என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Emmanuel Macron"

    • மேற்கத்திய துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதை புறந்தள்ளி விட முடியாது- மேக்ரான்
    • பிரான்ஸ் முடிவு தனக்குத்தானே பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதாகும்- ரஷிய மந்திரி

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் அமெரிக்கா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன.

    குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி வருகின்றன. ஆயுதங்கள் கொடுத்து பக்கபலமாக இருந்து வருகின்றன.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதை புறந்தள்ளி விட முடியாது என தெரிவித்திருந்தார். இதன்மூலம் தேவைப்பட்டால் பிரான்ஸ் உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் என்பதை சூசகமாக தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்கெய் சோய்கு, பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரி செபஸ்டியன் லெகோர்னு உடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.

    அப்போது செர்கெய் "பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஏற்கனவே அறிவித்தபடி, பிரான்ஸ் அதை பின்பற்றினால், அது பிரான்ஸ் தனக்குத்தானே பிரச்சனையை உருவாக்கிக் கொள்வதாகும்" என செபஸ்டியன் லெகோர்னுவிடம் எச்சரித்துள்ளார்.

    மேலும், "உக்ரைன் மேற்கத்திய நாடுகளில் அனுமதி இல்லாமல் எதையும் செய்வதில்லை. பிரான்ஸ் சிறப்பு துறைககள் ஈடுபடாது என நம்புகிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

    இரு நாடுகளுக்கு இடையிலான போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷியா உடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துள்ள  நிலையில் ரஷிய பாதுகாப்பு மந்திரி அரிதாக பிரான்ஸ் மந்திரியுடன் பேசியுள்ளார்.

    2022 அக்டோபர் மாதத்திற்குப் பிறகு இரு நாட்டின் பாதுகாப்பு மந்திரிகளும் முதன்முறையாக தற்போது பேசியுள்ளனர்.

    • மேக்ரான் அறிவித்தபடி வரும் ஜூன் 30 தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • இரண்டு பிரிவினருக்கிடையேயான இந்த கருத்து மோதல் வெறுப்பாக வளர்வதால் இந்த உள்நாட்டுபோர் ஏற்ப்படும்

    உலகின் புவிசார் அரசியல் போர்களுக்கிடையிலும் பதற்றங்களுக்கு இடையிலும் குழம்பிக் கிடைக்கும் நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடான பிரான்சில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சமீபத்தில் பிரான்ஸ் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அவசர தேர்தலை அறிவித்தார்.

    முன்னதாக நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரான்சில் இடதுசாரிகள் வென்றது வலதுசாரிகளுக்கு பலத்த அடியாக அமைந்த நிலையில் இந்த முடிவை மேக்ரான் எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேக்ரான் அறிவித்தபடி வரும் ஜூன் 30 தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வலதுசாரியான நேஷனல் ரேலி கட்சிக்கும் இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து பிரான்சில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இமானுவேல் இம்மானுவேல் மேக்ரான், பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கும், தீவிர இடதுசாரிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த போட்டி தேர்தல் என்பதையும் தாண்டி உள்நாட்டுப் போர் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இரண்டு பிரிவினருக்கிடையேயான இந்த கருத்து மோதல் வெறுப்பாக வளர்வதால் இந்த உள்நாட்டுபோர் ஏற்ப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்ட நிலையில் வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று போராட்டத்தில் குதித்ததை அடுத்து மேக்ரான் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது .

     

    • பிரான்ஸ் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் சுற்று இன்று நடைபெறுகிறது.
    • அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் தனது வாக்கை பதிவு செய்தார்.

    பாரீஸ்:

    பிரான்சில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என அதிபர் மேக்ரான் தெரிவித்தார். அதன்படி, பிரான்ஸ் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் சுற்று இன்று நடைபெறுகிறது.

    அங்கு 4.90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தமுள்ள 577 இடங்களுக்கான இந்த தேர்தல் இரு சுற்றுகளாக நடைபெற உள்ளது.

