என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fell and died"

    • சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தேங்காய் போடுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்த வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (36).

    இவர் சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தேங்காய் போடுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது கால் தவறி மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வர்ஷலா தலை சுற்று ஏற்பட்டு மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே மயங்கி விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அடுத்த மெக்கானிக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வர்ஷலா (58).

    உடல்நலம் சரியில்லாததால் வர்ஷலாவை அவரது இளைய மகன் மோட்டார்சை க்கிளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தொட்டம்பாளையம் அருகே சென்றபோது திடீரென வர்ஷலா தலை சுற்று ஏற்பட்டு மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே மயங்கி விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் சத்திய மங்கலம் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்கா க கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அங்கு சிகிச்சை ப லனின்றி வர்ஷலா பரிதா பமாக இறந்தார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×