என் மலர்
நீங்கள் தேடியது "Heavy rains in"
- ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.
- மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையின் நேற்று காலை வழக்கம் போல் ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.
பின்னர் மாலை திடீரென வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இரவிலும் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், வரட்டுப்பள்ளம், குண்டேரிபள்ளம், கொடிவேரி, கொடுமுடி, நம்பியூர், கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி, தாளவாடி, பவானி போன்ற பகுதி களிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
பவானிசாகர்-17.40, எலந்த குட்டைமேடு-16.80, சத்தியமங்கலம்-15, கோபி-14.20, குண்டேரி பள்ளம்-8.20, வரட்டுபள்ளம்-8, கொடிவேரி-7, கொடு முடி-6.20, நம்பியூர்-6, கவுந்தபாடி-5.20, மொடக்குறிச்சி-3.40, தளவாடி-1.50, பவானி-1.20.
- இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
- நம்பியூரில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாநகர பகுதியில் 45 நிமிடம் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதேபோல் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை வணக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஆனால் மதியம் 3 மணி பிறகு ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக நம்பியூரில் மதியம் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதுபோல் கோபிசெட்டிபாளையம் பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் நம்பியூரில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, அம்மாபேட்டை, பவானிசாகர், சென்னிமலை, பவானி போன்ற புறநகர் பகுதியில் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. ஆனால் அதேநேரம் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை மழை பெய்யவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
நம்பியூர்-46, கோபி-29, பெருந்துறை-16, எலந்தகுட்டை மேடு-13, அம்மாபேட்டை-6, பவானிசாகர்-3.20, சென்னிமலை-3, பவானி-3.30.