என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flagiyetham"

    • கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடந்தது.
    • தீபாரதனை காட்டப்பட்டது.

    மதுரை

    மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரம் பூக்களால் அலங்கரிக் கப்பட்டது. காலை 9 மணியளவில் சுவாமி-அம்மாள் கொடிமரம் முன்பு எழுந்தருள பட்டர்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    அதனை தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வருகிறார். வருகிற 8-ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் தினமும் இரவு சுவாமி பல்வேறு வாக னங்களில் எழுந்தருளுகிறார். வருகிற 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது.

    5-ந் தேதி கோவில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றங்கரையில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 6-ந் தேதி காலை மீண்டும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு திரும்புகிறார்.

    8-ந் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    • கள்ளழகர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • வருகிற 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.



    சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள். 

     அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங் கியது. அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப் பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.30 மணிக்கு ஏற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி -பூமிதேவி, சமேத கள்ளழகர் என்கிற சுந்தர ராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து நாளை (25-ந்தேதி) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். விழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் அன்னம், அனுமார், கருடன், தங்க பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    30-ந்தேதி இரவு புஷ்ப சப்பரமும், 31-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடை பெறும். ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி (செவ்வாய்கிழமை) அதிகாலை 6 மணிக்கு மேல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு பூப்பல்லக்கும், 2-ந்தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3-ந் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


    • ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.
    • 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக அதிகாலையில் உற்சவர் சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.

    அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

    இதையொட்டி கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    வருகிற பிப்ரவரி 6-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருக்கும் மிதவை தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலிப்பார்.

    ×