என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "groundnuts"

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.7 லட்சத்துக்கு விற்பனையானது
    • இந்த வாரம் 297 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது.

    கரூர்:

    கரூர் ெநாய்யல் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்நிலக்கடலை 96.23 குவிண்டால் எடை கொண்ட 297 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.76.50-க்கும் என ரூ.6 லட்சத்து 91 ஆயிரத்து 310-க்கு விற்பனையானது.

    • திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.
    • தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடைவேளையின் போது சிறுதானிய உணவுகள் மற்றும் பயறு வகைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் பாஸ்கரன், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.

    தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது. சிறுதானியங்கள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன என்றார்.

    முடிவில் கலை ஆசிரியர் அன்புமணி நன்றி கூறினார்.

    ×