என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake soft drinks"

    • பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
    • தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் கடந்த 20-ந் தேதி வழக்கம்போல் பள்ளி முடிவடைந்த நிலையில், பள்ளியைவிட்டு வெளியேறிய 10-ம் வகுப்பு மாணவர்கள் 8 பேர், பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.

    பின்னர் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று உள்ளனர். அடுத்த நாள் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர், அந்த 8 மாண வர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தது குறித்து சந்தேகமடைந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, 8 மாணவர்களுக்கும் உடல் நிலை சரியில்லை என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்து உள்ளனர்.

    அப்போதுதான் மாணவர்கள் அன்று மாலை குளிர்பானம் குடித்ததாக வும், அதன்பிறகு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட தாகவும் கூறியுள்ளனர்.

    இதில் 8 மணாவர்க ளுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்த பின்பு 5 மாணவர்கள் உடல் நலன் பெற்று வீடு திரும்பிய நிலையில், இரு மாணவர்கள் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

    இந்நிலையில் பள்ளிக்கு வந்த சிறப்பு மருத்துவக்குழு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பரிசோதித்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.

    விரைவில் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் குளிர்பானத்தை அருந்தி விட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களது பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, பள்ளியை விட்டு வெளியே சென்ற மாணவர்கள் குடித்த குளிர்பானத்தால்தான் உடல் உபாதைக்கு உள்ளாகி உள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாண வர்களை ஆசியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் இணைந்து கண்காணித்து வருகிறோம். பொதுத்தேர்வுக்கு தயாராகி விடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும் காலாவதியான குளிர்பானம் குறித்து கேட்டதற்கு, காலாவதியான குளிர்பானம் என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் தான் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • தமிழகம்‌ முழுவதும்‌ போலி மற்றும்‌ காலாவதியான குடிநீர்‌, குளிர்பானம்‌ விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்‌ பல்வேறு பகுதிகளிலும்‌ ஆய்வு செய்து வருகின்றனர்‌.
    • அதன்படி சேலம்‌ பழைய பஸ் நிலையம், புதிய பேருந்து நிலைய கடைகளில்‌, காலாவதி குளிர்‌பானங்கள்‌ விற்பனை செய்‌யப் படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்‌ கண்காணித்து வருகின்றனர்‌.

    சேலம்:

    கோடை காலம் தொடங்கியதை அடுத்து, தமிழகம் முழுவதும் போலி மற்றும் காலாவதியான குடிநீர், குளிர்பானம் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கண்காணிப்பு

    அதன்படி சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பேருந்து நிலைய கடைகளில், காலாவதி குளிர்பானங்கள் விற்பனை செய்யப் படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதால் காலா வதியான குளிர்பா னங்களை கொடுத்தாலும், கவனிக்காமல் குடித்து விட்டு சென்று விடுவார்கள் என்ற எண்ணம் பெரும்பாலான கடைக்காரர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, சுகாதார அலுவலர்கள் முதலில் பேருந்து நிலைய கடைகளை குறி வைத்து களம் இறங்கியுள்ளனர். குடிநீர் பாட்டில் வாங்கும்போது ஐஎஸ்ஐ முத்திரை, அதன்மேல் பகுதியில் ஐஎஸ் எண், முத்திரைக்கு கீழ் பகுதியில் சிஎம்எல் எண்கள் இருக்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி விவரங்களை பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும்.

    கோடை சீசனில், கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள்தான் மிகவும் அச்சுறுத்தக்கூடியது. கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயு மூலம் மா, வாழை போன்றவை ½ மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்கப்படுகிறது. அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில், வியாபாரிகள் பலர் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

    செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம், நரம்பு மண்டலம், கல்லீரல், குடல், இரைப்பை பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் உட்கொண்டால் அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஓவ்வாமை ஏற்படலாம்.

    எனவே செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பொதுமக்கள் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×