    வலதுசாரியான மரைன் லீ பென்னின் தேசிய பேரணி கட்சி இந்த முறை மக்களின் பெரும் ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது.

    இந்தத் தேர்தலில் தேசிய பேரணி கட்சி ஆதிக்கம் செலுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தேசிய பேரணி கட்சி முன்வைத்த வாக்குறுதிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தனது வாக்கை இன்று பதிவு செய்தார்.

    ஞாயிறன்று மாலை முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. அதன்பின்னரே, தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

    தங்கள் கட்சி 289 இடங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றால் மட்டுமே பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாக தேசிய பேரணி கட்சி தெரிவித்துள்ளது.

    • சட்டை அணியாத அவர் கோபுரத்தில் ஏறி அளவெடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவியது
    • ஒலிம்பிக்ஸ் முடிவடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஈபிள் கோபுரமும் ஒலிம்பிக்ஸ் இறுதியும்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் விறுவிறுப்பாக நடந்து வந்த ஒலிம்பிக்ஸ் திருவிழா நேற்று இரவுதான் முடிவடைந்தது. நேற்றைய இரவு விழா நிறைவு நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சிக்கு முன்னதாக சந்தேகத்துக்கிடமான வகையில் ஈபிள் கோபுரத்தில் ஏறி அதை அளவெடுத்துக் கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டை அணியாத அவர் கோபுரத்தில் ஏறி அளவெடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில் இது போலீசார் கவனத்துக்கு வந்தததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

     

    வெளிச்சத்துக்கு வராத சதி 

    முன்னதாக ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவின்போது மெட்ரோ வழித்தடங்களைத் துண்டித்து மர்ம நபர்கள் போக்குவரத்தை நிறுத்த முயன்றனர்.அதன்பின் நெட்ஒர்க் கேபிள்களை துண்டித்து தொலைத்தொடர்பு சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினார். பிரான்சில் சமீபத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்து இடது முன்னணியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற அசாதாரண சூழ்நிலை எழுந்தது.

     

    பிரான்ஸ் அரசியலில்  அடுத்தது என்ன? 

    ஆனால் ஒலிம்பிக்ஸை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோன் முடிவு செய்தார். பிரதமர் கேபிரியல் அட்டல் கொடுத்த ராஜினாமா கடிதத்தையும் நிராகரித்தார். இந்நிலையில் தற்போது ஒலிம்பிக்ஸ் முடிவடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமைய உள்ள புதிய அரசின் நிலைப்பாடும், ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களில் அதன் தாக்கமும் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

     

    • அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம்
    • நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும்.

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தியும், பாவெல் துரோவின் கைதை கண்டித்தும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

     

    பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்டவையும் சிலரால் தவறாக பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஆனால் அதற்காக மார்க் ஸுகேர்பேர்கையோ எலான் மஸ்க்கையோ யாரும் கைது செய்யப் போவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் ரஷியர் என்ற காரணத்தால் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர்.

     

    இந்நிலையில் பாவெல் துரோவின் கைது அரசியல் ரீதியிலானது அல்ல என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'பாவெல் துரோவின் கைது குறித்த தவறான தகவல்கள் இணையத்தில் பரவுவதை நான் கவனித்தேன், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிப்பதில் பிரான்ஸ் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி நீதித்துறையின் கையில் தற்போது உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிபதிகள் தான் முடிவெடுக்க முடியும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

    • செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது.
    • இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும்.

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    இந்நிலையில் இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்ட விசாரணையை மத்திய அரசு தொடங்கிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் டெலிகிராம் ஈடுபடுவதை அமைச்சகங்கள் குறிப்பாக கவனித்து வருவதாக ஒரு அதிகாரி தெரிவித்திருந்தார். இதுவரை, டெலிகிராம் விசாரணை குறித்து மத்திய அரசு சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

    • பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு அதிபர் மேக்ரான் நியமித்தார்.
    • பல்வேறு பதவிகளை வகித்துள்ள பார்னியர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராக இருந்துள்ளார்.

