search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G20 Logo"

    • லோகோவில் தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளது.
    • காங்கிரஸ் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு மறுத்து விட்டார்.

    புதுடெல்லி:

    ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்தியாவின் தேசியக் கொடியில் உள்ள நான்கு வண்ணங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள அந்த லோகோவில், தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளது.

    பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையை ஜி20 லோகோவில் பயன்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "70 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு மறுத்து விட்டார். தற்போது பாஜக ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்க உள்ள நிலையில் அதற்காக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ லோகோவில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மோடியும் பாஜகவும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் இழக்கமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்' என தெரிவித்துள்ளார்.

    • சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது.
    • உலகளவில் ஏற்பட்ட பிரச்சினையில் தலைமை பதவி இந்தியாவிடம் வந்துள்ளது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    ஜி 20 அமைப்புக்கு வரும் டிசம்பர் மாதம் இந்தியா தலைமை பதவியை ஏற்க உள்ளது. இதற்கான சின்னம், மையக்கருத்து மற்றும் இணைய தளத்தை பிரதமர் நரேந்திடிர மோடி நேற்று அறிமுகம் செய்தார். ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் மையக்கருத்து உருவாக்கப்பட்டு உள்ளது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    ஜி 20 சின்னம் உலக நல்லிணக்கத்தை எதிரொலிக்கிறது. டிசம்பர் மாதம் ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்கிறது.

    ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பதவி ஏற்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜி 20 அமைப்பின் சின்னம் சாதாரணமானது அல்ல. அது அனைவரின் உணர்வு.

    தற்போது ஜி20 அமைப்பை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. 75-வது தின சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, இந்தியா தலைமைப் பதவியை ஏற்றுள்ளது.

    நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வளர்ச்சியை நோக்கி நமது பயணத்தைத் துவக்கினோம். கடந்த 75 ஆண்டுகளில் அனைத்து அரசுகளின் முயற்சியும் அடங்கும். அனைத்து அரசுகள், குடிமகன்கள், நாட்டின் வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் சென்றனர். சின்னமும், மையக்கருத்தும், நமது பாரம்பரியத்தை உணர்த்துகிறது.

    உலக அளவில் ஏற்பட்ட பிரச்சினையில் தலைமை பதவி இந்தியாவிடம் வந்துள்ளது. ஜி 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள்தான், உலகளவில் 85 சதவீத ஜிடிபிக்கு பங்களிப்பை அளிக்கிறது. இயற்கையும் வளர்ச்சியும் ஒன்றாக பயணிக்க முடியும். வளர்ச்சியில் அனைவரையும் இந்தியா முன்னெடுத்து செல்கிறது.

    உலகத்தின் 75 சதவீத வர்த்தகத்தை ஜி20 அமைப்பு முடிவு செய்கிறது. நமது பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே நோக்கம் என தெரிவித்தார்.

    • சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்
    • இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அதிக பெருமையை கொண்டு வரும்.

    ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிவரை இந்தியா இந்த பொறுப்பில் இருக்கும். இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த உள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்

    அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஜி20 தலைமை பதவியில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    'இந்தியா இப்போது ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது. இது, சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அதிக பெருமையை கொண்டு வரும். சுதந்திரத்திற்குப் பிறகு அனைத்து அரசாங்கங்களும், இந்திய மக்களும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் தங்களின் பங்களிப்பை வழங்கினர். உலகை நம்முடன் அழைத்துச் செல்லும்போது, நாமும் புதிய ஆற்றலுடன் முன்னேற வேண்டும்' என மோடி குறிப்பிட்டார்.

    சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் பங்களிக்க ஜி20 தலைவர் பதவி இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்று வெளியுறவு அமைச்சகம் திங்களன்று கூறியுள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமை பதவியின் லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளம் ஆகியவை நாட்டின் செய்தி மற்றும் முன்னுரிமைகளை உலகிற்கு பிரதிபலிக்கும் என்றும் கூறியது.

    ×