என் மலர்
நீங்கள் தேடியது "Gnanasekaran"
- போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
- ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சிக்கிய ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகைக்கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு உள்ளது.
- ஆதாரம் இல்லாததால் விடுவிக்க வேண்டும் தரப்பு வாதம்.
அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு உள்ளது. ஆதாரம் இல்லாததால் விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய ஞானசேகரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்தும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
- ஞானசேகரன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன.
- சிறப்பு விசாரணைக்குழு அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குண்டம் சட்டம் பாய்ந்துள்ளது. ஞானசேகரன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது லேப்டாப் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் நகைகள், சொத்துகள் வாங்கியது தொடர்பாக ஞானசேரன் மனைவிகளிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஞானசேகரன் வாங்கிய சொத்துகள் குறித்த ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அத்துடன் ஞானசேகரின் வீடு உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதாக என்பது குறித்தும் எஸ்.ஐ.டி. ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
- ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல் என 20 வழக்குகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
- ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறை தரப்பில் தாக்கல் செய்தது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர்.
இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
பிறகு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, ஞானசேகரன் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல் என 20 வழக்குகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, ஞானசேகரன், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறை தரப்பில் தாக்கல் செய்தது.
இந்த, மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் 9-வது மாஜிஸ்திரேட் முன்பு இன்று வந்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
- ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி.
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர்.
இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
பிறகு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு இன்று அதிகாலை வலிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ஞானசேகரன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஞானசேகரனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- நான் குறிப்பிட்டு பேசிய வேறு ஒரு ஞானசேகரனின் பெயரை குற்றவாளி ஞானசேகரனுடன் ஒப்பிட்டு சர்ச்சையாக்கி விட்டனர்.
- இந்த 2 பேர் ஒப்பீடு போல் நிறைய சம்பவங்களை ஒப்பிட்டு உள்ளேன்.
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் தம்பி ஞானசேகரன் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
கடந்த 10-ந்தேதி நிரஞ்சன் என்ற தம்பி இந்தியாவின் வெற்றி என்று ஒரு புத்தகம் வெளியிட்டார்.
அதை வெளியிடப்போகும்போது நீங்கள் சொன்ன பெயருடைய ஒருவர் துண்டு போட வந்தார்.
அவர் ஞானசேகரன் என்றதும் பயமாக இருக்கிறது. நீ அந்த ஞானசேகரனா... என்றேன். அவரும் நான் அவர் இல்லை என்று கூறினார்.
அந்த ஞானசேகரனை கை காட்டி தான் என் தம்பி ஞானசேகரன் பெயர் கொண்டவர் தான் இந்த தவறு செய்துள்ளார். அதற்குத்தான் 3 ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகள் போட்டு இருக்கிறோம் என்று சொன்னேன்.
நான் குறிப்பிட்டு பேசிய வேறு ஒரு ஞானசேகரனின் பெயரை குற்றவாளி ஞானசேகரனுடன் ஒப்பிட்டு சர்ச்சையாக்கி விட்டனர்.
இந்த 2 பேர் ஒப்பீடு போல் நிறைய சம்பவங்களை ஒப்பிட்டு உள்ளேன். வீடியோவில் இன்னும் நிறைய இருக்கிறது. அதை நீங்கள் போய் கேளுங்கள். அதை எடுத்து போடுவதற்கு தயாரா என்று கேளுங்கள் என்று அவர் கூறினார்.
- பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
- நகைகளை அடகு வைத்தும், விற்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில், 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா மாதிரியான வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.
பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த திருட்டு வழக்கில் ஞானசேகரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிக்கரணை போலீசாருக்கு ஆலந்தூர் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அதன்பேரில் பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கிறிஸ்டியன் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் தீபக்குமார் ஆகியோர் ஞானசேகரனிடம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஞானசேகரன் பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பள்ளிக்கரணை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஞானசேகரன், நகைகளை அடகு வைத்தும், விற்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஞானசேகரன் தனி ஒரு ஆளாக வீடுகளில் கொள்ளையடித்து வந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கொள்ளையடித்த நகைகளை அடகு கடைகளில் வைத்தும் விற்றும் இருந்த நிலையில் அந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகள் 2 வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஞானசேகரனின் ஜீப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதுடன், பிரியாணி கடை வைத்ததாகவும், பெண்களுடன் ஜாலியாக செலவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
- ஞானசேகரனிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
- பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஞானசேகரனுக்கு எதிராக ஏற்கனவே போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.
ஞானசேகரனுக்கு எதிராக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.