    பாரீஸ்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் மைக்கேல் பார்னியர் (73). இவர் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

    பல்வேறு பிரெஞ்சு அரசாங்கங்களில் பதவிகளை வகித்த இவர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில், பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார் என பிரதமர் இல்ல அதிகாரி தெரிவித்தார்.

    இதன்மூலம் பிரான்சின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை மைக்கேல் பார்னியர் பெறுகிறார்.

    • இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தி உள்ளது.
    • மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் என்றார்.

    டெல் அவிவ்:

    பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நோயல் பாரட் 4 நாள் அரசுமுறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். நாளை அவர் இஸ்ரேல் சென்று தனது பயணத்தை முடிக்க உள்ளார்.

    இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேல் காசாமீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம். போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், அதிபர் மேக்ரானும், மற்ற மேற்கத்திய தலைவர்களும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஈரான் அதன் பினாமிகள் மீது ஆயுதத் தடையை விதிக்கிறதா? நிச்சயமாக இல்லை.

    பயங்கரவாதத்தின் இந்த அச்சு ஒன்றாக நிற்கிறது. ஆனால் இந்த பயங்கரவாத அச்சை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல்மீது ஆயுதத் தடை விதிக்கவேண்டும். என்ன அவமானம்? அவர்களின் ஆதரவு இருந்தாலும் சரி, அல்லது இல்லாவிட்டாலும் சரி, இஸ்ரேல் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

    • ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்.
    • இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.

    தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், ரட்டன் டாடாவின் மறைவு குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. இந்தியா மற்றும் பிரான்சில், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வையால் தொழில்கள் மேம்பட்டன.

    அதையும் தாண்டி, அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் ரத்தன் டாடா நினைவுகூறப்படுவார்.

    அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
    • அதிபர் இமானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

    பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரான்ஸ் அரசு கவிந்தது.

    3 மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற பார்னியேர் இதனை தொடர்ந்து தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    சமூகப் பாதுகாப்பு நிதி மசோதாவை சிறப்பு அதிகாரம் மூலம் அதிபர் மேக்ரான் நிறைவேற்ற முயன்றதால் அரசு கவிழ்க்கப்பட்டது.

    பிரான்ஸ் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    • ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
    • இவை என்னை சிரிக்க செய்தன.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி வருகிறார். மேலும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் உருவாக்கிய போலி வீடியோ ஒன்றில் 1980-க்களில் பிரபலமாக "வோயேஜ் வோயேஜ்" பாடலுக்கு அவரே நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டிய மேக்ரான் "வீடியோக்கள் அருமையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை மிக அழகாக உள்ளன. இவை என்னை சிரிக்க செய்தன," என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டை ஊக்குவிக்கும் வகையில், மேக்ரான் இந்த வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு இந்தியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது.

    இது தொடர்பாக அதிபர் மேக்ரானின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிக பார்வையாளர்களை பெற்றதோடு, அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. எனினும், சிலர் அதிபர் மேக்ரானின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.

    • அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.
    • அதிபர் மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பாரிஸ்-இல் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க சென்றிருக்கும் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டியணைத்து வரவேற்றார். இதன்பிறகு நடந்த இரவு விருந்தில் பிரான்ஸ்-இல் உள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.

    பிரான்ஸ்-இல் அதிபர் மேக்ரானை சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ""எனது நண்பர் அதிபர் மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி பாரிசில் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் உரையாடுகிறார்" என்று தெரிவித்துள்ளது.

    இரு நாடுகள் சுற்றுப் பயணமாக முதலில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்துபேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    பாரிசில் AI உச்சி மாநாட்டிற்கு இணை தலைமை தாங்கும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். பிறகு வணிகத் தலைவர்களுடன் உரையாற்ற உள்ளார்.

    ×