என் மலர்
நீங்கள் தேடியது "GT"
- டெல்லி அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
- அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணியின் அபிஷேக் பொரேல், கருண் நாயகர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பொரேல் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் களம் இறங்கினார். இவர் 14 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 28 ரன்கள் விளாசினார். 3ஆவது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார்.
பவர்பிளேயில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 73 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிகபட்ச பவர்பிளே ரன் இதுவாகும். டெல்லி பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்கிற்கு குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கினர். இதனால் விக்கெட் வீழ்ந்தாலும் ரன் வேகத்தில் தொய்வு ஏற்படவில்லை.
கருண் நாயர் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இதனால் ஒவருக்கு 10 ரன்கள் என்ற அடிப்படையில் ஸ்கோர் உயர்ந்து கொண்டே வந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்தது. 14ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இவர் இந்த ஓவரில் 2 சிக்சருடன் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 15ஆவது ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்டப்ஸ் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி 14.2 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது.
5ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் அஷுடோஸ் சர்மா ஜோடி சேர்ந்தார். டெல்லி 15 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.
16ஆவது ஓவரில் 13 ரன்களும், 17ஆவது ஓவரில் 10 ரன்கள் சேர்த்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். 18ஆவது ஓவரின் முதல் பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.1 ஓவரில் 173 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த பந்தில் விப்ராஜ் நிகம் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஆனால் இதே ஓவரில் அஷுடோஸ் சர்மா 4ஆவது மற்றும் 5ஆவது பந்தில் அடுத்தடுத்து சிக்சர் விளாசினார். இதனால் டெல்லிக்கு இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.
19ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே அடித்தது. 19ஆவது ஓவர் முடிவில் டெல்லி 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை சாய் கிஷோர் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்கள் விளாசினார். டெல்லி அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
- மார்கிராம் 31 பந்தில் 58 ரன்கள் அடித்தார்.
- நிக்கோலஸ் பூரன் 34 பந்தில் 61 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 தொடரின் 26ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் தொடக்கத்தில் அபாரமாக விளையாடியது. சாய் சுதர்சன் (56), சுப்மன கில் (60) அரைசதம் அடிக்க 12 ஓவரில் 120 ரன்கள் குவித்தது. அதன்பின் மளமளவென விக்கெட் இழக்க இறுதியாக 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் இல்லாததால் மார்கிராம் உடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களம் இறங்கினார். ரிஷப் பண்ட் 18 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார்.
மார்கிராம் உடன் இணைந்து நிக்கோலஸ் பூரன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் லக்னோ 9.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 26 பந்தில் அரைசதம் கடந்த மார்கிராம், 31 பந்தில் 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் ஆயஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் 23 பந்தில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த தொடரில் அவர் விளையாடும் 6ஆவது போட்டி இதுவாகும். இதில் நான்கு அரைசதம் விளாசியுள்ளார்.
தொடர்ந்து விளையாடிய நிக்கோஸ் பூரன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 15.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்திருந்தது.
4அவது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். லக்னோவின் ஸ்கோர் 174 ரன்னாக இருக்கும்போது டேவிட் மில்லர் 7 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
5ஆவது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆயுஷ் பதோனி 28 ரன்களுடனும், அப்துல் சமாத் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
- லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் இடம் பெறவில்லை.
- புள்ளிகள் பட்டியலில் லக்னோ 6ஆவது இடத்திலும், குஜராத் முதல் இடத்திலும் உள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் இடம்பெறவில்லை.
குஜராத் டைட்டன்ஸ்:-
சாய் சுதர்சன், சுப்மன் கில், பட்லர், வாஷிங்டன் சுந்தர், ரூதர்போர்டு, ஷாருக் கான், ராகுல் டெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-
நிக்கோலஸ் பூரன், மார்கிராம், ரிஷப் பண்ட், ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், திக்வேஷ் ரதி, அப்துல் சமாத், ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்
- ஆர்சிபி 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
- லிவிங்ஸ்டன் 54 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 33 ரன்களும் அடித்தனர்.
ஐபிஎல் தொடரின் 14ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் இரண்டாவது ஓவரில் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷத் கான் வீசிய பந்து லெக் சைடு தூக்கி அடிக்க முயன்ற விராட் கோலி பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 6 பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 4 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனால் ஆர்சிபி 13 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது
அடுத்து பில் சால்ட் உடன் ரஜத் பட்டிதார் களம் ஜோடி சேர்ந்தார். ஆர்சிபி அணி பேட்ஸ்மேன்கள் குஜராத் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் திணறினார்.
பில் சால்ட் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடிய நிலையிலும் 14 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
ரஜத் படிதார் 12 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் லிவிங்ஸ்டன்- சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடியது. இதனால் 420க்கு 4 என இருந்த ஆர்சிபி 94-க்கு 5 என ஆகியது. சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த குருணால் பாண்ட்யா 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
7-ஆவது விக்கெட்டுக்கு லிவிங்ஸ்டன் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்கள் குவிக்க முயற்சித்த போதிலும் குஜராத் பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
ஆர்சிபி 17 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்திருந்தது. 18-ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 சிக்ஸ் கொடுக்க ஆர்சிபி அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. 3 சிக்சரையும் அடித்த லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்தது.
19-ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் முகமது சிராஜ் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 16 ரன்கள் விளாசிய டிம் டேவிட் கடைசி பந்தில் க்ளீன் போல்டானார். இதனால் ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது.
- ஆர்சிபி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- சொந்த மைதானமான சின்னசாமியில் முதன்முறையாக விளையாடுகிறது.
