search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "footage"

    • அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது.
    • விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது. ஓஹியோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கிளார்க் பாலத்தை செகென்ட் ஸ்ட்ரீட் பாலம் என்றும் அழைக்கின்றனர்.

    இந்த பாலத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி டிரக் ஒன்று எதிரில் வந்த கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றை நோக்கி பாய்ந்து அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்து சம்பவத்தில் மீட்புக்குழு விரைந்து செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெண் ஓட்டுநர் உயிர்தப்பினார்.

    சினிமாவில் வரும் கட்சிகளுக்கு இணையாக இந்த விபத்து மற்றும் மீட்புப் பணி தொடர்பான காட்சிகள் அந்த சமயத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    விபத்தை மிக அருகில் இருந்து அது எப்படி நடக்கிறது என்பதை விறுவிறுப்பான இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது. இதனால் இந்த வீடியோ X தளத்தில் 13 மில்லியன் பார்வைகளைத் தாண்டி வைரலாகி வருகிறது. டாஸ்காம் என்பது கார், டிரக் உள்ளிட்ட வாகனங்களில் விண்ட் ஸ்க்ரீனில் பொருத்தப்படும் வீடியோ பதிவு செய்யும் கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று மதியம் ஓட்டல் வேலையை முடித்துவிட்டு சம்பூர்ணா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீஸ் விசாரணை யில் மர்ம நபர்கள் போலீசார் என்று பொய் சொல்லி மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு அகில்மேடு வீதியைச் சேர்ந்தவர் அர்த்தனாரி. அதே பகுதியில் ஓட்டல் வைத்து உள்ளார். இவரது மனைவி சம்பூர்ணா (60). கணவருடன் ஓட்டலை கவனித்து வந்தார்.

    நேற்று மதியம் ஓட்டல் வேலையை முடித்துவிட்டு சம்பூர்ணா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் சம்பூரணத்திடம் வந்து தங்களை போலீசார் என்று அறிமுகம் படுத்திக்கொண்டு இங்கு வழிப்பறி அதிகமாக நடப்ப தால் கழுத்தில் நகைகளை போட்டு செல்ல வேண்டாம் கழற்றி கொடுங்கள்.

    பாதுகாப்பாக நாங்கள் காகிதத்தில் மடித்து கொடுக்கிறோம். வீட்டிற்கு சென்றதும் கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

    இதனை உண்மை என்று நம்பிய சம்பூர்ணா தான் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்து ள்ளார்.

    அதைப் பெற்றுக் கொண்ட அவர்கள் காகிதத்தில் பொட்டலமாக மடித்து அவரிடம் திருப்பிக் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்டு சம்பூர்ணாவும் வீட்டிற்கு சென்று விட்டார்.

    வீட்டுக்கு சென்று பொட்டலத்தைப் பிரித்து பார்த்த போது தான் அதில் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். போலீஸ் விசாரணை யில் மர்ம நபர்கள் போலீசார் என்று பொய் சொல்லி மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தப் பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையை தீவிரப்ப டுத்தியுள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். போலீசார் எப்போதும் இதுபோன்று பெண்களிடம் சென்று நகைகளை கழற்றி கொடுங்கள் .

    காகிதத்தில் பொட்டலமாக மடித்து வைத்து தருகிறோம் என்று கூற மாட்டார்கள். இவ்வாறாக யாராவது போலீஸ் என்று கூறி வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    அவர்களை நம்பி நகைகளை கொடுக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ×