search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father murdered case"

    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் ஏழுகிணறு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.
    • ரத்த வெள்ளத்தில் தந்தை கிடந்ததை வீடியோ எடுத்து ரோகித் தனது மாமாவுக்கு அனுப்பி உள்ளார்.

    சென்னை ஏழுகிணறு பகுதியில் தந்தையை மகன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் ஏழுகிணறு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெகதீஷை அவரது மகன் ரோகித் இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் தந்தை கிடந்ததை வீடியோ எடுத்து ரோகித் தனது மாமாவுக்கு அனுப்பி உள்ளார்.

    இதையடுத்து தந்தையை கொலை செய்த வழக்கில் ரோகித்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனது தாயை தந்தை அடித்துக் கொடுமைப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த ரோகித் அவரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருவாரூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கலைமதி உத்தரவிட்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கொரடாச்சேரி பெருமாளகரம் பகுதியில் வசித்துவந்தவர் முருகையன் (65). இவரது மகன் சசிக்குமார் (34). முருகையன் வீட்டின் கொல்லை புறத்தில் இருந்த மரங்களின் கிளைகள் பக்கத்து வீட்டில் படர்ந்திருந்ததால் அதனை வெட்டிவிடுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் முருகையன் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவரது மகன் சசிக்குமார் மரத்தின் அனைத்து கிளைகளையும் வெட்டிவிட்டதாக கூறப்படுகிறது. முருகையன் மாலையில் வீடு திரும்பியபோது இதுகுறித்து சசிக்குமாரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சசிக்குமார் மண் வெட்டியால் தந்தை முருகையனை சரமாரியாக தாக்கியதில் பலத்த காயமடைந்த முருகையன் சம்பவயிடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தனர்.

    இதுகுறித்த வழக்கு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதி விசாரணையின் போது சசிக்குமாருக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ரூ ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கலைமதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜாமீனில் வந்திருந்த சசிக்குமாரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


    ×