என் மலர்
நீங்கள் தேடியது "fake passport"
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த டிராவல்ஸ் அதிபர் உள்பட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். #FakePassport #Aarrest
சென்னை:
சென்னையில் பெரிய அளவில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் ஒன்று நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் போலி பாஸ்போர்ட் கும்பல் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. அங்கு நடத்திய சோதனையில் 80 இந்திய போலி பாஸ்போர்ட்களும், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும் போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப், ஸ்கேனிங் மெஷின், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளையும், போலி முத்திரைகள் உள்ளிட்டவைகளையும் போலீசார் கைப்பற்றினர். போலி இந்திய விசாவும், ரூ.85 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
சென்னை பெருங்குடியை சேர்ந்த வீரகுமார் (வயது 47), அவரது தம்பி எழும்பூரை சேர்ந்த பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (45), செனாய்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (40), செங்குன்றத்தை சேர்ந்த சரவணன் (43), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (50), அமைந்தகரையை சேர்ந்த உமர் உசேன் (47), சூளைமேடு நெடுஞ்சாலையை சேர்ந்த அம்ஜத்குமார் (36), தியாகராயநகர் கிரியப்பா சாலையை சேர்ந்த சக்திவேலு (47), கோடம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (40), சாலிகிராமத்தை சேர்ந்த குணாளன் (48), அய்யப்பன்தாங்கலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47).
டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரகுமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர். அந்த கட்சி சார்பில் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தான் போலி பாஸ்போர்ட் கும்பலின் தலைவனாக செயல்பட்டு உள்ளார்.
பழைய பாஸ்போர்ட்களை வாங்கி அதில் உள்ள புகைப்படத்தை நீக்கிவிட்டு, புதிதாக பாஸ்போர்ட் கேட்பவரின் புகைப்படத்தை அதில் ஒட்டி, போலி பாஸ்போர்ட்டை தயாரித்து உள்ளனர். இவர்களுக்கு உதவியாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு விமான நிலைய ஊழியர்களும் செயல்பட்டு உள்ளனர்.
சென்னையில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இவர்கள் போலி பாஸ்போர்ட்களை தயாரித்து கொடுத்து உள்ளனர். ஒரு பாஸ்போர்ட்க்கு ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளனர். இவர்களை பற்றி தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். #FakePassport #Aarrest #Tamilnews
சென்னையில் பெரிய அளவில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் ஒன்று நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் போலி பாஸ்போர்ட் கும்பல் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. அங்கு நடத்திய சோதனையில் 80 இந்திய போலி பாஸ்போர்ட்களும், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும் போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப், ஸ்கேனிங் மெஷின், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளையும், போலி முத்திரைகள் உள்ளிட்டவைகளையும் போலீசார் கைப்பற்றினர். போலி இந்திய விசாவும், ரூ.85 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
சென்னை பெருங்குடியை சேர்ந்த வீரகுமார் (வயது 47), அவரது தம்பி எழும்பூரை சேர்ந்த பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (45), செனாய்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (40), செங்குன்றத்தை சேர்ந்த சரவணன் (43), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (50), அமைந்தகரையை சேர்ந்த உமர் உசேன் (47), சூளைமேடு நெடுஞ்சாலையை சேர்ந்த அம்ஜத்குமார் (36), தியாகராயநகர் கிரியப்பா சாலையை சேர்ந்த சக்திவேலு (47), கோடம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (40), சாலிகிராமத்தை சேர்ந்த குணாளன் (48), அய்யப்பன்தாங்கலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47).
டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரகுமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர். அந்த கட்சி சார்பில் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தான் போலி பாஸ்போர்ட் கும்பலின் தலைவனாக செயல்பட்டு உள்ளார்.
பழைய பாஸ்போர்ட்களை வாங்கி அதில் உள்ள புகைப்படத்தை நீக்கிவிட்டு, புதிதாக பாஸ்போர்ட் கேட்பவரின் புகைப்படத்தை அதில் ஒட்டி, போலி பாஸ்போர்ட்டை தயாரித்து உள்ளனர். இவர்களுக்கு உதவியாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு விமான நிலைய ஊழியர்களும் செயல்பட்டு உள்ளனர்.
சென்னையில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இவர்கள் போலி பாஸ்போர்ட்களை தயாரித்து கொடுத்து உள்ளனர். ஒரு பாஸ்போர்ட்க்கு ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளனர். இவர்களை பற்றி தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். #FakePassport #Aarrest #Tamilnews
ராமநாதபுரத்தில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி போலி பாஸ்போர்ட் வாங்கி கொடுத்து ரூ.90 ஆயிரம் மோசடி செய்த கணன், மனைவி மீது வாலிபர் புகார் அளித்துள்ளார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 53). இவர் திருவாடானை கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் வர்ணசிங் (24). இவர் வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு செல்ல விரும்பினார். அதைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் பனைக்குளத்தைச் சேர்ந்த ருதுமான்அலியை சந்தித்தார். அவர் சவுதிஅரேபியாவில் வேலை வாங்கித் தருகிறேன், அதற்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வாங்கினார்.
அதன்பின்னர் ருதுமான் அலி மனைவி பாத்து முத்துவிடம் வர்ணசிங் ரூ. 40 ஆயிரம் கொடுத்தார். ரூ. 90 ஆயிரத்தை பெற்றுக் கொண்ட கணவனும், மனைவியும் வர்ணசிங்கிடம் பாஸ்போர்ட் ஒன்றை வழங்கினார். அது போலி பாஸ்போர்ட் என்று தெரிய வரவே, பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். அதற்கு அவரை கணவனும், மனைவியும் சேர்ந்து மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 53). இவர் திருவாடானை கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் வர்ணசிங் (24). இவர் வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு செல்ல விரும்பினார். அதைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் பனைக்குளத்தைச் சேர்ந்த ருதுமான்அலியை சந்தித்தார். அவர் சவுதிஅரேபியாவில் வேலை வாங்கித் தருகிறேன், அதற்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வாங்கினார்.
