என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Exhibitions"

    • கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு.
    • திருவள்ளுவர் தொடர்பான கண்காட்சிகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    கன்னியாகுமரி கடலில் உள்ள இரண்டு பாறை களில் ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. மற்ெறாரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    1.1.2000-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் தனித்துவமான சிறப்பை பெற்று உள்ளது.

    கன்னியாகுமரி கடல் பாறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு தற்போது 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் திருவள்ளுவர் தொடர்பான கண்காட்சிகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


    மேலும் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் 97 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம் உள்ள கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அந்த பாலம் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அந்த கண்ணாடி கூண்டு பாலத்தை வருகிற 30-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    இதையொட்டி தமிழ கத்தின் பல பகுதிகளிலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா களை கட்டி உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தில் அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அந்த கண்காட்சியில் திருவள்ளுவரின் சிறப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. மாணவ-மாணவிகள் வரைந்த திருவள்ளுவரின் பல்வேறு வகையான படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு மாணவர் வரைந்த படம் திடீரென சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அந்த திருவள்ளுவர் படத்தை அந்த மாணவர் காவி உடையுடன் வரைந்து இருந்தார். திருவள்ளுவர் படத்துக்கு காவி நிறம் பூசப்பட்டு இருப்பது சரியானது அல்ல என்று கண்காட்சிக்கு வந்திருந்த பலரும் விமர்சித்தனர்.

    கடந்த ஆண்டு காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை கவர்னர் ஆர்.என்.ரவி பயன்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அதே போன்று காவி உடையில் திருவள்ளுவர் படம் இருந்ததால் கண்காட்சியில் சற்று சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த திருவள்ளுவர் படம் கண்காட்சி அரங்கில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டது.

    இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐயன் திருவள்ளுவர் சிலை 25 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் கலைஞரால் 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வைக்கப்பட்டது.

    25 ஆண்டுகள் நிறைவடைந்து வெள்ளி விழா கொண்டாட்டமாக மட்டுமின்றி நம் பள்ளி பிள்ளைகளுக்கு ஓவியப் போட்டியாக இருந்தாலும் சரி, அதை சார்ந்துள்ள பல்வேறு ஒப்புவிப்பு போட்டியாக இருந்தாலும் இதுபோன்ற போட்டிகளை நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

    அது மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட நூல கங்களிலும் இது போன்று வள்ளுவர் புத்தக கண்காட்சி ஓவிய கண்காட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நூலகத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக வள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு மாலை மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

    திருவள்ளுவருக்கு மரியாதை என்று சொல்கிற போது அனைவருக்கும் பொதுமறையான ஒன்று. அந்த விதத்தில் பெருமை கொள்கின்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.

    மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரையும் தனித் திறமையை வளர்த்தெடுக்கும் விதமாக தேர்ந்தெடுத்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம்.

    இதில் தேர்வு செய்யப்படு கிற மாணவ செல்வங் களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறோம்.

    கேள்வி:- பள்ளிக் கல்வி துறைக்கு ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவேண்டியது இன்னும் வராமல் இருக்கிறதே. நிதி பற்றி பேச மறுப்பதற்கு என்ன காரணம்?

    பதில்:- நிதி பற்றி பேச ஒன்றிய அரசுதான் மறுக்கிறார்கள். சம்பளத்துக்கும் இண்டர்நெட்டுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இண்டர்நெட்டுக்கு பாக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கும் அவர்களுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. ஒரு அரசாங்கம் நிலுவை வைக்குமா?

    கேள்வி:- மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால்தான் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்திருக்கிறார்களா?

    பதில்:- இதுபற்றி மத்திய மந்திரி கூறும்போது அது மாதிரிதான் சொல்கிறார். அதனால்தான் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறோம்.

    கேள்வி:- திருவள்ளுவர் ஓவியத்தை காவி நிறத்தில் வரைந்து வைத்திருந்தது குறித்து?

    பதில்:- ஓவியம் வரைந்த அந்த பிள்ளையிடம் சொல்லி விட்டோம். இம்மாதிரி வரையக் கூடாது என்று சொல்லி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சியும், இலக்கிய விழாவும் நடத்த வேண்டும்.
    • புத்தக கண்காட்சியில் இலக்கிய அரங்கம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை, சிந்தனை அரங்கங்கள் நடைபெறவுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் புத்தக திருவிழா தொடங்கியது. கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா வரவேற்றாா். இந்த புத்தகத் திருவிழாவை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோரின் முன்னிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:- சென்னையில் மட்டும் பபாசி புத்தகக் கண்காட்சி நடைபெற்றால் போதாது. தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சியும், இலக்கிய விழாவும் நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டு, ரூ.5.60 கோடியும் ஒதுக்கியுள்ளாா்.

    நாள்தோறும் காலை 10 மணிக்குத் தொடங்கும் புத்தகக் கண்காட்சியில் இலக்கிய அரங்கம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை, சிந்தனை அரங்கங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கண்காட்சிக்காகப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாசிப்பு பழக்கம் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. எனவே, புத்தக வாசிப்பை குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன் , டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர்கள் சண் .ராமநாதன் (தஞ்சை), சரவணன் (கும்பகோணம்), துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து, பபாசி தலைவர் வயிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×