என் மலர்
நீங்கள் தேடியது "heart health"
- ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது.
- ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது.
உட்கடசனா (நாற்காலி போஸ்)
* உத்கடாசனா நமது தொடை தசைகள் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்துகிறது.
* இந்த ஆசனம் நமது தோள்பட்டைகள், முதுகு, இடுப்பு மற்றும் பிட்டம் ஆகிய உறுப்புகளை சீராக்குகிறது. மேலும் நமது தசைகளை இறுக்கி, அவற்றுக்குள்ளேயே வலிமையைத் தருகிறது.
* தட்டையான பாதங்களினால் சிரமப்படுபவா்களுக்கு உத்கடாசனா மிகப் பொிய நன்மையைச் செய்கிறது. அதாவது தட்டைப் பாதப் பிரச்சினையை படிப்படியாகக் குணப்படுத்துகிறது.
* இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உத்கடாசனா மிகவும் உதவியாக இருக்கிறது. இது இதயத்தை மேம்படுத்தி, இதயத்தையும் அதன் துடிப்பையும் தூண்டிவிடுகிறது. பதங்குஸ்தாசனம் (பெருவிரல் போஸ்)
இந்த ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. பதங்குஸ்தாசனத்தில் கால்களின் விரல்களை கைகளின் கட்டைவிரல்களால் தொட வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

உத்தனாசனம் (முன்னோக்கி நிற்கும் வளைவு)
உத்தனாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது முக்கியமாக கணுக்கால், முழங்கால்கள், தொடைகளில் வலிமையை உருவாக்குகிறது. இது தசையின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. உத்தனாசனம் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்கிறது.
உத்தாசனத்தில் உடலின் மேல் பகுதி தரையை நோக்கி வளைவதுடன், தலை பாதங்களைத் தொடுவது போல இருக்க வேண்டும். இதன் காரணமாக, இதயத்தை நோக்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கத் தொடங்கலாம். இது இதய செல்திறனை மேம்படுத்துகிறது.

தடாசனா (மலை போஸ்)
தடாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது மிகவும் பயனுள்ள ஆசனமாகும். இந்த ஆசனம் செய்வது உடல் தோரணையை மேம்படுத்துவதுடன், உடல் சீரமைப்பை சரியாக்குகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் மன வலிமையை அதிகரிக்கிறது.
கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் எதிர்மறை எண்ணங்களைக் குறைக்கிறது. நுரையீரலை சுத்தம் செய்வதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்துகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் நேர்மறையை ஊக்குவிக்கிறது. கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. உங்கள் முதுகுத்தண்டில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

சக்ராசனம்
இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் யோகாசனங்களில் சக்ராசனம் மிகவும் கடினமான ஒன்றாகும். இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பிட்டம், முதுகு மற்றும் கால்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும். இது தவிர, இந்த ஆசனம் செய்வது மார்பு தசைகளை நீட்டுவதுடன் முதுகுத் தண்டின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய செயல்பாட்டை அதிகரிக்கிறது.
முதுகு எலும்புகளைப் பலப்படுத்துவதுடன் புத்துணர்ச்சியை அளிக்கிறது. நீண்ட நேரம் மேசையில் அமர்ந்து கணினி பயன்படுத்துவோர்களுக்கு மன அழுத்தம், கோபம் மற்றும் கூன் முதுகு வராமல் தடுக்கும்.
இந்த ஆசனங்கள் அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் ஆசனம் செய்யும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதைத் தவிர்ப்பது நல்லது. எனவே நிபுணரின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த ஆசனம் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.
- வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.
வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் வெந்நீரை குடிப்பதால் விலகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெந்நீரைக் குடிப்பது அதில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது.
நாம் வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். சரியான ரத்த ஓட்டம் காரணமாக, ரத்த அழுத்த அளவு சாதாரணமாக இருக்கும்.
ரத்த அழுத்தத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது நாம் அனைவருக்கு தெரியும். இதன் பொருள் ரத்த அழுத்தம் சீராக இருந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயமும் குறைகிறது.

நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை ஒன்று அல்லது இரண்டு கப் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி வெந்நீர் குடிப்பதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
உண்மையில், நீங்கள் சூடான தண்ணீரைக் குடிக்கும்போது, உடல் குளிர்ச்சியடையும் செயல்முறையைத் தொடங்குகிறது.
இந்நிலையில், வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது, இது எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் பருமன் இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மொத்தத்தில், சூடான நீரைக் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல விளைவைக் கொண்டிருக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால், எதையும் அதிகமாகச் செய்வது சரியல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெந்நீரிலும் இதே நிலைதான். வெந்நீரை அதிகமாக குடித்தால், உணவுக்குழாயில் உள்ள நல்ல திசுக்களை சேதப்படுத்தி, சுவை மொட்டுக்களை கெடுத்து, நாக்கில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, நீங்கள் தொடர்ந்து சுடுநீரை குடிக்க விரும்பினால், அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்வது நல்லது.
- இதயம் தொடர்பான நோய்கள் யாருக்கும் வரலாம்.
- பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.
இதயம் தொடர்பான நோய்கள் யாருக்கும் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, கொலஸ்ட்ரால், அதிக பிபி, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பின்வரும் குறிப்புகளை பின்பற்றுவது முக்கியம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் இருந்து விலகி இருங்கள். பாஸ்ட் புட் மற்றும் ஓட்டல்களில் விற்கப்படும் உணவுகளை தவிர்த்து வீட்டில் செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதற்கு பதிலாக, பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். இதனால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். எனவே, எப்போதும் உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் உணவு விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்.

கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். இதய நோய்களுக்கு கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மன அழுத்தம் பல வகையான நோய்களை ஏற்படுத்தும். எனவே மன அழுத்தத்தை சீராக நிர்வகிப்பதன் மூலம், பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
- வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
- நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்தவை, மிருதுவானவை, சத்தானவை. தினமும் ஊறவைத்த ஒரு வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை..
இதய ஆரோக்கியம்
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைக்கவும், நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கவும் உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
மூளை செயல்பாடு
மேலும் வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை செயல்பாட்டையும் மேம்படுத்தும். அறிவாற்றல் திறனையும் அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்பு
வால்நட்டில் பாலிபினால்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்டுகள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளன. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன.
உடல் எடை
வால்நட் அதிக கலோரிகள் கொண்டதாக இருந்தாலும் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. அதனால் சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக உட்கொள்ளப்படும் கலோரி அளவை குறைக்கவும் செய்யும்.
செரிமானம்
அக்ரூட் பருப்பை ஊறவைத்து சாப்பிடும்போது எளிதில் செரிமானமாகிவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் அதிகரிக்கும். அதில் செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்தும் உள்ளது.
எலும்பு ஆரோக்கியம்
வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கு மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் தேவை. அவை வால்நட்டில் இருக்கின்றன. அதனை தினமும் சாப்பிடுவது அதிக பலனை தரும்.
சரும ஆரோக்கியம்
அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஈ அதிகம் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன.
ரத்த சர்க்கரை
அக்ரூட் பருப்புகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
தூக்கம்
மெலடோனின் ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கும் தன்மை அக்ரூட் பருப்புக்கு உண்டு. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனாகும். இதனால் தூக்கத்தின் தரம் மற்றும் தூங்கும் கால அளவை மேம்படுத்த உதவும்.
நாள்பட்ட நோய்கள்
அக்ரூட் பருப்பில் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன.
- அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.
- சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இதயநோய் மீண்டும் தாக்கும் அபாயத்தை தடுக்கவும், மீண்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவும், அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.

அறுவை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய முதல் வாரம் உங்களது அன்றாட வேலைகளை பழையபடி தொடர்வது முக்கியம். சிலநேரங்களில் ஒரு சிறு வேலைகூட உங்களை களைப்படையச் செய்யும். மூச்சு விடுவதற்கு சிரமமாகத் தெரியலாம். ஆனால் இது சாதாரணமான விஷயம் தான்.
நீங்கள் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால் மீண்டும் உங்களது தினசரி வேலைகளை செய்வதற்கு முன்னாள் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். 4 முதல் 8 வாரத்தில் உங்களது இயல்பான நிலை மீண்டும் திரும்பும்.
உங்களது அன்றாட தினசரி வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுப்பது முக்கியம். அன்றாட வேலைகளும், உடற்பயிற்சிகளும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முக்கியமானதாக இருந்தாலும் சரியான வேலைக்கும், அதிகப்படியான வேலைக்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது.

