என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "french open"

    • இந்திய ஜோடி காலிறுதியில் உலகின் நம்பர் 1 ஜோடியை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்திய ஜோடி கொரிய ஜோடியுடன் மோதியது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொண்டது.

    இந்தப் போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கொரியா வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதன்மூலம் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    • கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

    இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு. 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான அவர், இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    சமீபத்தில் நடந்த மாட்ரிட் ஓபனில் இருந்து கையில் காயத்துடன் வெளியேறி இருந்தார். காயம் காரணமாக அவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

    என்னை ஆதரித்த என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் பிரேசில் வீரருடன் மோதினார்.
    • இதில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் இன்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், 172-ம் நிலை வீரரான பிரேசிலின் தியாகோ செபோத் வைல்டுடன் மோதினார்.

    முதல் செட்டை தியாகோ 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை மெத்வதேவ் 7-6, 6-2 என வென்று பதிலடி கொடுத்தார்.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தியாகோ 4 மற்றும் 5வது செட்டை 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சுமார் 4 மணி 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.
    • உலகின் 8-ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, செக் வீராங்கனை பிரெண்டாவுடன் மோதினார். இதில் ரிபாகினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் ஹங்கேரி வீரருடன் மோதினார்.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஹங்கேரி வீரர் மார்ட்டன் பியூசோவிக்சுடன் மோதினார்.

    முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-0 எனவும், மூன்றாவது செட்டை 6-3 என வென்று அடுத்த சுற்றையும் உறுதி செய்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-1 என வென்றார். 2வது செட்டை டேனியல் 6-3 என வென்றார். இதையடுத்து அல்காரஸ் 3-வது மற்றும் 4-வது செட்டை 6-1, 6-2 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சக நாட்டு வீராங்கனை ஷிமனோவிச்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • அனா பிளின்கோவா (ரஷியா) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார்.
    • ஷபலென்கா (பெலாரஸ்), எமர்டன்ஸ் (பெல்ஜியம்) உள்ளிட்ட வீராங்கனைகள் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அனா பிளின்கோவா (ரஷியா) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார். 

    அனா பிளின்கோவா

    அனா பிளின்கோவா

    ஷபலென்கா (பெலாரஸ்), எமர்டன்ஸ் (பெல்ஜியம்) உள்ளிட்ட வீராங்கனைகள் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), முதல் நிலை வீரரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் சக நாட்டு வீராங்கனை லிண்டா நோஸ்காவுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் லியூவுடன் மோதினார். இதில் 6-4, 6-0 என்ற செட்

    கணக்கில் வென்று ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரூத் வெற்றிக்காக இரண்டரை மணி நேரம் போராட வேண்டியிருந்தது
    • நிஷியோகா மூன்றரை மணி நேரம் போராடி வெற்றி பெற்றார்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் இன்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு போட்டியில் சீனாவில் ஜாங்- நார்வேயின் ரூத் பலப்பரீட்சை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ரூத் 4-6, 6-4, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷியோகா பிரேசில் வீரர் வைல்டை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்தது. இதில் நிஷியோகா 3-6, 7(10)-6(8), 2-6, 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனை ரூனே, சொரிபெஸ் டொர்மோ ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்

    • உடல்நலக் குறைவால் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார் ரிபாகினா.
    • இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    இதில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் தோர்மோவுடன் மோத இருந்தார்.

    வைரஸ் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்ட ரிபாகினா நேற்று முன்தினம் இரவு சரியாக தூங்கவில்லை. எனவே உடல்நலம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து ரிபாகினா விலகினார்.

    இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் நான்காவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஸ்லோனி ஸ்டீபன்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை சந்திக்கிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
    • இன்று நடந்த காலிறுதியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ கஃபுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையாவை சந்திக்கிறார்.

    ×