என் மலர்
நீங்கள் தேடியது "hangs himself"
- ஒரு அறையில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்ைச புளியம்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (35). இவரது மனைவி வானதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
விக்னேஷ்குமார் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் விக்னேஷ்குமாரை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட சென்ற விக்னேஷ் குமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி வானதி செங்குந்தபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் விக்னேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வேலை பறிபோன விரக்தியில் விக்னேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சம்பவத்தன்று நந்தகோபாலுக்கு சங்கர் போன் செய்து தான் தூக்குமாட்டி சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
- இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
நாமக்கல் மாவட்டம் முனியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). திருமணம் ஆகாத இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய பெற்றோர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சங்கர் சிறு வயதாக இருக்கும் பொழுது பிரிந்து சென்று விட்டனர்.
இவருக்கு ஒரு தம்பியும், ஒரு அக்காவும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி தனியே சென்று விட்டனர். இவருடைய தம்பி பெருந்துறையில் உள்ள பவானி ரோடு, பாண்டியன் வீதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
சங்கர் கிடைக்கிற வேலைக்கு சென்று அதில் வரும் பணத்தை கொண்டு மது குடித்து விட்டு கிடைக்கிற இடத்தில் படுத்துக்கொள்வார்.
இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக சங்கர் தனது பெற்றோரை நினைத்து வேதனையில் தூக்குமாட்டி இறந்து விடுவேன் என தம்பி நந்தகோபாலிடம் அடிக்கடி கூறி இருந்துள்ளார்.
சம்பவத்தன்று காலை நந்தகோபால் வேலை செய்யும் கறிக்கடைக்கு சங்கர் வந்துள்ளார். கடையில் யாரும் இல்லாத போது நந்தகோபாலுக்கு சங்கர் போன் செய்து தான் தூக்குமாட்டி சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு நந்தகோபால் அவர் எப்பொழுதும் போல நடிக்கிறார் என நினைத்து போனை ஆப் செய்து விட்டார்.
பின்னர் மதியம் கறிக்கடைக்கு சென்று பார்த்த போது சங்கர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து நந்தகோபால் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
- இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சாஸ்திரிநகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் நிதிஷ்குமார் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிதிஷ்குமார் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று காலையில் விஜயா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.
அப்போது நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர் நிதிஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நிதிஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கு அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்து, கவுதமி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.
கார்த்திகேயனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் கரும்பு வெட்டிய கூலி பணத்தை வாங்கி சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையறிந்த கவுதமி, கார்த்திகேயனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கு அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது மனைவி மற்றும் மகள் இறந்து போன துக்கத்தில் ஞானராஜ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சாலை ரோடு 4-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் (50). கூலி தொழிலாளி. இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு ரேணு என்ற மகளும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இதில் மகள் ரேணு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார். ஞானராஜின் மனைவி மரகதம் தி.மு.க.வில் வார்டு கவுன்சிலராக இருந்தவர்.
இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனையடுத்து ஞானராஜ் தனது மகன் நவீன்குமார் உடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் தனது மனைவி மற்றும் மகள் இறந்து போன துக்கத்தில் ஞானராஜ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று காலை பெயிண்டிங் வேலைக்கு சென்ற நவீன்குமார் இரவு வீடு திரும்பி வந்து பார்க்கும் போது தந்தை ஞானராஜ் வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே ஞானராஜை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர் ஏற்கனவே ஞானராஜ் இறந்து விட்டதாக கூறினர்.
இதனையடுத்து ஞானராஜ் உடல் பிரேத பரிசோதனை க்காக கோபி அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி, மகள் இறந்து போன துக்கத்தில் இருந்த ஞானராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- படுக்கையறையில் தமிழழகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கருவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் தமிழழகன் (வயது29). இவர் ஊஞ்சலூரில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
தமிழழகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தீராத வயிற்று வலி காரணத்தால் கடந்த 3 மாத காலமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் மற்றும் பார்வதி வேலைக்கு சென்றனர். வீட்டில் தமிழழகன் மட்டும் இருந்துள்ளார். இதனையடுத்து படுக்கையறையில் தமிழழகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் தந்தை ஆறுமுகம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது தமிழழகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த தமிழழகனை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தமிழழகன் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டிலிருந்து வெளியில் சென்ற ஆறுமுகன் அதன் பின் வீடு திரும்பவில்லை.
- மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்துள்ள ராமலிங்க புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (46). சலவைத் தொழிலாளி.
இவரது மனைவி பாப்பா (41). கடந்த ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் ஆறுமுகத்துக்கு தலையில் அடிப்பட்டது. தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
விபத்துக்கு பின்னர் அவருக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடுவார். பின்னர் அவராகவே திரும்பி வந்து விடுவார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. ஆறுமுகத்தின் மனைவி பாப்பா மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் அவர் கொடுமுடி பஸ்சில் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து கொடுமுடி பகுதியில் அவரை தேடி வந்த போது கொடுமுடி காவிரி ஆற்றங்கரை இரும்பு பாலம் அருகில் மரத்தில் ஆறுமுகம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பிரகாஷை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
- மனவேதனை அடைந்த பிரகாஷ் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு:
ஈரோடு செங்கோடம் பாளையம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (45). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி மீனா (28). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். பிரகாசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பிறகு டாக்டர்கள் மது அருந்தக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்கள்.
ஆனால் பிரகாஷ் மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பிரகாஷ் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.
அப்போது பிரகாஷை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த பிரகாஷ் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனே மீனா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரகாஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- தமிழ் அழகன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (31). கட்டிட தொழிலாளி. இவர் சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ் அழகனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக் கிடையே சண்டை ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சவுமியா, தமிழ் அழகனை விட்டு குழந்தை களுடன் பிரிந்து அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அதிகமாக மது குடித்து வந்த தமிழ் அழகன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் தமிழ் அழகனை மீட்டு பெருந்து றையில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தமிழ் அழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரத்தினசாமி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
- கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி கொளத்துப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (35). இவரது மனைவி தீபா (27). ரத்தினசாமி தேங்காய் நார் உறிக்கும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் ரத்தினசாமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வலிப்பு நோயும் உள்ளதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட ரத்தினசாமி, சம்பவத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த அவரது சகோதரர், கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
- துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் துரைசாமி (48). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளார்.
துரைசாமி மற்றும் பழனி யம்மாள் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் துரை சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக அவர் வயிற்று வலியால் அவதி ப்பட்டு அதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்ததா கவும் ஆனால் வயிற்று வலி குணமா கவில்லை என கூறப்படுகிறது.
வயிற்று வலி வரும்போ தெல்லாம் துரைசாமி செத்துவிடலாம் என்று புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு துரைசாமி, பழனியம்மாள், விஜய் 3 பேரும் சாப்பிட்டனர் .பின்னர் பழனியம்மாள் அவரது மகன் விஜய் வீட்டுக்குள் தூங்க சென்று விட்டனர். துரைசாமி வீட்டின் வெளியே தூங்க சென்றார்.
இரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்த பழனியம்மாள் கதவைத் திறக்க முயன்றார். ஆனால் கதவு வெளிப்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது.
உடனடியாக விஜய் அவரது நண்பருக்கு போன் செய்து தகவல் சொன்னார் . அவரது நண்பரும் விரைந்து வந்து கதவை திறந்தார். பழனியம்மாள், விஜய் வெளியே வந்து பார்த்த போது துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே துரைசாமி இறந்துவிட்டதாக தெரிவித்த னர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூவிழியன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.
- போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள புதுத்துறை பகுதியை சேர்ந்தவர் பூவிழியன் (21). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள டையிங் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பூவிழியன் வேலைக்கு வரவில்லை. நிறுவனத்தின் தங்கும் விடுதியிலும் இல்லை என அவரது தாயார் சித்ராவுக்கு (50) டையிங் நிறுவனத்தில் இருந்து போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெருந்துறை போலீசில் பூவிழியனை காணவில்லை எனகூறி புகார் தெரிவித்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெருந்துறை சேனிடோரியம் அருகில் உள்ள இணைப்பு சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் பூவிழியன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பூவிழியனின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.