என் மலர்
நீங்கள் தேடியது "give extra yield"
- வேளாண்மையில் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியம். இதற்கு விதை பரிசோதனை செய்யப்பட்ட சான்றளிக்கப்பட்ட விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
- விதைக்கும் முன் முளைப்பு திறன் பரிசோதனை செய்து தேர்ச்சி பெற்ற விதைகளை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.
ஈரோடு:
வேளாண்மையில் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியம். இதற்கு விதை பரிசோதனை செய்யப்பட்ட சான்றளிக்கப்பட்ட விதைகளை தேர்வு செய்ய வேண்டும். விதைக்காக சேமிக்கப்பட்ட விதைகள் தரமானதா? என்பதை பரிசோதனை செய்து சேமித்து வைத்தல் அவசியமாகும்.
இதன்படி ஆடிப்பட்டத்துக்கு தானிய பயிர்களை விதைக்கும் விவசாயிகள், நெல் பயிரில் ஐ.ஆர்.20, கோ–43, கோ–51, ஏ.டீ.டி.36, ஏ.டீ.டி.53, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, சி.ஆர்.1009 (சாவித்ரி), வி.ஜி.டி.1 ரகங்கள், மக்காசோளத்தில், கோ–6, கோ (எச்.எம்.,) 7, கோ (எச்.எம்.)8 ரகங்கள், சோளத்தில் கோ(எஸ்)8, கோ–30, பி.எஸ்.ஆர்.1, பையூர் 2 ரகங்கள், கம்பில் கோ– 7, கோ (சி.யூ.)9 போன்ற ரகங்களை இருப்பு வைத்துள்ள விவசாயிகள், விற்பனையாளர்கள், விதைக்கும் முன் முளைப்பு திறன் பரிசோதனை செய்து தேர்ச்சி பெற்ற விதைகளை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.
விதை பரிசோதனைக்கு நெல்–50 கிராம், மக்காசோளம்– 500 கிராம், சோளம் –100 கிராம், கம்பு– 25 கிராம், ராகி– 25 கிராம், பாகல் மற்றும் புடலை 250 கிராம், பூசணி, சுரைக்காய், வெண்டை, தர்பூசணி– 100 கிராம், தக்காளி, காலிபிளவர், கத்தரி, வெங்காயம், முட்டைகோஸ், நுால்கோல், முள்ளங்கி, மிளகாய் – தலா, 10 கிராம் என வழங்க வேண்டும்.
வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஆனுார் கம்மன் காம்ப்ளெக்ஸ், 2-ம் தளம், 68 வீரபத்திர வீதி, சத்தி சாலை, ஈரோடு–-3 என்ற முகவரிக்கு விதைகளை அனுப்ப வேண்டும் என விதை பரிசோதனை அலுவலர் கேட்டு கொண்டார்.