என் மலர்
நீங்கள் தேடியது "electric train"
- மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
- நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ரெயில் காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கி துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
பின்னர், கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர், இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் இயக்கப்படும் ஏ.சி. மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் ஏ.சி. பெட்டி கொண்ட மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.
- சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
ஆவடியில் இருந்து வந்த புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.
ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் 3-வது பெட்டியில் 2 ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டது. சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
மிதமான வேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
- சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வழக்கமான மின்சார ரெயில் கட்டணத்தை விட ஏ.சி. மின்சார ரெயிலில் கட்டணம் பல மடங்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் ரூ.35-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.105 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரெயில் பயணிகள் உடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்த தெற்கு ரெயில்வே நிர்வாகம், சென்னை புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளது. கட்டண நிர்ணயம் என்பது தெற்கு ரெயில்வே முடிவு செய்ய முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், புறநகர் ஏ.சி. ரெயில் இயக்கப்பட வேண்டிய நேரம் குறித்து பயணிகள் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம். பயணிகள் தங்கள் கருத்துகளை 63747 13251 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும் அறிவுறுத்தி உள்ளது.
பீக் அவர்ஸ் நேரங்களில் கூடுதல் ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- ரெயில் சேவை இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கியது.
- மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
சென்னை:
சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, கோடை காலத்தில் வெயிலால் பயணிகள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே, சாதாரண மின்சார ரெயிலுக்கு பதிலாக முழுவதுமாக ஏ.சி. பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்களை தயாரித்து பயன்படுத்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வுகளும் செய்யப்பட்டது.
பின்னர், பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏ.சி. மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏ.சி. மின்சார ரெயில் தயாரிப்பு பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.
இந்த நிலையில், சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் இன்று முதல் இயக்கப்பட்டது.
அதன்படி முதல் ரெயில் சேவை இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கியது.
இந்த ரெயில் துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
- வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலானது.
- ரெயிலில் மேற்கூரையில் பயணம் செய்தது எந்த கல்லூரி மாணவர்கள்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை:
சமூக வலைத்தளத்தில் கடந்த சில தினங்களுக்குமுன்பு, வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
அந்த வீடியோவில், கல்லூரி மாணவர்கள் சிலர் மின்சார ரெயிலின் மேற்கூரை மீது ஏறியும், பக்கவாட்டில் தொங்கியவாறும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்தது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலானது.
வீடியோ குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து, எப்போது நடந்தது? எந்த வழித்தடத்தில் நடந்தது? ரெயிலில் மேற்கூரையில் பயணம் செய்தது எந்த கல்லூரி மாணவர்கள்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை- சென்னை கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் மேற்கூரையில் ஏறி பயணம் செய்த வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் பதிவு செய்தது தெரிய வந்தது. மேலும், அந்த வீடியோவில் உள்ளவர்கள் தற்போது படிப்பை முடித்துவிட்டு வேலை பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து, எழும்பூர் ரெயில்வே போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, வீடியோவில் இருந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை இன்று ரெயில்வே போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளனர்.
- இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
- இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருத்தணிக்கும் புறநகர் ரெயில் சேவைகள் உள்ளது. இதைத்தவிர கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும் பறக்கும் ரெயில்கள் செல்கின்றன.
இந்த ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இந்த புறநகர் ரெயில்கள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக மெட்ரோ ரெயில்கள் போல முழுவதும் குளு, குளு வசதிகள் கொண்ட ஏ.சி. புறநகர் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக தானாக திறந்து மூடும் கதவு வசதியுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. ரெயில் தயாரிக்கப்பட்டது.
இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த ரெயில் தாம்பரம் ரெயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ளதால் இந்த குளு, குளு ஏ.சி ரெயில் எப்போது இயக்கப்படும் என பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரத்தில் இருந்து இந்த ஏ.சி. ரெயில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தென்னக ரெயில்வே அறிவிக்க இருக்கிறது.
மற்ற புறநகர் மின்சார ரெயில்கள் போல நாள் முழுவதும் இந்த ரெயில் இயக்கப்படாது. காலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 3.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த ஏ.சி. ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இடையில் 5 மணி நேரம் இந்த ரெயிலில் கதவு, ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகள் பராமரிப்பு செய்யப்படும்.
இந்த ரெயிலை பொறுத்தவரை கதவுகள் தானாக திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் தொழில்நுட்ப வசதி, அனைத்து பெட்டிகளிலும் சி.சி.டி.வி. கேமரா வசதிகளும் உள்ளது.
இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
இந்த ரெயில் எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை. இதில் பயணம் செய்ய ரூ.30 முதல் ரூ. 50 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. பயணிகள் மத்தியில் குளு, குளு ரெயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயும் ஏ.சி. ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
- சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை 9.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் (எண்: 42836) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பயணிகள் பாதுகாப்பு கருதி தண்டவாளங்கள் பராமரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி யார்டில் நாளை (22-ந்தேதி) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் (எண்:42831) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை 9.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் (எண்: 42836) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நாளை இரவு 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு 23-ந்தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மட்டும் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
- தண்டவாளத்தில் பெண் ஒருவர் மகனுடன் நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்த மின்சார ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினர்.
- சரியான நேரத்தில் மின்சார ரெயிலை டிரைவர் நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
தாம்பரம்:
ஊரப்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பிரேமலதா.
இவர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்வளர்ச்சித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று பிரேமலதாவின் மூத்த மகனின் பிறந்தநாள் விழாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வீட்டில் கொண்டாடினர். அப்போது பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பிரேமலதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரேமலதா மிகவும் மன வேதனையில் இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை பிரேமலதா, தனது 4 வயதான இரண்டாவது மகனை அழைத்துகொண்டு ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் அவர், மகனுடன் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கிடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் மகனுடன் நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்த மின்சார ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினர். எனினும் ரெயில் மெதுவாக சென்று தண்டவாளத்தில் நின்ற பிரேமலதா மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு ஆம்புலன்சு வர முடியாது என்பதால் பயணிகள் உதவியுடன் காயம் அடைந்த பிரேமலதாவையும், அவரது மகனையும் அதே மின்சார ரெயிலில் ஏற்றி தாம்பரம் வந்தனர்.
இதற்குள் இது பற்றி ரெயில்வே போலீசுக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் ரெயில் நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சு ஊழியர்கள் பிரேமலதாவையும் அரவது மகனையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகனின் பிறந்த நாள் கொண்டாடியதால் ஏற்பட்ட குடும்ப தகராறில் பிரேமலதா தனது மகனுடன் சேர்ந்து ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
சரியான நேரத்தில் மின்சார ரெயிலை டிரைவர் நிறுத்தியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். மின்சார ரெயிலை சாதுர்யமாக நிறுத்திய டிரைவரை பொது மக்கள் பாராட்டினர். இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று வரும் மின்சார ரெயில்களில் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும்.
- அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 பாதைகள் மட்டுமே இருக்கிறது.
பொன்னேரி:
சென்னை நகர மக்களின் போக்குவரத்துக்கு புறநகர் மின்சார ரெயில் சேவை பெரிதும் கைகொடுத்து வருகிறது. குறைந்த கட்டணம், விரைவான பயணம் என்பதால் மின்சார ரெயில் சேவையை பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை புறநகர் பகுதியில் இருந்து வரும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்துவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று வரும் மின்சார ரெயில்களில் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும். எனவே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து அத்திப்பட்டு வரை 4 ரெயில்பாதைகள் உள்ளன. ஆனால் அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 பாதைகள் மட்டுமே இருக்கிறது.
இந்த பாதையில் புறநகர் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவ தால் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது.
மேலும் சரக்கு ரெயில், விரைவு ரெயில்கள் காரணமாக பேசின் பிரிட்ஜ் மற்றும் விம்கோ நகர் இடையே குறைந்த வேகத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படு கின்றன. இதனால் கால தாமதம் ஏற்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு மற்றும் எண்ணூரில் இருந்து புற நகர் ரெயில்களில் வரும் பெரும்பாலானோர் சென்ட்ரலில் இறங்கி, தாம்பரம் அல்லது செங்கல்பட்டு பகுதியில் உள்ள பணியிடங்களுக்குச் செல்வார்கள்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் ரெயில்கள் விம்கோ நகருக்கு பின்னர் மெதுவாக இயக்கப்படுகிறது. மேலும் பேசின் பாலத்தை கடக்க சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் தற்போது பலர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரெயிலுக்கு மாறி சென்ட்ரலை விரைவாக வந்தடையும் நிலை உள்ளது.