அதன்பின்னர் ருதுமான் அலி மனைவி பாத்து முத்துவிடம் வர்ணசிங் ரூ. 40 ஆயிரம் கொடுத்தார். ரூ. 90 ஆயிரத்தை பெற்றுக் கொண்ட கணவனும், மனைவியும் வர்ணசிங்கிடம் பாஸ்போர்ட் ஒன்றை வழங்கினார். அது போலி பாஸ்போர்ட் என்று தெரிய வரவே, பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். அதற்கு அவரை கணவனும், மனைவியும் சேர்ந்து மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இந்திய பாஸ்போர்ட்டுகளை போலியாக தயாரித்து வெளிநாட்டினருக்கு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து கைது செய்து வருகிறார்கள். கடந்த 7.5.18 அன்று பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானத்தில் சென்னை வந்த தேவராஜ் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேனியைச் சேர்ந்த அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து அசோக்குமார் என்பவர் பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல கடந்த 7-ந் தேதி அன்று மதிவாணன் (வயது 58) என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துருக்கி நாட்டிற்கு செல்ல விமான நிலையம் வந்த போது மதிவாணனிடம் 5 போலி பாஸ்போர்ட்டுகள் இருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதிவாணனையும் சிறைக்கு அனுப்பினார்கள். அவர் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்ட தேவராஜ், மதிவாணன் ஆகியோருக்கு பின்னணியில் ஒரு போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல் செயல்படுவது தெரிய வந்தது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தனபால் (55), கவிஞர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த முனியாண்டி (52), மயிலாப்பூரைச் சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோர் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.
இவர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டை போலியாக தயாரித்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அது போல் 5 போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து துருக்கியில் வசிப்பவர்களுக்கு சப்ளை செய்ய மதிவாணன் மூலம் கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. இந்த போலி பாஸ்போர்ட்டுகளை வைத்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு உதவி செய்து வந்துள்ளனர். துருக்கியில் வசிக்கும் இலங்கை மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்த போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து கொடுத்தனுப்பியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், போலி பாஸ்போர்ட் கும்பலைச் சேர்ந்த தனபால், முனியாண்டி, கார்த்திக் ஆகியோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 போலி பாஸ்போர்ட்டுகள், ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய பாஸ்போர்ட்டுகளை போலியாக தயாரித்து வெளிநாட்டினருக்கு விற்பனை செய்த இந்த கும்பல் பற்றி தொடர்ந்து தீவிர விசாரணை நடக்கிறது. #tamilnews
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து கைது செய்து வருகிறார்கள். கடந்த 7.5.18 அன்று பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானத்தில் சென்னை வந்த தேவராஜ் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேனியைச் சேர்ந்த அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து அசோக்குமார் என்பவர் பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல கடந்த 7-ந் தேதி அன்று மதிவாணன் (வயது 58) என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துருக்கி நாட்டிற்கு செல்ல விமான நிலையம் வந்த போது மதிவாணனிடம் 5 போலி பாஸ்போர்ட்டுகள் இருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதிவாணனையும் சிறைக்கு அனுப்பினார்கள். அவர் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்ட தேவராஜ், மதிவாணன் ஆகியோருக்கு பின்னணியில் ஒரு போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல் செயல்படுவது தெரிய வந்தது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தனபால் (55), கவிஞர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த முனியாண்டி (52), மயிலாப்பூரைச் சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோர் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.
இவர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டை போலியாக தயாரித்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அது போல் 5 போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து துருக்கியில் வசிப்பவர்களுக்கு சப்ளை செய்ய மதிவாணன் மூலம் கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. இந்த போலி பாஸ்போர்ட்டுகளை வைத்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு உதவி செய்து வந்துள்ளனர். துருக்கியில் வசிக்கும் இலங்கை மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்த போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து கொடுத்தனுப்பியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், போலி பாஸ்போர்ட் கும்பலைச் சேர்ந்த தனபால், முனியாண்டி, கார்த்திக் ஆகியோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 போலி பாஸ்போர்ட்டுகள், ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய பாஸ்போர்ட்டுகளை போலியாக தயாரித்து வெளிநாட்டினருக்கு விற்பனை செய்த இந்த கும்பல் பற்றி தொடர்ந்து தீவிர விசாரணை நடக்கிறது. #tamilnews
சென்னை விமான நிலையத்தில் 12 போலி பாஸ்போர்ட்டு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து கத்தாருக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த மணிவண்ணன் (53). என்பவர் பாஸ்போர்ட்டை எடுத்த போது அவரது சட்டைப்பையில் இருந்து மேலும் 2 பாஸ்போர்ட்டுகள் கீழே விழுந்தன.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த கைப்பையில் மேலும் 10 பாஸ்போர்ட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் போலி என தெரிய வந்தது. எனவே இவருக்கும் வெளிநாடுகளில் இருக்கும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் இவர் ஒப்படைக்கப்பட்டார். #Tamilnews
சென்னையில் இருந்து கத்தாருக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த மணிவண்ணன் (53). என்பவர் பாஸ்போர்ட்டை எடுத்த போது அவரது சட்டைப்பையில் இருந்து மேலும் 2 பாஸ்போர்ட்டுகள் கீழே விழுந்தன.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த கைப்பையில் மேலும் 10 பாஸ்போர்ட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் போலி என தெரிய வந்தது. எனவே இவருக்கும் வெளிநாடுகளில் இருக்கும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் இவர் ஒப்படைக்கப்பட்டார். #Tamilnews