என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband death"

    கணவர் இறந்த துக்கத்தில் மிகுந்த மனவேதனை அடைந்த பெண் வங்கி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் முத்து நகரை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள நகர வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிவசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்ததால் விஜயலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆப்பக்கூடல் அருகே மின்சாரவேலியில் கைபட்டு கணவர் பலியானர், மனைவி படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 35).

    இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் பூனைக் கல் என்ற இடத்தில் உள்ளது. அருகே வனப்பகுதி இருப்பதால் தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க தோட்டத்தைசுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.

    இன்று காலை சரவணன் மற்றும் அவரது மனைவி சத்யா(36)வும் தோட்டத்துக்குசென்றனர். அப்போது இருவரது கைகளும் தவறுதலாக மின்கம்பியில் பட்டுவிட்டது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே கணவர் சரவணன் பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் சத்யா கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மின்சாரம் தாக்கி பலியான சரவணனுக்கு உமாஸ்ரீ (6) என்ற மகளும், நிருபம்(1) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×