என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hemant Soren"

    • ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
    • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார்.

    கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார்.

    இந்நிலையில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இன்று ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினார்.

    ஜார்க்கண்டில் முதலீடு செய்வது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று கூறப்படுகிறது.\

    • இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது.
    • ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா தெரிவித்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த நிதியாண்டில் சாதி கணக்கெடுப்பை நடத்தப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

    ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா இன்று சட்டமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

    இன்று பட்ஜெட் கூட்டத்தின்போது சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரதீப் யாதவ், கடந்த வருடம் பிப்ரவரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரை அதில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என அரசு விளக்க வேண்டும்.

    தெலுங்கானா மாநிலம் நம்மை விட தாமதமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது, அதன் அறிக்கையும் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் தீபக் பிருவா, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணி மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அடுத்த நிதியாண்டில், எங்கள் அரசு சாதி கணக்கெடுப்பு பணியைத் தொடங்கும்.

    இதற்கான பொறுப்பு எந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுவது என்பதை முடிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது.  சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம்சத்தை உறுதி செய்வதற்கான பொறுப்பு மாநில பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் தேதி  ஒரு நிறுவனத்தை பணியமர்த்த இந்த துறை மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக பிருவா கூறினார்.

    • சுரங்க முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
    • பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர் பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முதல்-மந்திரி சுரங்க ஒதுக்கீட்டை பெற்றதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா மனு அளித்து இருந்தது. இதையடுத்து ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது.

    சுரங்க முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் முதல்-மந்திரியின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இருவரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்து இருந்தது. கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட சோதனையில் மிஸ்ராவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11.88 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.5.34 கோடி பணமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு அவர் கைதானார்.

    மேலும் மிஸ்ராவின் வீட்டில் இருந்து ஹேமந்த் சோரனின் பாஸ்புக் மற்றும் அவர் கையெழுத்தட்ட சில காசோலைகளையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பங்கஜ் மிஸ்ரா தனது கூட்டாளிகள் மூலம் ஹேமந்த் சோரனின் தொகுதியில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தது.

    பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர் பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாத்திடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பி உள்ளது.

    ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு நாளை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    • ராஞ்சியில் உள்ள 4.55 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர்.
    • முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய உதவியாளர் என கூறப்படும் அமித் அகர்வால் பயனடைந்துள்ளதாக தகவல்

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்புடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆகஸ்ட் 14ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி மாபியாக்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்புடைய இடங்கள், ஏழைகள், நலிவடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் நிலத்தை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு அதிகாரியுடன் தொடர்புடைய இடங்கள் என 22 இடங்களில் சோதனை நடத்தியது. 

    இதில் ராஞ்சியில் உள்ள 4.55 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய உதவியாளர் என கூறப்படும் அமித் அகர்வால் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த பண மோசடி வழக்கில் ஹேமந்த் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. 

    இதேபோல் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பல்வேறு இடங்களில் நில அபகரிப்பு கும்பலால் பிளாட்டுகள் அபகரிக்கப்பட்டிருப்பது  தெரியவந்தது.

    • இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை
    • தற்போது 3-வது முறையாக இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை நில அபகரிப்புடன் தொடர்புடைய பண மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

    ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி மற்றும் 24-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. இரண்டு முறையும் அவர் ஆஜராகவில்லை.

    இதனைத் தொடர்ந்து 3-வது முறையாக இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதற்கிடையே, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் கலந்த கொள்ளும்படி, ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு ஏற்று இன்று இரவு நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் 3-வது முறையாகவும் இன்றும் ஆஜராகமாட்டார் எனத் தெரிகிறது.

    முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஹேமந்த் சோரன், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் ஜி20 மாநாட்டை முன்னிட்டு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்படுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத சுரங்க குற்றச்சாட்டில் கடந்த வரும் நவம்பர் 18-ந்தேதி, அமலாக்கத்துறை, சுமார் 9 மணி நேரம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹேமந்த் சோரனுக்கு ED பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • இந்த நிலையில்தான் பத்திரிகை ஆலோசகர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்ட விரோத சுரங்க வழக்கில் இவரை விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. இருந்தபோதிலும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் உள்ளார்.

