search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganjamalai Siddhar Temple"

    • சித்தேசுவரர் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரத்தில் சித்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்தேசுவரர் சாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு மகா கணபதி, வெற்றி விநாயகர், ஞானசற்குரு பாலமுருகன், காளியம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.

    மன்னன் அதியமான், அவ்வைக்கு கொடுத்த கருநெல்லி இந்த கஞ்சமலையில் விளைந்ததாகும். இவ்வாறு பிரசித்தி பெற்ற இக்கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    காலை 4.30 மணிக்கு மேல் திருப்பள்ளி எழுச்சி, தமிழ்திருமுறை பாராயணம், காலை 7 மணிக்கு மாகாதீபாராதனை, யாக சாலையில் இருந்து திருவருள், திருக்குடங்கள் புறப்பாடு, காலை, 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மூலஸ்தான, ராஜ கோபுர கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் பால முருகன் கோவில் கும்பாபிஷேகம், காலை, 7.35 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் காளியம்மனுக்கு கும்பாபிஷேகம், காலை 9 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கஞ்சமலை சித்தேஸ்வரசாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


    விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணி க்கப்பட்டன. மேலும் சாதாரண உடையிலும் போலீசாரும் கண்காணி த்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    ×