என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "genitals"

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார்.
    • இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரது பிறப்புறுப்பில் துளையிட்டு பூட்டு போட்டு கொடுமைப்படுத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார். அவர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் மே 16 ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளம் நாட்டை சேர்ந்த இந்த தம்பதி வேலை தேடி புனே நகரத்திற்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர் என்றும் வந்த இடத்தில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவன் அவளது பிறப்புறுப்பை ப்ளேடு வைத்து காயப்படுத்தி, ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளான் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மனைவியின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கணவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாமாவை இந்த அளவு வன்மத்தோடு யார் கொலை செய்தனர் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது
    • லாமாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகப்படும் 7 பேர் மீது புகார் அளித்துள்ளனர்.

    மேற்கு சிங்கத்தில் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிபூர்துவார் [Alipurduar] நகரில் உள்ள ஜெய்கான் [Jaigaon] பகுதியில் நேற்று முன்தினம் இந்த கொடூர நிலைக்கு ஆளாக்கப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அந்த உடல் அப்பகுதியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த சாந்தாபீர் லாமா [Santabir Lama] என்பவருடையது என்று தெரியவந்துள்ளது. தல்சிங்பாரா [Dalsingpara] பகுதியைச் சேர்ந்த லாமா சில வருடங்கள் முன்னர் ஜெய்கான் பகுதியில் வந்து குடியேறி ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார்.

    அப்பகுதியில் உள்ள உள்ளூர் தேவாலயத்திலும் இயங்கி வந்துள்ளார். இந்நிலையில் லாமாவை இந்த அளவு வன்மத்தோடு யார் கொலை செய்தனர் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

    லாமாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகப்படும் 7 பேர் மீது புகார் அளித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட லாமாவின் உடல் அலிபூர்துவார் மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    ×