    இந்த நிலையில் இன்று ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகரான அபிஷேக் பிரசாத் என்ற பிந்து வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அபிஷேக் பிராசாத் வீடு உள்பட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சகேப்கஞ்ச் துணை கமிஷனர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அபிஷேக் பிரசாத் என்ற பிந்து

    மத்திய அமைப்பின் விசாரணையை எதிர்கொள்ள இருக்கும் ஹேமந்த் சோரன், தனது மனைவியை முதலமைச்சராக்க இருக்கிறார் என பா.ஜனதா கூறி வந்தது. ஆனால் ஹேமந்த் சோரன் இதை முற்றிலும் மறுத்துள்ளார்.

    • ஹேமந்த் சோரன் கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் பதவி விலகினார்.
    • ஹேமந்த் சோரன் மீது பிடியை இறுகச்செய்து இருக்கும் அமலாக்கத்துறை அடுத்தகட்ட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சட்ட விரோதமாக சுரங்கம் நடத்தி பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பும், முறைகேடுகளும் செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து நடந்த விசாரணையில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

    அதன் அடிப்படையில் ஹேமந்த்சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. என்றாலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அடுத்தடுத்து 7 தடவை சம்மன் அனுப்பினார்கள்.

    இதனால் கோபம் அடைந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் அது ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் கூறினார்.

    இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் பதவி விலகினார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவரது மனைவியை முதல்-மந்திரியாக்க வழிவகை செய்யும் வகையில் அந்த எம்.எல்.ஏ. பதவி விலகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் இதை ஹேமந்த் சோரன் மறுத்தார். பாரதிய ஜனதாவின் கற்பனை நாடகம் இது என்று கூறினார். என்றாலும் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் எம்.எல்.ஏ. விலகலால் பரபரப்பு நிலவுகிறது.

    இதற்கிடையே இன்று (புதன்கிழமை) அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தலைநகர் ராஞ்சியில் 10 இடங்களில் சோதனை நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் சோதனை நடந்து வருகிறது. இன்று சோதனை நடந்து வரும் இடங்கள் அனைத்தும் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு தொடர்புடைய இடங்கள் ஆகும். எனவே ஹேமந்த் சோரனை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இன்றைய சோதனையை அமலாக்கத்துறை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஹேமந்த் சோரன் மீது பிடியை இறுகச்செய்து இருக்கும் அமலாக்கத்துறை அடுத்தகட்ட விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளது. ராஞ்சியில் இன்று ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாந்தும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் கசரிபாக் நகரில் உள்ள போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர துபே என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் முறையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். கலெக்டர் ராம்நிவாஸ் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

    இன்று சோதனை நடக்கும் இடங்களில் பெரும்பாலான இடங்கள் ஜார்க்கண்ட் சுரங்கத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்களின் வீடுகளாகும். இவர்கள் அனைவரும் ஹேமந்த் சோரனுக்கு மிக மிக நெருக்கமானவர்கள்.

    இவர்களது வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது ஹேமந்த் சோரனை மேலும் சிக்கலுக்கு கொண்டு செல்லும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம்.
    • அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்ட விரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகவில்லை.

    8-வது முறையாக அனுப்பியபோது, என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினால் ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணைக்குப்பின் அவரது வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" என்றார்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த சோரன் கைது செய்யப்படலாம். இதனால் அவரது மனைவியை முதலமைச்சாராக்க முயற்சி செய்து வருகிறார் என செய்திகள் பரவிய நிலையில், இந்த செய்தியை திட்டவட்டாக மறுத்து வந்தார் ஹேமந்த் சோரன்.

    • ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
    • எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம் என ஹேமந்த் சோரன் குறிப்பிட்டிருந்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஏழு முறை சம்மன் அனுப்பியது. ஏழு முறையும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.

    இதனால் அமலாக்கத்துறை 8-வது முறையாகவும் சம்மன் அனுப்பியது. அப்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது. என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்த முடியும் என்றால், அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறைக்கு பதில் தெரிவித்திருந்தார்.

    அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை கடந்த வாரம் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியது. பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதன்பின் கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதிரிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வருகிற 27 முதல் 31-ந்தேதிக்குள் ஆஜராகி கேள்விளுக்கு பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த முறை விசாரணை நடைபெற்ற பின் ஹேமந்த் சோரன் தனது கட்சி தொண்டர்களை சந்தித்தார். அப்போது "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

    • ஹேமந்த் சோரனிடம் கடந்த 20-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை வீடியோவில் பதிவு செய்தனர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நிலம் மோசடி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரி மாற்றத்தைச் செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதுதொடர்பாக கடந்த 20-ம் தேதி அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை வீடியோவில் பதிவு செய்தனர்.

