என் மலர்
நீங்கள் தேடியது "Gill"
- சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர்.
- கில் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதையும் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.
ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சுப்மன் கில் நல்ல வீரர் தான். ஆனால் அந்த சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-
சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர். ஆனால் குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். குஜராத் அணியின் முடிவு பலனளிக்கலாம். நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை.

2025-ல் கில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் கூறுகிறேன். இருந்தாலும், நான் உற்சாகமாக இருக்கிறேன். அவர் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.
என்று அவர் கூறினார்.
- ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்மிழந்து ஏமாற்றம் அளித்தார்.
- ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் சுப்மன் கில் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்டில் விளையாடிய ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோர் இந்த டெஸ்டில் இடம் பெறவில்லை.
ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜேக் லீச், மார்க் வுட் இடம் பெறவில்லை. சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பிடித்தனர்.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் 15 ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 18-வது ஓவரில் ரோகித் சர்மா 41 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பஷீர் அறிமுக போட்டியிலேயே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது இந்தியா 40 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். இவர் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் சுப்மன் கில் 46 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 30-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 31 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவேன் என இருந்தால், தேர்வு ஆவேன்.
- ஆனால் தற்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான்.
இந்திய அணியின் தலைசிறந்த இளம் வீரராக சுப்மன் கில் திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை தொடர் வர இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது.
இதில் சுப்மன் கில் போன்றோருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் உலகக் கோப்பை தேர்வு குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-
இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விசயம். ஆனால், நான் உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால், அது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ்க்கு அநீதி இழைப்பதாகும். அதேபோல் எனக்கும் அநீதி இழைப்பதாகும்.
நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவேன் என இருந்தால், தேர்வு ஆவேன். ஆனால் தற்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான். என்னுடைய அணிக்கு சிறந்ததை பெற்றுக் கொடுப்பது, அணிக்காக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி சக வீரர்களுக்கு உதவி செய்வது குறித்துதான் கவனம் செலுத்துகிறேன்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய எனக்கு, எனது அனுபவங்கள் உண்டு. இன்னொரு உலகக் கோப்பையில் விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நான் இவ்வளவு தூரம் யோசிக்கவில்லை.
நான் கடந்த சீசனில் கிட்டத்தட்ட 900 ரன்களை எடுத்துள்ளேன், என்னைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நான் எடுக்கப்படுவேன். இல்லையென்றால் (அப்படியானால்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
- டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடுகிறார்.
- கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு வாய்க்கு கிடைக்கவில்லை. ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் தேர்வு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஒருவேளை விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கப்பட்டால் ஜெய்ஸ்வால் ஆடும் லெவன் அணியில் இடம் பெறமாட்டார். ஒருவேளை காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக களம் இறக்க சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை.
ருதுராஜ் கெய்க்வாட் சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். ஆசிய விளையாட்டில் இவரது தலைமையில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடி வருகிறார். 9 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 447 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக சுப்மன் கில்லை தேர்வு செய்தது முற்றிலும் பாரபட்சம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வாளருமான ஸ்ரீகாந்த் தேர்வுக்குழுவினர் மீது சாடியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
ருதுராஜ் கெய்க்வாட்டை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் தேர்வானது எனக்கு குழப்பமாக உள்ளது. சுப்மன் கில் அவுட் ஆஃப் பார்மில் உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட சிறப்பாக உள்ளார்.
சுப்மன் கில் தோல்வியடைந்த நிலையிலும், தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெற்று வருகிறார். அவர் தேர்வாளர்களின் ஆதரவை பெறுள்ளார். இது மிகப்பெரிய பாரபட்சம்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
- ரோகித் சர்மா இடம் பெறாததால் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்கிறார்.
- நிதிஷ் ரெட்டி அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. ஒரு சுழந்பந்துடன் இந்தியா களம் இறங்கும்.
இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக நுழைய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் வெல்ல வேண்டும். இது மிகவும் சவாலானதாகும்.
ரோகித் சர்மா தலைமையிலான அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. எதிர்பாராத இந்த தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடுவது முக்கியமானது.
ஆஸ்திரேலியாவில் கடைசி 2 டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. தற்போது 3-வது தடவையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.
டெஸ்டுக்கு முன் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடும். ஆனால் இந்த முறை அவ்வாறு நடக்கவில்லை. இந்திய அணிகளை உருவாக்கி தங்களுக்குள் போட்டிகளில் விளையாடி பயிற்சி செய்தது. எந்த பயிற்சி ஆட்டத்திலும் ஆடவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் பெர்த்தில் தொடங்குகிறது. வேகப்பந்து வீரர் பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். ரோகித் சர்மாவின் மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. அவர் இந்த டெஸ்டில் ஆடவில்லை. பும்ரா இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்டுக்கு 2022-ம் ஆண்டு கேப்டனாக பணியாற்றி இருக்கிறார்.
கே.எல். ராகுலும், ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக விளையாடுகிறார்கள். சுப்மன் கில் காயம் அடைந்ததால் பெர்த் டெஸ்டில் ஆடுவது சந்தேகம். போட்டி நடைபெறும் தினத்தில்தான் அவரது நிலை குறித்து முடிவு செய்யப்படும். அவர் ஆட முடியாத பட்சத்தில் தேவ்தத் படிக்கல் 3-வது வரிசையில் ஆடுவார்.
விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக துருவ் ஜூரல் சிறப்பாக ஆடியதால் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பெறுவார். சர்பரஸ் கான் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.
பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இடம் பெறுவார். இதில் அஸ்வின், ஜடேஜா இடையே போட்டி நிலவுகிறது. வேகப்பந்து வீரர்களில் ஆகாஷ் இடம் பெறுவார். முகமது சிராஜ், ஹர்சித் ரானா இடையே போட்டி இருக்கும்.
நிதிஷ் குமார் ரெட்டியும், ஹர்சித் ரானாவும் டெஸ்டில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் நெருக்கடியில் இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கலாம். அவர் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடியவர். கடந்த காலங்களில் இதை பார்த்து இருக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சராசரி 47.83 ஆகும்.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக பிப்ரவரி- மார்ச் மாதம் நியூசிலாந்துடன் டெஸ்டில் விளையாடியது. 2 டெஸ்டிலும் வென்று முத்திரை பதித்தது. இதனால் இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.
அந்த அணியில் உஸ் மான் கவாஜா, ஸ்டீவ் சுமித், லபுஷேன், டிரெவிஸ் ஹெட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ், ஹாசல்வுட், லயன் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். புதுமுக வீரர் நாதன் மெக்ஸ் வீனி டெஸ்டில் அறிமுகமா கிறார்.
நாளை டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.