என் மலர்
நீங்கள் தேடியது "haryana govt"
- அரியானா அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது.
- அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது. அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை. இதற்கான தடையை அந்த மாநில அரசு விதிக்கிறது. இதுதொடர்பாக, சுகாதார மந்திரி அனில் விஜ் கூறியதாவது:
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
பணியில் இருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரமும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். வார இறுதிகள், மாலை மற்றும் இரவுப் பணிக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது. தவறும் ஊழியர்கள் குறிப்பிட்ட தினம் பணிக்கு வராததாக பதிவு செய்யப்படும்.
வினோதமான முடி அலங்காரம், அதிகமான நகை, அணிகலன்கள், ஒப்பனை அணிவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். காலணிகளும் தூய்மையாக இருக்கவேண்டும். பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை, கையில்லாத மேலாடை போன்றவற்றை அணியக்கூடாது. டெனிம், தோல் ஆடைகளுக்கு அனுமதியில்லை.
ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான ஆடையில் தங்களின் பெயர், பணி குறித்த பட்டியை அணிந்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனை ஊழியர்கள் இடையே ஒழுங்கு, ஒரே தன்மை, சமத்துவம் போன்றவற்றை கொண்டு வருவதற்காகவும், அரசு மருத்துவமனைகள் குறித்து பொதுமக்களிடம் ஒரு நன்மதிப்பை உருவாக்கும் விதமாகவும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாவலர்கள், டிரைவர்கள், சமையலர்கள் உள்பட ஆஸ்பத்திரி அனைத்துப் பிரிவு ஊழியர்களும் முறையான சீருடையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அரியானா மாநில அரசின் இந்த முடிவை பெரும்பாலான அரசு டாக்டர்களும், ஊழியர்களும் வரவேற்றுள்ளனர்
- விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- டெல்லி புறநகரில் பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ந்தேதி முதல் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநில விவசாயிகள் அறிவித்தனர்.
இதையடுத்து கடந்த 8-ந்தேதி விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.
இதையடுத்து நேற்று அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் ஊர்வலமாக டெல்லியை நோக்கி புறப்பட்டனர். 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை லாரிகள், டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்த அரியானா மாநில அரசு கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. அரியானாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலைகளை சீல் வைத்து போலீசாரை குவித்தது. மேலும் டெல்லி எல்லையில் 6 அடுக்கு தடுப்பு சுவர்களும் உருவாக்கப்பட்டன.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத அரியானா விவசாயிகள் பல முனைகளிலும் ஆயிரக்கணக்கில் திரண்டு சென்றனர். தடைகளை தகர்த்து டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதனால் அவர்கள் மீது டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதே போல பஞ்சாப், உத்தரபிரதேச மாநில எல்லைகளிலும் விவசாயிகள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று இரவு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார்கள்.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை விவசாயிகள் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கினார்கள். இன்று (புதன்கிழமை) காலை 2-வது நாளாக டெல்லியை நோக்கிய போராட்டத்தை திட்டமிட்டபடி தொடங்கப் போவதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.
இதன் காரணமாக டெல்லி புறநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளன. என்றாலும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லி புறநகர் பகுதிகளில் குவிந்து வருகிறார்கள்.
2-வது நாளாக இன்று 10 மணிக்கு மீண்டும் விவசாயிகள் டெல்லிக்குள் பலமுனைகளிலும் நுழைய முயற்சி செய்தனர். அவர்களை குறிப்பிட்ட எல்லைக்குமேல் வராமல் இருப்பதற்காக 6 அடுக்கு தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். இன்று டெல்லி புறநகர் பகுதிக்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. டெல்லி புறநகரில் பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் டெல்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் கடுமையாக திணற நேரிட்டது. விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
விவசாயிகள் 6 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள், டீசல் உடன் புறப்பட்டு வருவது உள் நோக்கம் கொண்டது என்றும் தேவையில்லாமல் அமைதியை சீர்குலைப்பதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.
#WATCH | Farmers' protest | Tear gas shells fired to disperse the agitating farmers who were approaching the Police barricade.
— ANI (@ANI) February 14, 2024
Visuals from Shambhu Border. pic.twitter.com/AnROqRZfTQ
- 23 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 4 வருடம் ராணுவத்தில் பணிபுரிய முடியும்.
- அதன்பின் 25 சதவீதம் பேர் 15 ஆண்டு பணிகள் நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
சண்டிகர்:
அக்னிபாத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 4 ஆண்டு பணிபுரிந்தபின் வெளியேறிவிடுவார்கள். அதன்பின் 15 ஆண்டுக்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
இதற்கிடையே, அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதால் அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர் கிடைக்காது எனக் கூறினர். ஆனால், மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.
ஒருவேளை பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அக்னிவீர்களுக்கு மாநில அரசால் தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக் காவலர், ஜெயில் வார்டன் மற்றும் எஸ்பிஓ போன்ற பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் என அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபரில் அரியானா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே, அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்த முன்னாள் அக்னிவீர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையின் கான்ஸ்டபிள் வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
#WATCH | Haryana CM Nayab Singh Saini says "Agnipath scheme was implemented by PM Modi on 14th June 2022. Under this scheme, Agniveer is deployed in the Indian Army for 4 years. Our government will provide 10% horizontal reservation to Agniveers in Haryana in direct recruitment… pic.twitter.com/1WNxKLK65H
— ANI (@ANI) July 17, 2024
- அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
- அதில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் இனி ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என்றது.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பள்ளிகளில் காலையில் குட் மார்னிங்கிற்கு பதில் ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போது, மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வைத் தூண்டும்.
தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் எதிர்காலப் பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்களும் சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக, ஜெய்ஹிந்த் என்று சொல்ல துவங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரியானாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அமல்.
- தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் என முதல் மந்திரி தெரிவித்தார்.
சண்டிகர்:
அரியானாவில் கடந்த 5-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்தக் கட்சி முதல் முறையாக 48 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து, 2வது முறையாக அரியானா மாநில முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த மாநில முதல் மந்திரி நயாப் சிங் சைனி கூறியதாவது:
முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் நான் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து சிறுநீரக நோயாளிகள் தொடர்பானது.
அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது அரியானா அரசு அந்த செலவை ஏற்கும் என தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் கடந்த வாரம் ரக்பர்கான் என்பவர் கும்பலால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்களும் வலுத்து வருகிறது.

இதையடுத்து, உயிரிழந்த ரக்பர் கானின் குடும்பத்தினருக்கு அரியானா மாநில அரசு 8 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை ரக்பர் கானின் குடும்பத்தினரிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. வழங்கினார். மீதமுள்ள 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை துணைக் கோட்ட அதிகாரி வழங்கினார். #AlwarLynchingCase #HaryanaGovt