உங்கள் தினசரி வேலைகளை திட்டமிடுவது போல் அவ்வப்போது இடை இடையே ஓய்வெடுக்கவும் திட்டமிடுதல் அவசியம். இரவில் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது அவசியம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதல் சில வாரங்கள் தினமும் பகலில் ஒரு குட்டி தூக்கம் தூங்கலாம்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் உடற்பயிற்சி செய்து இருப்பீர்கள். உடற்பயிற்சி செய்வது உடல் பலத்தை மேம்படச் செய்ய உதவுகிறது. உங்களது இதயத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன் எதிர்காலத்தில் இதயநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் உதவும்.

நடைபயிற்சி செய்வதற்கு சமதள இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தையல்களை பிரித்த பிறகு பூங்காவிலோ அல்லது வீட்டு வளாகத்திலோ நடைபயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படுத்தும் சக்தியின் விகிதாச்சாரம் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
- ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
- ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை பொறுத்த வரை ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அது மட்டுமல்லாமல், உணவுப் பொருள்களைத் தயார் செய்யத் தேவைப்படும் எண்ணெயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எவ்வாறு இதய ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய் நன்மை பயக்கும் என்பது குறித்து காணலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள் போன்றவை அடங்கும். இதுதவிர, நம் அன்றாட உணவில் தேர்ந்தெடுக்கும் எண்ணெய் வகைகளும் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பைத் தரக்கூடியதாக அமைகிறது.

குறிப்பாக, இதய ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் உணவுப்பொருட்களில் ஒன்றான கடுகு இல்லாமல் சில உணவு வகைகள் முழுமையடையாது. ஆனால், இது ஏன் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து யோசித்ததுண்டா?
ஆம். சிறிய அளவிலான கடுகு உடல் ஆரோக்கியத்திற்கு பலதரப்பட்ட நன்மைகளைத் தருகிறது. கடுகு கொண்டு தயாரிக்கப்படும் கடுகு எண்ணெய் உண்மையில் உடலுக்கு மிகுந்த நன்மையை தருகின்றன.
கடுகானது ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. கடுகு எண்ணெய்யில் சைனசிடிஸ், சளி, தடுக்கப்பட்ட மூக்கு, தோல் மற்றும் முடிக்கு போன்றவற்றிற்கு நன்மை தருகிறது.
கடுகு எண்ணெய் நன்மைகள்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
கடுகு எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் ஒரு வகையான ஆல்பா-லினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதால், இது இதய நோயாளிகளுக்கு பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த கொழுப்பு அமிலங்கள் வழக்கமான கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், பிளேட்லெட்டுகளின் ஒட்டும் தன்மையைக் குறைக்கிறது. மேலும், இது பக்கவாதம், அரித்மியா மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள்
கடுகு எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
இந்த இரண்டு அமிலங்களுமே HDL கொழுப்பை அதிகரிப்பதற்கும், எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு உதவும் கொழுப்புகள் என அழைக்கப்படுகிறது.

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த
கடுகு எண்ணெயில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவுகிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களைத் தடுக்கலாம்.
ஆக்சிஜனேற்றிகள்
இந்த எண்ணெயில் அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, செல்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், இது இரத்த நாளங்கள் மற்றும் இதய திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது. கூடுதலாக, இதில் அதிகளவிலான வைட்டமின் ஈ உள்ளது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்த
கடுகு எண்ணெயை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே, இது இதயம், செல்கள் மற்றும் திசுக்கள் போதுமான அளவு ஆக்சிஜனைப் பெறுவதையும், ஆக்சிஜனை மாற்றுவதற்கான முழு செயல்முறையும் சரியாகச் செயல்படுவதையும் உறுதி செய்கிறது. இல்லையெனில் இது மோசமான ரத்த ஓட்டம் அடைப்புகள் மற்றும் இதய பாதிப்புகளை விளைவிக்கலாம்.

கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்த
ஆய்வுகளில் கடுகு எண்ணெய் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், அதே சமயத்தில் எச்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமான அளவை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மேலும், இது தமனிகளில் பிளேக் கட்டமைப்பதைக் குறைத்து, சீரான ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் மேம்பட்ட இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
