search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl strike"

    • வகுப்பறை முழுவதும் ரசாயனத்தின் நெடி பரவியதால் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 13 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
    • மாணவிகளை சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 9-ந்தேதி காலையில் பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவர் கொண்டு வந்திருந்த வாசனை திரவிய பாட்டில் எதிர்பாராதவிதமாக தவறி தரையில் விழுந்து உடைந்தது. இதனால் அந்த வகுப்பறை முழுவதும் பயங்கர நெடியுடன் கூடிய வாசனை பரவியது. இதில் 2 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

    ரசாயனத்தின் நெடி வகுப்பறை முழுவதும் பரவி இருந்ததால் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 13 மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள், மயங்கிய மாணவிகளை சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும், தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். பின்னர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பிறகு மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வகுப்பறையில் வாசனை திரவியம் தரையில் விழுந்து உடைந்த போது அதன் நெடி வகுப்பறை முழுவதும் பரவி இருந்தது. இது தொடர்பாக வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அங்கிருந்து வெளிறே அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சம்பவம் குறித்து உடனடியாக மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறியும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் இன்று காலை பள்ளியின் முன்பு சாலையோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்தற்கு செங்கோட்டை இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். என்னும் ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுதுதி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×