என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hijacking Attempt"

    • செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
    • கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை இந்திய கடற்படை முறியடித்தது.

    புதுடெல்லி:

    அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வந்து அந்த கப்பல்களை கடத்தி அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கொள்ளையர்களை ஒடுக்க இந்திய கடற்படை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் மால்டா நாட்டில் கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அந்தக் கப்பலை அவர்கள் தங்களது கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இதற்கிடையே இந்திய கடற்கரையிலிருந்து 2,800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. உடனே இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

    கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் முயற்சியில் கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டன.

    சரக்கு கப்பலை சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது இந்திய ஹெலிகாப்டர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். கப்பலை மீட்கும் பணி சுமார் 40 மணி நேரம் நிகழ்ந்தது. சரணடையாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது. சுற்றி வளைக்கப்பட்டதால் கடற்கொள்ளையர்கள், இந்திய கடற்படையில் சரணடைந்தனர். கப்பலில் இருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    கப்பல் ஊழியர்கள் 17 பேரை மீட்டனர். இவர்கள் 100-நாட்களுக்கும் மேலாக கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். எம்.வி.ரூயென் கப்பல் தற்போது முழுமையாக இந்திய கடற்படை வசம் உள்ளது.

    இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டோ விவேக் மத்லால் கூறுகையில், கடந்த 40 மணி நேரத்தில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் உள்ளிட்டவைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட னர். 17 ஊழியர்கள் எந்த வித காயமுமின்றி மீட்கப்பட்ட னர். கப்பலில் இருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

    • குடிபோதையில் டெப்போ ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.
    • அரசு பஸ்சை கடத்த முயன்றதாக அவரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் அரசு போக்குவரத்து கழக டெப்போ இருக்கிறது. இந்த டெப்போவில் வெளியூர்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் தினமும் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.

    அதேபோல் சம்பவத்தன்று இரவும் ஏராளமான பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது இரவு 10 மணியளவில் ஒரு வாலிபர் டெப்போவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு சாவியுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பஸ்சில் ஏறினார். பின்பு அதனை அங்கிருந்து ஓட்டிச் செல்ல முயன்றார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டெப்போ ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். குடிபோதையில் இருந்த வாலிபர், அதற்கு மறுப்பு தெரிவித்து டெப்போ ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.

    தனது ஊருக்கு இரவு 8 மணிக்கு செல்லக் கூடிய பஸ்சை தவறவிட்டு விட்டதாகவும், ஆகவே இந்த பஸ்சை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு செல்ல இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    மேலும் பஸ்சை அங்கிருந்து ஓட்டிச்செல்வதில் குறியாக இருந்தார். இதனால் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரசு பஸ்சை எடுத்துச் செல்ல முயன்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் மல்லப் பள்ளி பகுதியை சேர்ந்த ஜெபின்(வயது34) என்பது தெரியவந்தது. குடிபோதை யில் டெப்போவுக்குள் புகுந்து அரசு பஸ்சை எடுத்துச்செல்ல முயன்று ரகளையில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். அரசு பஸ்சை கடத்த முயன்றதாக அவரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    வாலிபர் ஜெபின் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போது, அவர்களது நண்பர்கள் சிலரும் அவருடன் இருந்துள்ளனர். போலீசார் வந்ததும் அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×