என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hunting"

    களக்காடு வனப்பகுதியில் செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சி தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்ற இந்த காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால்குரங்கு, செந்நாய்கள், நீலகிரி வரையாடு, கடமான் உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வனப்பகுதியின் பாதுகாப்பை கருதியும், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அறியவும், சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளார்களா என்பதை கண்காணிக்கவும் களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் 115 இடங்களில் அதி நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

    இதில் பதிவான படங்களை வனத்துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தற்போதும் தானியங்கி கேமராவில் பதிவான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த செந்நாய்கள் நாய் குடும்பத்தை சேர்ந்த மாமிச உண்ணி ஆகும். அனைத்து பகுதி காடுகளிலும் வாழும் தன்மை கொண்டவை. கூட்டம், கூட்டமாக வாழும் செந்நாய்கள் வேட்டையாடுவதில் வல்லமை கொண்டவைகளாக திகழ்கின்றன. தன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட விலங்குகளையும் தனது புத்தி கூர்மையால் எளிதில் வேட்டையாடும் செந்நாய்கள் புள்ளிமான், காட்டெருமை, கடமான், காட்டுபன்றி, கோழையாடு, சருகுமான் போன்ற விலங்குகளை விரும்பி உண்ணும்.

    இவைகள் 4 முதல் 10 குட்டிகளை ஈனும். இவைகளின் வாழ்நாள் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் 4,500 முதல் 10 ஆயிரம் வரையிலான செந்நாய்கள் வாழ்வது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் அறிக்கை படி செந்நாய்கள் கூட்டம் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவில் செந்நாய்கள் இருப்பதும், அவைகள் ஆரோக்கியமாக சுற்றி திரிவதும் தானியங்கி கேமரா மூலம் தெரியவருகிறது.

    இத்தகவல்களை களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளனர். #tamilnews
    அரூர் அருகே வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை வனச்சரசம் மாம்பாடி பகுதியில் தீர்த்தமலை வனச்சரகர் தண்டபாணி தலைமையில் வனவர் வேலு, வனக்காப்பாளர்கள் முகமது வக்கீல், மணி, ஜான்அந்தோணி ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது மல்லூத்து பகுதியில் சத்தம் கேட்டு சென்று கொண்டிருந்த போது கும்பலாக வந்த சிலர் வனத்துறையினரை பார்த்தவுடன் ஓடி விட்டனர். அதில் 2 பேரை மட்டும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில்  மாம்பாடி நரிமேட்டை பகுதியை சேர்ந்த 12 பேர் அடங்கிய கும்பல் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது.  

    பிடிப்பட்ட ரத்தினம் (வயது 47), கோவிந்தன் (60) 2 பேரையும் தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அரூர் நீதிமன்ற நடுவர் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தப்பியோடிய 10 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
    தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற மாணவி மாயமாகி 77 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரை தேடும் பணியில் 500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டுதுறையை சேர்ந்தவர் ஜேம்ஸ். தோட்ட தொழிலாளி. இவரது மகள் ஜேஸ்னா (20). இவர் கோட்டயம் மாவட்டம் காஞ்சர பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி ஜேஸ்னா தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜேம்ஸ் கோட்டயம் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் கல்லூரி மாணவி இறந்து கிடப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் ஜேஸ்னாவாக இருக்கலாம் என கருதிய கேரள போலீசார் ஜேம்ஸ் மற்றும் அவரது உறவினர்களை அழைத்து கொண்டு செங்கல்பட்டு சென்றனர். ஆனால் பிணமாக கிடந்தவர் ஜேஸ்னா இல்லை என தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் ஜேம்ஸ் குடும்பத்தினர் கேரளா திரும்பினார்கள். தனது மகள் மாயமானது குறித்து ஜேம்ஸ் கோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    மேலும் கேளரள முதல்-மந்திரி, டி.ஜி.பி. ஆகியோரிடமும் புகார் அளித்து இருந்தார்.

    மாயமாகி 77 நாட்கள் ஆகியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தேடும் பணிக்கு சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 4 டி.எஸ்,பி.க்கள், சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் என மொத்தம் 500 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் இன்று முதல் மாணவியை தேடும் பணியை தொடங்கினார்கள். மாணவி ஜேஸ்னா மாயமாகும் முன் தனது தோழிக்கு செல்போனில் தகவல் அனுப்பி உள்ளார். அதில் நான் மரணம் அடைய போகிறேன் என தெரிவித்து உள்ளார்.

    இந்த தகவல் இன்று தான் சைபர் கிரைம் போலீசார் மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாணவியை தேடும் பணியில் சிறப்பு குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    மாணவி மரணம் அடைய போவதாக தகவல் அனுப்பி இருந்ததால் கோட்டயம், இடுக்கி, பத்தனம் திட்டா மாவட்டங்களில் உள்ள ஆறு, கடல், வனப்பகுதி, பாழடைந்த கிணறுகள், குளம் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #tamilnews
    ×