என் மலர்
நீங்கள் தேடியது "gold bars"
- நடுக்கடலில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது.
ராமேசுவரம்
இலங்கை தலைமன்னார் வழியாக ராமேசுவரத்திற்கு தங்கம் கடத்தல் நடைபெற உள்ளதாக தலைமன்னார் கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடற் படையினர் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்ட னர். அப்போது சந்தேகத் திற்கு இடமாக ராமேசுவரம் நோக்கி சென்ற படகை இடைமறித்து சோதனை யிட்ட போது அதில், 2 கிலோ 150 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, தலை மன்னார் கடற்படை முகா மிற்கு படகு மற்றும் அதில் இருந்து 5 பேரை கைது செய்து மேல் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தலை மன்னார் பகுதியை சேர்ந்த வர்கள் என்பதும் தங்கத்தை நடுக்கடலில் தமிழக படகில் கொடுக்க கொண்டு செல் லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது. இது குறித்து தொடர்ந்து இலங்கை கடற் படையினர் மற்றும் போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த தங்கத்தை நடுக்கடலில் யாரிடம் கொடுக்க கொண்டு செல் லப்பட்டது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் ரகசிய விசாரணையில் ஈடு பட்டுள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.50 கோடி மதிப்பு இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
- சட்ட விரோதமாக தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கின்ஷாசா:
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் சட்ட விரோதமாக பல தங்கச்சுரங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றை கள்ளச்சந்தையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பலர் அதிகளவில் வருமானம் ஈட்டுகின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தநிலையில் அங்குள்ள கிவு மாகாணத்தில் சட்ட விரோதமாக தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 12 தங்கக்கட்டிகள் மற்றும் சுமார் ரூ.7 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அந்த காரில் இருந்த 3 சீனர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.