என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu leader"

    • இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் டாக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
    • இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வங்கதேச நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அவர்மீது இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாசை விடுவிக்கக் கோரி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

    இஸ்கான் அமைப்பு தலைவர் கைது விவகாரத்தில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கவனத்தில் கொண்டு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்து துறவியின் கைது மற்றும் ஜாமீன் மறுப்பு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய பல தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்தல், சூறையாடுதல், திருட்டு மற்றும் நாசப்படுத்துதல் மற்றும் தெய்வங்கள் மற்றும் கோவில்களை இழிவுபடுத்துதல் போன்ற பல ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன.

    இந்தச் சம்பவங்களை செய்தவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அமைதியான கூட்டங்கள் மூலம் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் மதத் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளது.

    இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதிதிட்டத்துக்கு உதவியதாக மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதிதிட்டத்துடன் கோவை வந்த 5 பேரை கடந்த 1-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.

    கைதான திண்டிவனம் இஸ்மாயில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவு தீன் மற்றும் கோவை என்.எச். ரோடு ஆசிக் ஆகிய 5 பேர் மீதும் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யு.ஏ.பி.ஏ.) வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(25) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பைசலை கைது செய்தனர்.

    தலைமறைவாக இருந்த அன்வரின் செல்போன் எண் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று அவரை மடக்கிப் பிடித்தனர்.

    தனது நண்பரான ஆசிக் கேட்டுக் கொண்டதால் சதி திட்டத்துக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    இவ்வழக்கில் கைதான ஆசிக் பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் படித்துள்ளார். அங்கு இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    அவர்கள் யார்-யார்? ஆசிக்குடன் அவர்கள் எந்தெந்த வகையில் தொடர்பில் இருந்தார்கள்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×