என் மலர்
நீங்கள் தேடியது "Grocery items"
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது.
- மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மார்க்கெட்களுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வருவது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாட்களாக ஆந்திரா, கர்நாடகாவில் விளைச்சல் குறைந்ததால் காய்கறிகள் வரத்தும் குறைந்துள்ளது.
காய்கறி விலை
இதனால் கடந்த சில நாட்களாக டவுன் நயினார் குளம் மார்க்கெட், பாளை மார்க்கெட்களில் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது. இதே போல சாம்பார் வெங்காயம் விலையும் ரூ.150 ஆக உயர்ந்தது. இஞ்சி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.
குடை மிளகாய், பச்சை மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கத்திரிக்காய் ரூ.50 முதல் 60 வரையிலும் விற்கப்படும் நிலையில் கேரட் விலை ரூ.95 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டு பூண்டு ரூ.180, கொடைக்கானல் மலைப் பூண்டு ரூ.300, இமாச்சல் பூண்டு ரூ.200-க்கு விற்கப்படுகிறது.
சீரகம் கிலோ ரூ.800
இந்த நிலையில் மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று பாளை மார்க்கெட்டில் சீரகம் விலை கிலோ ரூ.800- ஆக உயர்ந்தது. மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல துவரம் பருப்பு ரூ.158-ம், உளுந்து ரூ.132-ம், மல்லி ரூ.110-ம், வெந்தயம் ரூ.130-ம், கடுகு ரூ.120 ஆகவும் உயர்ந்துள்ளது.
காய்கறிகளின் விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
- கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது.
- அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது.
சென்னை:
மளிகை பொருட்கள் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் குடும்பத்தினரின் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும். அப்படி ஒரு நிலைதான் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்துதான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது. இதனால் அண்டை மாநிலங்களின் வரத்தை தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அதேவேளை அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பருப்பு வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது.
அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது. பச்சரிசியும் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக அதிகரிக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,200-ல் இருந்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ சாப்பாடு அரிசியின் விலை ரூ.8 வரை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.