என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helpline numbers"

    • தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது.
    • காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது. அங்கு சுற்றுலா சென்ற தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பீதியில் உறைந்தனர்.

    அவர்கள் தங்களது மாநிலத்துக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்த படி இருக்கின்றனர். காஷ்மீரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் காஷ்மீரில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கேரளாவை சேர்ந்த மொத்தம் 258 பேர் அங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உதவுவதற்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த உதவி மையத்தின் 26 குழுக்களில் 262 பேர் பதிவு செய்திருந்ததாகவும், அவர்களில் 4 பேர் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மற்ற 258 பேரும் காஷ்மீரில் இருந்து திரும்ப முடியாமல் அங்கேயே தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர். சித்திக், முகேஷ், மஜீத், அன்சலன் ஆகியோர் தலைமையிலான கேரள சட்டமன்ற உத்தரவாத குழு ஐம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி ஆகிய இடங்களுக்கு 9 நாள் சுற்றுப் பயணத்துக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் முதலில் காஷ்மீருக்கு சென்றிருந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டனர். அவர்களும் காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் தங்கியுள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தால் எம்.எல்.ஏ.க்கள் குழு தனது சுற்றுப்பயண திட்டத்தை மாற்ற உள்ளது.

    காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக ஏற்பாடுகளை கேரள மாநில அரசு செய்து வருகிறது.

    • தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.

    சென்னை:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு சுற்றுலா சென்றுள்ள தமிழக சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மொத்தம் 140 பேர் காஷ்மீர் சென்றிருந்தது தெரிய வந்தது.

    இவர்கள் அனைவரும் காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்தனர். ஒவ்வொருவரும் அடுத்த வாரம் பல்வேறு தேதிகளில் திரும்பி வருவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

    தற்போது அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் ஒவ்வொருவரும் உடனே தமிழ்நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

    அதன் பேரில் அங்கு சென்றிருந்த தமிழக சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களை பத்திரமாக ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    இதையொட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள பயணிகளை ஒருங்கிணைக்க புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் அல்தாப் ரசூ லையும் காஷ்மீருக்கு அரசு அனுப்பி வைத்தது. இவரது சொந்த ஊர் காஷ்மீர் என்பதால் இவர் அங்குள்ள சுற்றுலா பயணிகளை வேகமாக ஒருங்கிணைத்து ஆங்காங்கே உள்ள விடுதிகளில் தங்க வைத்து அதன் விவரங்களை தமிழக அரசுக்கு தெரிவித்து வந்தார்.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சாப்பாடு வசதி, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து காஷ்மீரில் இருந்து டெல்லி வழியாக ஊருக்கு செல்ல விரும்புபவர்களை அனுப்பி வைத்தார்.

    அதன்படி நேற்று மதியம் தமிழக சுற்றுலா பயணிகள் 35 பேர் தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு வந்தனர். அவர்களை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், ஆணையர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்று அரசு இல்லத்தில் உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தனர். இவர்கள் 35 பேரும் நேற்றிரவு 9 மணிக்கு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

    மேலும் 19 பேர் காஷ்மீரில் இருந்து தமிழக அரசின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு ஐதராபாத் வழியாக விமானம் மூலம் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

    விமான நிலையத்தில் அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி தழுவி வரவேற்றனர். இதில் 14 பேர் மதுரையை சேர்ந்த வர்கள். 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இவர்கள் 19 பேரையும் தமிழக அரசு அதிகாரிகள் வாகனங்களை ஏற்பாடு செய்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதே போல் இன்றும் காலையில் காஷ்மீர் மற்றும் டெல்லியில் இருந்து 50 பேர் விமானம் மற்றும் ரெயில் மூலம் சென்னை வந்த டைந்தனர்.

    காஷ்மீர் சுற்றுலா சென்ற 140 பயணிகளில் இதுவரை 100 பேர் தமிழகம் திரும்பி உள்ளதாகவும், இன்னும் 40 பேர் அடுத்தடுத்த விமானங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காஷ்மீரில் இருந்து அழைத்து வரப்படும் தமிழக பயணிகள் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த ரிட்டன் டிக்கெட்டை முன் கூட்டியே உடனே பயன் படுத்தி பயணம் செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உதவியது. அதே போல் தமிழகத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் இங்குள்ள அரசு அதிகாரிகள் உதவி செய்து கொடுத்திருந்தனர்.

    நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் சென்னை வந்து சேரும். அதில் உள்ள சுற்றுலா பயணிகளை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க சென்டிரலில் வாகன வசதி தயாராக செய்து வைக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து தமிழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காஷ்மீரில் குண்டு காயம் அடைந்த மதுரையை சேர்ந்த பாலசந்துரு அனந்தநாக் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரது மனைவி உடன் இருக்கிறார்.

    இதே போல் அங்கு சிகிச்சையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த பரமேஷ்வர் (வயது 31), சந்துரு (வயது 83) ஆகியோரும், இவருடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மதுசூதனராவ் என்பவரின் உடல் விமானம் மூலம் இன்று சென்னை வந்து, பின்னர் இங்கிருந்து நெல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 2 சுற்றுலா பயணிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தார்.
    • சிறப்பு விமானங்கள் மூலம் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.

    பெங்களூரு:

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேர் பலியானார்கள். இதையடுத்து அங்கு சுற்றுலா சென்றுள்ள கர்நாடக சுற்றுலா பயணிகள் சொந்த ஊருக்கு திரும்பியபடி உள்ளனர்.

    இந்த தாக்குதலை கண்டித்த முதல்-மந்திரி சித்தராமையா பஹல்காமில் கொல்லப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தார்.

    மேலும் அங்கு சுற்றுலா சென்றுள்ள கர்நாடக மக்களை பத்திரமாக மீட்டு வர சிறப்பு குழு அமைத்துள்ளார். தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தலைமையிலான கர்நாடகாவை சேர்ந்த அதிகாரிகள் குழு சிறப்பு விமானங்கள் மூலம் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். இன்னும் 170 பேர் ஜம்மு-காஷ்மீரில் உள்ளனர்.

    இது குறித்து அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், கர்நாடகாவை சேர்ந்த 170 பேர் தற்போது காஷ்மீரில் இருப்பதாகவும், அவர்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்புவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

    சிக்கமகளூரு நகரத்தின் ராமேஷ்வர் லேஅவுட்டைச் சேர்ந்த சந்திரசேகர், அவரது தாயார் இந்திரம்மா, மனைவி லீலா, குழந்தைகள் நக்சத் மற்றும் சினேகா ஆகிய 5 பேரும் தாக்குதல் நடந்தபோது பைசரன் பள்ளத்தாக்குக்கு சென்று கொண்டிருந்தனர். தாக்குதல் நடந்ததை அறிந்ததும் அவர்கள் உடனடியாக தங்கள் ஓட்டலுக்குத் திரும்பினர். தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் வடக்கு கர்நாடகாவின் ஹரப்பனஹள்ளியை சேர்ந்த ஒரு குடும்பம், பஹல்காமில் உள்ள ஒரு கடையில் குங்குமப்பூவை வாங்கிக் கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வணிக நிறுவனத்தை தாக்கிய பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டு மழை பொழிந்தனர். இது எங்களை குலை நடுக்க வைத்தது என்றனர்.

    • தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன்.
    • கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    சென்னை:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டு பயணிகளும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், நமது தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் செய்கிறேன் என தெரிவித்துள்ளார் .

    • சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

    சென்னை:

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவ அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன், பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல் மற்றும் வாட்ஸ்-அப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையாளர் (Resident Commissioner) அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • சுற்றுலா செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டு பயணிகளும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 20 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் இதே நேரத்தில், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

    • நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1070, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி- 101 & 112, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம்- 9498794987, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு- 104, அவசர மருத்துவ உதவிக்கு- 108.

    • புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும்.
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஏற்பாடுகள் தயார் நிலை.

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    அதன்படி புதுச்சேரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேற்படி, கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், பொது மக்களின் நலன் கருதி பிரத்தியேகமாக மெசேஜ் வடிவிலான புகார்களை மட்டும் பதிந்திட 9488981070 என்கிற வாட்ஸ் அப் எண்ணினை பயன்படுத்திக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், " அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவு வாங்கிக் கொள்ளவும். பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும். உதவிக்கு 1070, 1077, 04368227704, 228801 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர், " மொத்தமாக 4,500 முதல்நிலை மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மிக அதிகமாக பாதிக்கும் 12 இடங்கள், அதிகமாக பாதிக்கும் 33 இடங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கவும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை சேதம் தொடர்பான புகார்களு்கு 1077 மற்றும் 04364- 222588 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்" என்றார்

    • மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ உதவி எண்கள் செயல்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ உதவி எண்கள் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவரை customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


    ×