என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Haryana CM"
- அரியானாவில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
- இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் நயாப் சிங் சைனி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
90 சட்டசபை தொகுதிகளைக் கொண்டுள்ள அரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி மற்றும் மாநில பா.ஜ.க. தலைவரான மோகன் லால் பதோலி ஆகியோர் ஜிந்த் கிராமத்தில் இன்று மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
அப்போது மாட்டு வண்டியை ஓட்டி வந்த பெண்மணியிடம் முதல் மந்திரி நயாப் சிங் சைனி கிராமத்தில் நடைபெறும் விவசாயம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.
முதல் மந்திரியின் பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலர்களும் மாட்டு வண்டியுடன் நடந்து சென்றனர்.
#WATCH | While travelling from Pundri to Jind, Haryana CM Nayab Singh Saini and State President Mohan Lal Badoli travelled on a bullock cart and talked to women associated with the agriculture sector in the village and learned about their problems.
— ANI (@ANI) August 28, 2024
(Source: CM Office) pic.twitter.com/TitnARDR3L
- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது.
- நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நாயப்சிங் சைனி பதவி ஏற்றார்.
அவருடன் பா.ஜனதாவை சேர்ந்த கன்வர் பால், மூலசந்த் சர்மா, ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால், சுயேட்சை எம்.எல்.ஏ. ரஞ்ஜித்சிங் சவுதாலா ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது. இதன்மூலம், நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இந்நிலையில், அரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சைனி, தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முதலமைச்சராக பதவியேற்று, ரகசியம் காப்புப்பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல் என குற்றம்சாட்டி அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்