்?
மிக எளிமையாக திரட்டக்கூடிய இந்த தகவல்களை தருவதற்கு அவகாசம் ஏன்? அதாவது 24-க்கும் குறைவான அரசியல் கட்சிகள்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று உள்ளன.
அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு கால அவகாசம் கேட்பது ஏன்? மிக எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது. பாரத ஸ்டேட் வங்கியால் செய்ய முடியாத எந்த வேலையையும் நாங்கள் சொல்லவில்லை. அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மாற்றுமாறு இப்போது கேட்பது ஏன்?
கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள், அவர்களுக்கு இடையிலான தொடர்பு பற்றி எதுவும் கேட்கவில்லை. எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த பணியை செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்று வங்கியை கேட்கவில்லை. நாங்கள் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தர விடுகிறோம். தகவல்களை ஒருங்கிணைக்க கால அவகாசம் கேட்பது சரியல்ல.
இவ்வாறு நீதிபதிகள் காட்டமான கேள்விகளையும், அறிவுறுத்தல்களையும் முன் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வாங்கி சமர்ப்பித்துள்ளது.
மேலும், பாரத ஸ்டேட் வங்கி பகிர்ந்துள்ள தகவல்களை வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அனுமதிக்க கூடாது
- தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது
பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அனுமதிக்க கூடாது எனவும், வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தக் கோரி கடிதம் மூலம் ஆதிஷ் அகர்வாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்கடிதத்தில், "இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு முழுமையான நீதியை உறுதி செய்ய தேர்தல் பத்திரங்கள் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது.
- தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வாங்கி சமர்ப்பித்துள்ளது.
வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும். அவற்றை மார்ச் 13ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"ஒரே நாளில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை வங்கியால் வழங்க முடியும் என நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதை தான் இன்று பாரத ஸ்டேட் வங்கி செய்திருக்கிறது. மார்ச் 4 ஆம் தேதி எங்களால் அந்த அவகாசத்துக்குள் தரவுகளை வழங்க முடியாது என்று அப்பட்டமாக பொய் சொன்ன SBI நிர்வாகிகள் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.