என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harmanpreet Kaur"

    • ‘ஏ’ கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
    • ஹர்லீன் தியோல், மேகனா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி உள்ளிட்டோருக்கு இடமில்லை.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.

    'ஏ' கிரேடில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அதிரடி பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா 'பி' கிரேடிலும், ஸ்ரேயங்கா பட்டீல், திதாஸ் சாது, அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கவுர், உமா சேத்ரி, யாஸ்திகா பாட்டியா, ராதா யாதவ், சினே ராணா, பூஜா வஸ்ட்ராகர் ஆகியோர் சி பிரிவிலும் உள்ளனர். ஹர்லீன் தியோல், மேகனா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி உள்ளிட்டோருக்கு இடமில்லை.

    • மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
    • இதில் டெல்லியை வீழ்த்திய மும்பை 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    மும்பை:

    மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், கோப்பை வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் கூறியதாவது:

    நாங்கள் கணக்கிட்டு ரிஸ்க் எடுத்தோம். அது எங்களுக்கு உதவியது. 150 (149) என்பது ஒரு நல்ல ஸ்கோர் அல்ல, ஆனால் அது போன்ற போட்டிகளில் அழுத்தமான ஆட்டங்களில், அது எப்போதும் 180 ரன்கள்தான். மேலும் எங்கள் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பெருமை.

    பவர்பிளேயில் எங்களுக்கு திருப்புமுனைகளைத் தர முடியும் என்ற நம்பிக்கை பந்து வீச்சாளர்களுக்கு இருந்தது. இஸ்மாயில் மற்றும் சீவர் பிரண்ட் எங்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

    இன்று அணியில் அனைவரும் பந்து வீசிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் விஷயங்களை மிகவும் தெளிவுபடுத்தினோம், அவர்களின் பாத்திரங்களை தெளிவுபடுத்த ஒருவருக்கொருவர் சந்திப்புகளை நடத்தினோம்.

    வெற்றிக்கான திறவுகோல் விஷயங்களை எளிமையாக வைத்திருப்பதும், சரியான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதும் ஆகும். நாங்கள் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க விரும்பினோம், ஒரு அணியாக, நாங்கள் அதைச் செய்தோம்.

    நான் பேட் செய்ய உள்ளே சென்றபோது அது எளிதானது அல்ல. நான் அங்கேயே இருந்து ஸ்ட்ரைக் செய்துகொண்டே இருந்தால் நாட் சீவர் பிரண்ட் அங்கே இருந்தால் நான் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை ஆதரிக்க விரும்பினேன் என தெரிவித்தார்.

    • ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல. எங்கள் அணுகுமுறையில் நாங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும்.
    • பெண்கள் ஐ.பி.எல். மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும்.

    மும்பை:

    முதலாவது பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கபூர் கூறியதாவது:-

    ஆண்கள் கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட் டிக்கு பிறகு வீரர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆண்கள் கிரிக்கெட்டில் நாம் பார்த்த திறமை வெளிபாட்டை பெண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு பார்க்கலாம்.

    இது இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும். பெண்கள் ஐ.பி.எல். மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும்.

    இது சர்வதேச அரங்குக்கு தயாராகும் வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கும். பெண்கள் ஐ.பி.எல். மூலம் பல இளம் மற்றும் திறமையான வீராங்கனைகளை இந்தியாவுக்கு கண்டறிய முடியும்.

    நாங்கள் சில காலமாக தாக்குதல் ஆட்டத்தில் விளையாட முயற்சித்து வருகிறோம். ஆக்ரோஷமாக கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று அணி கூட்டங்களில் அடிக்கடி விவாதிப்போம். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல. எங்கள் அணுகுமுறையில் நாங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூனியர் உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.
    • ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் வருகிற 13-ந்தேதி மும்பையில் நடக்கிறது. வீராங்கனைகள் ஏலம் முதல்முறையாக நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முந்தைய நாள் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

    இதனால் கவனச்சிதறல் ஏற்படுமா என்பது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது:-

    ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது. எங்களது கவனம் எல்லாம் அந்த போட்டி மீதே இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட உலகக் கோப்பை தொடரே மிகவும் முக்கியமானது. ஒரு வீராங்கனையாக எது நமக்கு முக்கியமானது, கவனச்சிதறல் இல்லாமல் எப்படி அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது என்பது தெரியும்.

    நாங்கள் எல்லோரும் ஓரளவு முதிர்ச்சியானவர்கள். எது முக்கியம் என்பதை அறிவோம். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல (இந்திய ஜூனியர்) நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.

    பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அது விரைவில் நடக்கப்போகிறது. அடுத்த 2-3 மாதங்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெண்கள் பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) மற்றும் தி ஹன்ட்ரட் (இங்கிலாந்து) ஆகிய போட்டிகள் அவர்களது நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம்.

    இதே போல் நமது நாட்டிலும் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடும் அனுபவம் கிடைக்கும். நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

    • மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி, வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. விதிகளின்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

    இந்திய மகளிர் அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இதில், இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். எனவே, இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும்.

    இந்தநிலையில், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதன் மூலம் டி20 போட்டிகளில் முக்கிய உலக சாதனையை படைக்க இருக்கிறார்.

    கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கவுர் தனது 149-வது போட்டியில் களமிறங்கினார். தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றைய அயர்லாந்து அணிக்கு எதிராக கவுர், தனது 150வது டி20 போட்டியில் களமிறங்குகிறார். இதன்மூலம், ஒட்டுமொத்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் 150 டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீராங்கனை என்ற பெருமையை படைக்க இருக்கிறார்.

    மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

    2023 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கி தனது முதல் தோல்வியை சந்தித்தது.

    இதையடுத்து, அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றால் நிச்சயம் அரையிறுதிக்கு தகுதிபெறும். அதற்காக, கவுர் தலைமையிலான இந்திய அணி நிச்சயம் போராடும். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு க்கெபெர்ஹா ,செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

    • விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
    • மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது.

    149 போட்டிகளில் விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 2992 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 ரன்கள் எடுத்தபோது 3 ஆயிரம் ரன்களை எடுத்தார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 150 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை கடந்திருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

    33 வயதாகும் ஹர்மன்ப்ரீத் கவுர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 103 ரன்களை எடுத்துள்ளார். இது எந்தவொரு இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனையாகும். இதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை (70) அடித்த வீராங்கனை என்ற ரிக்கார்டையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.

    இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் டி20 உலகக்கோப்பை தொடரில் 13 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தார். இந்த சாதனையையும் ஹர்மன்ப்ரீத் கவுர் (14) முறியடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அனைத்து டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர். மொத்தம் 34 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 500 ரன்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    • நேற்று மாலை வரையிலும் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
    • வஸ்த்ரகர் விளையாடபோவதில்லை என உறுதியாக கூறப்பட்டாலும், ஹர்மன்ப்ரீத் பற்றி போட்டி தொடங்குவதற்கு முன்னரே தெரிய வரும்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தப் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் பந்து வீச்சாளரான பூஜா வஸ்த்ரகரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என தெரியவந்துள்ளது.

    ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்த இருநாள்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் போட்டியில் பங்கேற்பது குறித்து அணி நிர்வாகம் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    நேற்று மாலை வரையிலும் இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். வஸ்த்ரகர் விளையாடபோவதில்லை என உறுதியாக கூறப்பட்டாலும், ஹர்மன்ப்ரீத் பற்றி போட்டி தொடங்குவதற்கு முன்னரே தெரிய வரும்.

    • கடைசி பந்து வரை சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம்.
    • நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்சுகளை தவர விட்டோம்.

    கேப்டவுன்:

    8-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை.

    பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52ரன்), ரோட்ரிக்ஸ் (43 ரன்) ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதனால் இந்திய அணி வெற்றியை நெருங்கியது.

    ஆனால் இருவரும் அவுட் ஆன பிறகு நெருக்கடி ஏற்படுத்தியது. ஹர்மன்பிரீத் கவுரின் ரன் அவுட் திருப்புமுனையாக அமைந்தது.

    இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்னே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியா போராடி தோற்று வெளியேறியது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறியதாவது:-

    இதை விட துரதிருஷ்டவசமாக உணர முடியாது. ரோட்ரிக்ஸ் ஆட்டத்தில் மீண்டும் வேகத்தை பெற்றோம். நான் ரன்-அவுட் ஆன விதம் துரதிருஷ்டவசமானது. இங்கிருந்து தான் தோற்றோம். இதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

    கடைசி பந்து வரை சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம். தொடக்கத்தில் முதல் 2 விக்கெட் இழந்தாலும் எங்களிடம் ஒரு நல்ல பேட்டிங் வரிசை உள்ளது என்று எங்களுக்கு தெரியும். ரோட்ரிக்சை பாராட்ட வேண்டும். அவர் எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தார். ஒட்டு மொத்தமாக நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாடினோம். எங்களின் இயல்பான ஆட்டத்தை விளையாட விரும்பினோம். அதை எங்களில் சிலர் செய்தோம்.

    நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்சுகளை தவர விட்டோம். வெற்றி பெற வேண்டு மென்றால் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று நடைபெறும் 2-வது அரை இறுதியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
    • 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் ஆனார்.

    இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனிக்கு நடந்த அதே கொடுமை ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் நடந்ததால் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.

    இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங் மோசமாக சொதப்பியது. ஓப்பனிங் பேட்டர்கள் சஃபாலி வெர்மா 9 ரன்களுக்கும், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவூர் 52 ரன்களும், ஜெமிமா 42 ரன்களும் மட்டுமே அடிக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

    இந்நிலையில் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்தியா நிறைய விக்கெட்களை இழந்து தடுமாறிய போது டோனி தான் நம்பிக்கை தந்தார். எனினும் அவர் நூலிழையில் ரன் அவுட்டாகி உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. அதே சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளது.


    டோனியை போலவே நம்பர் 7 ஜெர்சி அணியும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்கள் அடித்து சிறப்பாக ஆடி வந்தார். 14.4வது ஓவரில் மிட் விக்கெட்டில் ஸ்வீப் ஷாட் ஆடினார். அப்போது அதனை டைவ் அடித்து பிடித்த கார்ட்னர் வேகமாக ஸ்டம்பிற்கு அனுப்பிவிட்டார். இதனால் கிட்டத்தட்ட கிறீஸை நெருங்கிவிட்ட ஹர்மன்ப்ரீத் கவுர் துரதிஷ்டவசமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இத்துடன் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இதனை நினைவுக்கூர்ந்து இருவரும் ரன் அவுட் ஆன வீடியோவை ரசிகர்கள் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர். 

    • இந்திய வீராங்கனைகளான புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    • கவூர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.

    மிர்புர்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்திய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது.

    இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.


    கேப்டன் கவுர் 48 ரன்கள் எடுத்த நிலையில் 1 ரன் எடுக்க முயற்சித்த போது பேட் ஸ்லிப்பாகி கீழே விழுந்தார். இதனால் வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். அவர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். காயத்தை பொறுத்து அவர் மீண்டும் களத்தில் இருங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 மகளிர் உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அவர் 2 ரன்கள் எடுக்க கிரிசை நோக்கி பேட்டை ஊன்றிய போது எதிர்பாரதவிதமாக பேட் தரையில் சிக்கி கொண்டது. அதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அதேபோல இந்த முறையும் நடந்துள்ளது.

    • இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை.
    • அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.

    வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் செயல் கிரிக்கெட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்-ஆல் அடித்து அம்பயர்களை கடுமையாக சாடினார்.

    இதனை சமூக வலைதளங்களில் சரி என்று ஒருதருப்பும், தவறு என்று மறு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை பரிமாறி வருகிறது.

    இந்நிலையில் உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் டியானா எடுல்ஜி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

     

    இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை. அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நீங்கள் தான் கேப்டன். நீங்கள் தான் அணியை வழிநடத்தி சென்று, அடுத்து வர இருக்கும் ஜூனியர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களின் நடத்தையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் இதே போன்ற செயல்பட வாய்ப்புகள் உண்டு.

    உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஐ.சி.சி. விதிகளின் கீழ் விளையாடி வருகின்றீர்கள். அதிர்ஷ்டவசமாக அது சீரிசின் கடைசி போட்டியாக அமைந்தது. பி.சி.சி.ஐ. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலில் 90 முதல் 100 சதவீதம் வரை போட்டிக்கு பங்களிப்பை கொடுங்கள். போட்டிகளில் வெற்றி பெற்றாலே, அளவுக்கு அதிகமாகவே நட்சத்திர அந்தஸ்து தானாக கிடைத்து விடும்.

    எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அம்பயரிங் போட்டியின் ஒருபங்கு மட்டும் தான். சில சமயங்களில் அது சாதகமாக இருக்கும், சில சமயங்களில் அது இருக்காது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், அம்பயர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.
    • ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    வங்காளதேச அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், அம்பயர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார். 

    அவரது இந்த செயல்பாடுகள் ஐசிசி விதிகளை மீறும் செயல் என்பதால் அவர் அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி சம்பளத்தில் 75 சதவீதத்தை அபராதமாக செலுத்தவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

    ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    "இந்திய கேப்டன் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், எமிரேட்ஸ் ஐசிசி சர்வதேச போட்டி நடுவர்கள் குழுவின் அக்தர் அகமது முன்மொழிந்த தடைகளை ஏற்க ஒப்புக்கொண்டார். எனவே அவர் மீது முறையான விசாரணை தேவையில்லை, தண்டனைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன" என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

    ×