என் மலர்
நீங்கள் தேடியது "haryana"
- உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் மீண்டும் உயிர் பெற்றார்
ஹரியானா-வை சேர்ந்த 80 வயதான முதியவர் தர்ஷன் சிங் பிரார். உடல் நலம் சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து கர்னால் அருகே உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது இல்லத்தில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் கைதலில் உள்ள தண்ட் கிராமத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, பள்ளத்தில் சிக்கியது. அதன் பின்னர் நடந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தர்ஷன் சிங் பிராரின் கைகளில் அசைவு ஏற்பட்டது. அதனை கவனித்த குடும்பத்தினர், அருகில் உள்ள ராவல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் சிங் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர்.
உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தர்ஷன் சிங்-ன் பேரனான பல்வான் சின் கூறுகையில், "உடல் நலம் சரியில்லாத நிலையில் தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அவர் நான்கு நாட்களாக வெண்டிலேட்டரில் இருந்தார். பின்னர் இதய துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார். உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதனைதொடர்ந்து "தாத்தா இப்போது உயிருடன் இருப்பது ஒரு அதிசயம், அவர் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.
இதுகுறித்து ராவல் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது, "நோயாளி இறந்துவிட்டார் என சொல்ல முடியாது. அவரை எங்களிடம் கொண்டு வந்த போது, அவருக்கு மூச்சு திணறல் இருந்தது, இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு இருந்தது. மற்ற மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது என்றும், தொழில்நுட்ப பிழை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறினர்
- ஆம்புலன்சுக்கு வழிவிடாது இடையூறு செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
- 10 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சண்டிகர்:
அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:
மோட்டார் வாகனச் சட்டம் 194-இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
- தற்போதைய 88 எம்எல்ஏ-க்களில் பா.ஜனதாவுக்கு 40 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.
- இதனால் பா.ஜனதா அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது- காங்கிரஸ் தலைவர்
அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நயப் சிங் சைனி முதல்வராக இருந்து வருகிறார். இவரது தலைமையிலான அரசுக்கு ரந்திர் கோலன், தரம்பால் கோண்டர், சோம்பிர் சங்வான் ஆகிய மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று திடீரென மூன்று எம்எல்ஏ-க்களும் பா.ஜனதா அரசுக்கு கொடுத்கு வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.
அரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதை பான் ஆகியோர் முன்னிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது "அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். விவசாயிகள் தொடர்பான உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இது தொர்பாக உரை பான் கூறுகையில் "மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். அவர்கள் காங்கிரஸ்க்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அரியானா மாநிலம் 90 எம்.எல்.ஏ.-க்களை கொண்டது. தற்போது 88 பேர் உள்ளனர். பா.ஜனதாவுக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். ஜேஜேபி, சுயேட்சை எம்எல்ஏ-க்கள் முன்னதாக ஆதரவு கொடுத்தனர். ஏற்கனவே அவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது சுயேட்சைகள் வாபஸ் பெற்றுள்ளனர்.
நயப் சிங் சைனி அரசு தற்போது மைனாரிட்டி அரசாகும். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு நிமிடம் கூட முதல்வர் பதவியில் நீடிக்க உரிமை பெறவில்லை" என்றார்.
- பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.
- 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல்.
சண்டிகர்:
அரியானாவில் ரந்திர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பிர் சிங் சவான் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்று, காங்கிரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர சிங் ஹூடா முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதை தெரிவித்தனர்.
2019 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், மாநிலக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 90 தொகுதிகள் உள்ள அரியானாவில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.
மனோகர்லால் கட்டார் முதல்வராகவும், துஷ்யந் சவுதாலா துணைமுதல்வராகவும் பதவியேற்றனர் கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்தார். இதையடுத்து மனோகர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.
இந்தச்சூழலில் தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல் வெளியானதால் சூழப்பம் ஏற்பட்டது. ஆனால் தங்களுக்கு முழு ஆதரவு இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
- ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.
- மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
நாடு முழுவதும் 5கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6 மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். பேரணியில் அவர் பேசுகையில், நான் அரசன் இல்லை, பிரதமர் மோடி தான் அரசன். நான் ஒருபோதும் அரசனாக இருக்க விரும்பவில்லை. நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் மட்டுமே, அரசன் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் மோடியை ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் உள்ள கடவுளான ஜெகநாதரே மோடியின் பக்தர்தான் என்று பாஜக பிரமுகர் பேசியது சர்ச்சையானது.
அதுமட்டுமின்றி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் மோடி, தான் மனிதப் பிறவியே அல்ல என்றும் பரமாத்மாதான் தன்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது, பயாலஜிகளாக தான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது.

- டெல்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
- குடிநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இச்சூழலில் அம்மாநில அரசு அரியானாவில் இருந்து கூடுதல் தண்ணீர் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று டி.கே.சர்மா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இமாச்சல் வழங்கும் நீர் டெல்லிக்கு தடையின்றி சென்று சேர வேண்டும் என்று அரியானா அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், குடிநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
- ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
- அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.
அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.

இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- தம்பதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடினர்.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹன்சி பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தம்பதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடினர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.
போலீசார் விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஹிசார் மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தை சேந்தவர் என்றும் அந்த பெண் பக்கத்து கிராமம் படாலை சேந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த 7 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்னல் நகரில் போடப்பட்ட ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளது என பல புகார்கள் வந்தன.
- கொட்டும் மழையில் மோசமான சாலைகளில் தாரை கொட்டி சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
அரியானாவில் உள்ள கர்னல் நகரில் போடப்பட்ட ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளது என்று இந்தாண்டு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில், கொட்டும் மழையில் கர்னல் நகரில் உள்ள மோசமான சாலைகளில் தாரை கொட்டி சாலைகள் சரிசெய்யப்பட்டு வரும் வீடியோவை கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், அரசு ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று யார் சொன்னது. ஹரியானாவில் உள்ள கர்னல் நகரில் போர்க்கால அடிப்படையில் மோசமான சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. சிறப்பான வேலை நரேந்தர் ஜி" என்று கேரளா காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.
- மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது.
- காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு கார் ஒன்று மின்கம்பத்தில் ஏறி அதில் சிக்கிக் கொண்டது. பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதால் விபத்து நடந்துள்ளது.
மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் எஸ்யூவி மின்கம்பத்தில் ஏறி, சாய்ந்த நிலையில் அதில் சிக்கியது.
உள்ளூர் மக்களின் உதவியால் காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார். மின்கம்பத்தில் ஏறிய காரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
விபத்து ஏற்படுத்திய ஹோண்டா அமேஸ் காரில் இருந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பிச் சென்றுவிட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த குருகிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார்
- சகோதர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
அரியானாவில் தனது தாய் உட்பட குடுபத்தினர் 6 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் நராய்கர் [Naraingarh] நகர் அருகே உள்ள ரத்தோர் கிராமத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த கொலைகள் அரங்கேறியுள்ளது.
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது தாய், சகோதரன், சகோதரனின் மனைவி மற்றும் அவர்களின் 7 வயது மகன் , 6 வயது மகள் மற்றும் 6 மாத குழந்தை உட்பட 6 பேரை பூஷன் குமார் என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்து அவர்களை வீட்டில் வைத்தே எரிக்க முயற்சி செய்துள்ளார். தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார். எனவே தந்தை சத்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பூஷனை கைது செய்துள்ளனர் . சகோதர்கள் இருவருக்கும் இடையில் 2.25 ஏக்கர்குடும்ப நிலம் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
- நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது
- எல்லோருக்கும் அவர்களின் நாள் என்பது ஒன்று இருக்கும், இது பாகிஸ்தானின் நாள்
நிறைவு பெரும் தருவாயில் உள்ள பாரீஸ் ஒலிம்பிக்சில் நேற்று நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த வருட ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரை இந்தியா 4 வெண்கலம் வென்றுள்ள நிலையில், நீரஜ் முதல் வெள்ளியை வென்றுள்ளார். நீரஜ் சோப்ராவின் இந்த வெற்றிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
நீரஜின் தாய் சரோஜா தாய் மகனின் வெற்றி குறித்து பேசுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது, நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது, எனவே இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான். [பாகிஸ்தான் வீரர்] நதீம் தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரும் மகன் போலத்தான். அனைவரும் [வீரர் வீராங்கனைகளும்] எனது பிள்ளைகள்தான். வீட்டுக்கு வந்ததும், நீரஜூக்கு பிடித்த உணவைச் சமைத்துத் தருவேன் என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | Haryana: On Neeraj Chopra winning a silver medal in men's javelin throw at #ParisOlympics2024, his mother Saroj Devi says, "We are very happy, for us silver is also equal to gold...he was injured, so we are happy with his performance..." pic.twitter.com/6VxfMZD0rF
— ANI (@ANI) August 8, 2024
நீரஜ் சோப்ராவின் வெற்றி குறித்துப் பேசியுள்ள அவரது தந்தை சதீஷ் குமார், எல்லோருக்கும் அவர்களின் நாள் என்பது ஒன்று இருக்கும், இது பாகிஸ்தானின் நாள், நாம் வெள்ளி வென்றுள்ளோம். அதுவே மிகவும் பெருமைக்குரியது என்று தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடத்த ஒலிம்பிக்சில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Haryana: On Neeraj Chopra winning a silver medal in men's javelin throw at #ParisOlympics2024, his father Satish Kumar says, "Everyone has their day, today was Pakistan's day...But we have won silver, and it is a proud thing for us..." pic.twitter.com/YQNpdTDYzg
— ANI (@ANI) August 8, 2024