ஐபிஎல் 2025 சீசனின் 14-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி விவரம்:-
பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயால்.
குஜராத் டைட்டன்ஸ்:-
சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.
- பெங்களூரு தொடக்க ஜோடியின் ஆதிக்கத்தை தடுப்பதை பொறுத்தே குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும் எனலாம்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் அமர்க்களமான தொடக்கம் கண்டுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை துவம்சம் செய்தது. அடுத்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை அணியை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வெளியூரில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை ருசித்து 'கெத்து' காட்டியிருக்கும் பெங்களூரு அணி சொந்த ஊரில் களம் காணும் முதல் ஆட்டத்திலும் தனது உத்வேகத்தை தொடர்ந்து 'ஹாட்ரிக்' வெற்றியை தன்வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளது.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதாரும், பந்து வீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர்குமார், யாஷ் தயாள், குருணல் பாண்ட்யாவும் வலுசேர்க்கிறார்கள்.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது. முந்தைய ஆட்டத்தில் 36 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பையை பதம் பார்த்தது. அந்த ஆட்டத்தில் 196 ரன்கள் எடுத்த குஜராத் அணி 160 ரன்னில் மும்பையை முடக்கியது.
2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில், ஜோஸ்பட்லர், ரூதர்போர்டு ஆகியோர் நல்ல நிலையில் இருக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இரு ஆட்டங்களிலும் அரைசதம் விளாசி சூப்பர் பார்மில் உள்ளார். பந்து வீச்சில் முகமது சிராஜ், கசிசோ ரபடா, ரஷித் கான், சாய் கிஷோர் மிரட்டக்கூடியவர்கள்.
சின்னசாமி ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானதாகும். அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவானது என்பதால் ரன் வேட்டையை எதிர்பார்க்கலாம். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பெங்களூரு தொடக்க ஜோடியின் ஆதிக்கத்தை தடுப்பதை பொறுத்தே குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும் எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் பெங்களூருவும், 2-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள்.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக்கான், ரூதர்போர்டு, ராகுல் திவேதியா, ரஷித் கான், ரபடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- சாய் சுதர்சன் அரைசதம் விளாசினார்.
- கடைசி 3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2025 சீசனின் 9-ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடினர். இதனால் குஜராத் அணி பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் 8.3 ஓவரில் 78 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷாருக்கான் 9 ரன்னில் ஏமாற்றம் அளித்து வெளியேறினார். அப்போது குஜராத் 15.3 ஓவுரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணி 10.5 ஓவரில் 100 ரன்னையும், 15.5 ஓவரில் 150 ரன்னையும் கடந்தது.
4-ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். 17-ஆவது ஓவரில் 2 சிக்சருடன் குஜராத் அணிக்கு 19 ரன்கள் கிடைத்தன.
18-ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். குஜராத் ஒரு சிக்சருடன் 9 ரன்கள் அடித்தது. சாய் சுதர்சன் 41 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார்.
19-ஆவது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல் டெவாட்டியா ரன்அவுட் ஆனார். அடுத்த பந்தில் ரூதர்போர்டு ஆட்டமிழந்தார். ரபாடா ஒரு சிக்ஸ் அடிக்க, குஜராத் 2 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் அடித்தது.
கடைசி ஓவரை சத்தியநாராயண ராஜூ வீசினார். குஜராத் இந்த ஓவரின் ஒரு விக்கெட்டை இழந்தது, ஆனால் ஒரு சிக்சருடன் 10 ரன்கள் அடித்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
- மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார்.
- இரண்டு அணிகளும் முதல் வெற்றிக்காக போராட இருக்கிறது.
ஐபிஎல் 2025 சீசனின் 9-ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கெதிராக விளையாடாத நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இணைந்துள்ளார்.
குஜராத் அணி விவரம்:-
சுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக்கான், ரூதர்போர்டு, ராகுல் டெவாட்டியா, சாய் கிஷோர், ரஷித் கான், காகிசோ ரபாடா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-
ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், முஜீப் உர் ரஹ்மான், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்யநாராயண ராஜூ.
- கடைசி அணியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று கேப்டன் யார் என்பதை அறிவித்துள்ளது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா), சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன் கில்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பேட் கம்மின்ஸ்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய ஐந்து அணிகள் கேப்டன்களை தக்கவைத்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தக்கவைக்கவில்லை.
மெகா ஏலத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணிகளாக கேப்டன்களை அறிவித்து வந்தது. இறுதியான இன்று காலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது.
இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய ஐந்து அணிகள் புது கேப்டன்களாக களம் இறங்குகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஆர்சிபி ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானேவை கேப்டனாக நியமித்துள்ளது.
இதில் ரஜத் படிதார் தற்போது புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். அக்சார் பட்டேல் பகுதி நேர கேப்டனாக பணியாற்றியுள்ளார். தற்போது முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார்.
10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மட்டும் வெளிநாட்டு வீரரை கேப்டனாக கொண்டுள்ளது.
- ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
- ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.
ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.
சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.
ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.
- சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர்.
- கில் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதையும் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.
ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சுப்மன் கில் நல்ல வீரர் தான். ஆனால் அந்த சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-
சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர். ஆனால் குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். குஜராத் அணியின் முடிவு பலனளிக்கலாம். நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை.

2025-ல் கில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் கூறுகிறேன். இருந்தாலும், நான் உற்சாகமாக இருக்கிறேன். அவர் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.
என்று அவர் கூறினார்.
- அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
- குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.