    ஹேமந்த் சோரன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக அவருக்கு அடுத்தடுத்து 8 தடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவற்றுக்கு சோரன் பதில் அளிக்கவில்லை.

    விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் ஜனவரி 29-ம் தேதி அல்லது 31-ம் தேதி வீட்டுக்கு விசாரணைக்கு வருவதாக அமலாக்கத் துறையினர் கடிதம் அனுப்பினர். இதற்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணை என்ற பெயரில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இருந்தார்.

    இதற்கிடையே, முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த கடந்த சனிக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார். தெற்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அவர் தங்கியிருந்தார். தகவலறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சில நிமிடங்களுக்கு முன் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து அவரது உதவியாளர்கள் தொலைபேசியிலும் அமலாக்கத் துறையினர் தொடர்பு கொண்டனர். ஆனால் அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.

    என்றாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிலேயே காத்திருந்தனர். சுமார் 18 மணி நேரம் அவர்கள் காத்திருந்த நிலையில் ஹேமந்த் சோரன் திரும்பி வரவில்லை. அவர் அன்று மாலை டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்ப விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். விமான நிலையத்துக்கும் அவர் வரவில்லை. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டெல்லி மாநில எல்லைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டது.

    என்றாலும் ஹேமந்த் சோரன் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரை தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஹேமந்த் சோரன் காரில் வந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்துமாறு டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநில போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் ஹேமந்த் சோரன் வீட்டில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தக் காரை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அது யார் கார், அது எப்படி அங்கு வந்தது என்பது பற்றி விசாரணை நடந்துவருகிறது.

    அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணை தொடர்பாக முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் சட்ட ரீதியாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே அவர் அமலாக்கத்துறை வளையத்துக்குள் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தப்பவே ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    ஹேமந்த் சோரன் இன்று காலை வரை எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனும் தகவல்களை கேட்டறிந்தார். தன்னை அம லாக்கத் துறையினர் கைது செய்தால் ஹேமந்த் சோரன் தனது மனைவியை முதல் மந்திரியாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அருகே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • டெல்லியில் நேற்றுமுன்தினம் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
    • சொகுசு கார் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். பணமுறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    9-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டபோது எனது வீட்டில் வைத்து விசாரணை நடத்தப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிம் விசாரணை நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து ஜனவரி 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்குள் ஆஜராகி பதில் அளிக்கும்படி 10-வது முறையாக சம்மன் அனுப்பியது.

    இன்று ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 13 மணி நேரம் சோதனை நீடித்துள்ளது. அப்போது சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாகவும், தனக்கும் தன்னைத் சார்ந்த சமூகத்தினருக்கும் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக எஸ்.சி./எஸ்.டி. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அமலாக்கத்துறை அதிகாரிகளின் செயல்களால் நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சல், உளவியல் பாதிப்பை எதிர்கொள்வதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கைப்பற்றப்பட்ட காரின் உரிமையாளர் நான் இல்லை. அதேபோல் கைப்பற்றதாக கூறப்படும் பணம் என்னுடைய அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

    இன்று ராஞ்சியில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஹேமந்த் சோரன் ஆதரவாளர்கள் மொராபதி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஜார்னா பால் கூறுகையில் "ஹேமந்த் சோரன் குறிவைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் பழங்குடியினர் என்பதால். ஆனால் அவர் எங்களுக்கு கடவுள் போன்றவர். அவருக்காக எந்த எல்லை வரும் செல்வோம். அவர் ஜெயிலுக்கு சென்றால் அவருடன் நாங்களும் சிறைக்குச் செல்வோம்" என்றார்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி.
    • இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வந்தார். இவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. 10-வது முறையாக சம்மன் அனுப்பி இன்று அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவரது மனைவியை முதல்வராக்கலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகை சென்றார். அவருடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.எல்.ஏ.-க்களும் ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    இதற்கிடையே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இந்தநிலையில் சம்பாய் சோரன், தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநரிடம் உரிமைக்கோரியுள்ளார். தனக்கு 43 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதற்கான கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து ஆளுநர் அழைப்புவிடுக்கும் நிலையில் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×