search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flying object"

    • ஏவுகணை சோதனை நடத்தும் பகுதிகளுக்கு அருகே, மலாக்கா ஜலசந்திக்கு அருகில் மர்ம பொருள் பறந்துள்ளது
    • பொதுமக்கள் பலரும் அதை போட்டாவோக எடுத்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    வானத்தில் பறக்கும் மர்ம பொருட்கள் உலகம் முழுவதும் பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளப்பி உள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து பலூன் போன்ற மூன்று மர்ம பொருட்களை கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது பெரும் பரபரப்பானது. அது உளவு பலூனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்று வானில் பறக்கும் மர்மப் பொருள் குறித்து பல நாடுகளும் பல தகவல்களைக் கூறி வருகின்றன.

    அவ்வகையில், அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டதைப் போன்ற பலூன் போன்ற மர்ம பொருள் இந்தியாவிலும் வானில் பறப்பது காணப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, அந்தமான் நிகோபார் தீவுகளின் மேற்பகுதியில் பலூன் வகை பொருளை கண்டறிந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த சமயத்தில் அது என்னவென்று அங்கே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்தமான் மற்றும் நிக்கோபாரின் சில தீவுகளிலிருந்து இந்த பலூன் தெளிவாகத் தெரிந்துள்ளது. பொதுமக்கள் பலரும் அதை போட்டாவோக எடுத்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    அந்த பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக தெரியாததால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் கூறி உள்ளனர். அது சீனாவில் இருந்து வந்ததா, மியான்மரில் இருந்து வந்ததா? என்பது தெரியவில்லை என்றும், மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு அங்கிருந்து நகர்ந்தது என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    வங்காள விரிகுடாவில் இந்தியாவின் ஏவுகணை சோதனை நடத்தும் பகுதிகளுக்கு அருகே, மலாக்கா ஜலசந்திக்கு அருகில் உள்ள தீவுக்கூட்டத்தில் இந்த பலூன் பறந்துள்ளது. பலூன் கண்டறியப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. எனினும். அமெரிக்கப் பகுதியில் நுழைந்த சீன பலூன் உளவு பார்ப்பதாகக் கூறி அதை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய இந்தச் சூழலில், இந்திய பகுதியில் பறந்த பொருள் குறித்து விசாரணை செய்கின்றனர்.

    இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து எதிர்காலத்தில் விரைவாக பதிலடி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதி நவீன ஏவுகணையைப் பயன்படுத்தியது. ஆனால், இந்தியா அமெரிக்கா போல இல்லாமல், போர் விமானங்கள் அல்லது விமானங்களில் இணைக்கப்பட்ட கனரக துப்பாக்கிகள் மூலம் இதுபோன்ற சம்பவங்களுக்கு பதிலடி தரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • அமெரிக்கா, கனடா எல்லையின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
    • ஒரே மாதத்தில் 4வது தடவையாக வானில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் கடந்த 4-ம் தேதி சீன உளவு பலூன் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    தங்கள் நாட்டு வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு அதிருப்தி தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என்று குற்றம் சாட்டியது. இதேபோல், அமெரிக்காவின் அலாஸ்காவில் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இதற்கிடையே, கனடா நாட்டின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்கா-கனடாவின் வான்வெளியை பாதுகாக்கும் இருநாட்டு கூட்டுப்படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எப்-22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

    இந்த விவகாரம் குறித்து உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், அமெரிக்கா, கனடா எல்லையில் உள்ள லேக் ஹுரான் பகுதியில் பறந்த மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

    ஒரே மாதத்தில் 4வது தடவையாக வானில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×