இதற்கிடையே கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையை அதிகரிக்க அத்திப்பட்டு -கும்மிடிப்பூண்டி இடையே புதிதாக 3-வது, 4-வது ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான திட்ட அறிக்கை தயாரானதும் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரெயில் பாதை பிரச்சினை உள்ளது. இதனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் மின்சார ரெயில் சேவைகளை அதிகரிப்பது சாத்தியமில்லை. சென்னை-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், சென்னை - அத்திப்பட்டு இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே 2 ரெயில் பாதைகள் மட்டுமே உள்ளன. எனவே இந்த பகுதியில் 3-வது, 4-வது வழித்தடத்திற்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின்படி புதிய ரெயில்பாதை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
- சைதாப்பேட்டை அருகே இன்று அதிகாலை புறநகர் மின்சார ரெயிலின் பெட்டிகள் திடீரென கழன்றதால் பரபரப்பு நிலவியது.
- காலை முதல் புறநகர் மின்சார ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சென்னை:
சைதாப்பேட்டை அருகே இன்று அதிகாலை புறநகர் மின்சார ரெயிலின் 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து இன்று காலை 5.30 மணி முதல் புறநகர் மின்சார ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2 மணி நேரத்திற்கு பின் விபத்துக்குள்ளான ரெயில் மீட்கப்பட்டு ரெயில் இயக்கம் சீரானது. கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை இனி வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையான ரெயில் சேவையும் சீரானது.
- ஐ.சி.எப்.-ல் இதுவரை 21 வந்தே பாரத் ரெயில்கள் தயார் செய்யப்பட்டு ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பார்வையிடல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது, ரெயில் பெட்டிகள் தயாரிப்பின் ஆரம்பம் முதல் இறுதி கட்டப்பணிகள் வரை ரெயில்வே துறை அதிகாரிகள் நேரடியாக விளக்கினர்.
இதைத்தொடர்ந்து, ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐ.சி.எப்.-ல் இதுவரை 21 வந்தே பாரத் ரெயில்கள் தயார் செய்யப்பட்டு ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 21-வது வந்தே பாரத் ரெயில் இன்று ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயில் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிக்னல், தண்டவாளம் உள்ளிட்டவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும்போது ரெயிலின் வேகத்தை அதிகரிக்க முடியும். இப்பணியை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது. விரைவில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, ஆக்ரா - டெல்லி இடையே மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரெயில் ஓடுகிறது. தமிழ்நாட்டில் தற்போது 130 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதை 160-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயிலின் வடிவமைப்புப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிதி ஆண்டுக்குள் ஒரு ரெயிலையாவது தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளோம். படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதில், 80 ரெயில்களை ஐ.சி.எப். தயாரிக்க உள்ளது. மீதம் 120 ரெயில்கள் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள இந்திய ரெயில் பெட்டித்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. முதல் வகுப்பு ஏசி பெட்டி-1, 2-ம் வகுப்பு ஏசி பெட்டி-4, 3-ம் வகுப்பு ஏசி - 11 பெட்டிகளும் இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். ஆகஸ்டு மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரிக்க முடியுமா என்று தெரியவில்லை. எங்களுடைய குழு அதற்கான பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம்.
அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரெயில் தயாரிப்பதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்கான, ரெயில்பாதை மேம்பாடு, சிக்கனல் தொழில்நுட்ப மேம்பாடு பணிகளை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது. எனவே, அடுத்த 3 ஆண்டுகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். இதேபோல, மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கான திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
வந்தே பாரத் ரெயில் தயாரிப்புக்கு தேவையான பாகங்கள் 90 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. புறநகர் மின்சார ரெயில்கள் போன்று, 'வந்தே மெட்ரோ' ரெயில் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளோம் சென்னை மட்டுமில்லாது ஐதராபாத்திற்கும் இந்தப்பெட்டிகளை தயாரித்து அனுப்ப உள்ளோம்.
இந்த ரெயில் பெட்டிகள் தற்போதுள்ள பெட்டிகளை காட்டிலும் அகலமாக இருக்கும். 15 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் பயணம் செய்யமுடியும். வந்தே பாரத் ரெயில் விலங்குகள் மீது மோதும்போது ஏற்படும் பாதிப்பை தடுக்க ரெயிலின் முகப்பில் சில மாற்றங்களை செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ஐ.சி.எப்., தலைமை எந்திரப்பொறியாளர் பாபு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
- சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
- 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் அங்கு எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே அங்கு கூட்டத்தை குறைக்க தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக வடமாநிலங்களுக்கு ரெயில்களை இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது.
எனவே சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கீ.மீ தொலைவுக்கு 4-வது புதிய ரெயில்பாதை அமைக்க ரெயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்தது. இதற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.