என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "frolic"

    • நட்பு காதலாக மாறியது. 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய சதீஷ்குமார்.
    • உல்லாசமாக இருந்தது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). சேல்ஸ்மேன் வேலை செய்து வருகிறார். இவர் புதுவையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்தார். அப்போது அதே கடையில் பணியாற்றிய புதுவையை சேர்ந்த 21 வயது பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி, நட்பு காதலாக மாறியது. 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய சதீஷ்குமார், அவருடன் தனிமையில் உல்லாசமாக பலமுறை இருந்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை பார்ப்பதையும், பேசுவதையும் சதீஷ்குமார் நிறுத்திக் கொண்டார்.

    அதிர்ச்சியடைந்த இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ள சதீஷ்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து துணிக்கடைக்கு வேலைக்கு செல்வதையே சதீஷ்குமார் நிறுத்திவிட்டார். மேலும், அதிர்ச்சியடைந்த இளம்பெண், சதீஷ்குமாரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். தனக்கு நடந்த விஷயங்களை புகார் மனுவாக போலீசாரிடம் கொடுத்தார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றிய சதீஷ்குமாருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

    புகாரைப் பெற்ற போலீசார், மரக்காணம் சதீஷ்குமாரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர் புகார் கொடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. மேலும், அவருடன் பழகவே இல்லை என்றும் கூறினார். இதையடுத்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுடன், சதீஷ்குமார் பலமுறை உல்லாசமாக இருந்தது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
    • பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் தனது 2 ஆண் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த அந்த பெண்ணின் கணவரான டாக்டர் நேராக அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, தனது மனைவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

    அப்போது மனைவி இரண்டு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்ட அவர் ஆவேசம் அடைந்து மனைவியை கடுமையாக அடித்து உதைத்து தாக்கி உள்ளார். இதைப்பார்த்த அந்த பெண், ஆண் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டாக்டர் மற்றும் பெண் டாக்டர், அவரது ஆண் நண்பர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண் டாக்டருடன் நெருக்கமாக இருந்தது காஜியாபாத் மற்றும் புலந்த் சாகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே பெண் டாக்டரை அவரது கணவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×