என் மலர்
நீங்கள் தேடியது "Farmers are distressed"
- தக்காளியை பதப்படுத்தி இருப்பு வைக்க போதிய வசதி இல்லை. அறிவிப்பு வெளியிடப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில வாரங்க ளாகவே தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 1 கிலோ ரூ.10க்கும் கீழ் சென்றதால் விவசாயிகளே வாகனங்களில் வைத்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம், அம்பி ளிக்கை, இடையகோட்டை, வடகாடு, கேதையறும்பு, விருப்பாச்சி, தங்கச்சி யம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்ய ப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படு கிறது.
பின்னர் நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்க ளுக்கும் கேரள போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடந்த 1 மாதமாகவே மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.70க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
1 கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். தக்காளியை பதப்படுத்தி இருப்பு வைக்க போதிய வசதி இல்லை என்றும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளது.
- விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். இப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்திருந்தனர்.
விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு இந்தாண்டு போதிய மழை பெய்ததால் நெற்பயிர்கள் நல்ல மகசூலை எட்டியது. இந்நிலையில் சமீபத்தில் பருவம் தவறி காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளது.
மேலும் சாய்ந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி முளைக்க தொடங்கியுள்ளது. ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் திடீரென பெய்த பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முற்றிலும் சாய்ந்து சேதமாகியுள்ளது.
சாய்ந்த கதிர்கள் சுமார் 90 சதவீதம் சேதமடைத்துள்ளதால், இனி அதனை அறுவடை செய்து எந்த பயனும் இல்லை. எனவே அரசு உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.