என் மலர்
நீங்கள் தேடியது "ICC Champions Trophy 2025"
- அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது.
- இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை.
லாகூர்:
இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டது.
அடுத்ததாக பாகிஸ்தானில் 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது. பாகிஸ்தானுடனான சீரற்ற உறவு மற்றும் பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
இந்த நிலையில் இந்திய அணி இந்த முறை பாகிஸ்தானுக்கு வருகை தரும் என்று அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐ.சி.சி.யின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய்ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளது என்று தான் அர்த்தம். இதுவே இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருகை தருவதை 50 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது.
கிரிக்கெட் வாரிய நிர்வாகியாக ஜெய்ஷா இதுவரை செய்துள்ள பணிகள் கிரிக்கெட்டுக்கு ஆதாயம் தரும் வகையிலேயே இருந்துள்ளன. எனவே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்பதை உறுதி செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வார் என நம்புகிறேன்.
இவ்வாறு ரஷித் லத்தீப் கூறினார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் என மோசின் நக்வி கூறினார்.
- 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது.
கராச்சி:
2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.
மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் என நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்க உள்ள ஐசிசி தொடர் என்பதால் பலத்த பாதுகாப்புடன் தொடரை நடத்த ஆயத்தமாகி வருகிறோம். எனவே அடுத்த ஆண்டு அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்பதால் நிச்சயம் இந்திய அணியும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு ஜூலைக்கு பிறகு 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது.
- இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கிறார்கள்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது இன்னும் வரை கேள்வி குறியாகவே உள்ளது.
கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது. அதன் பிறகு அங்கு சென்று விளையாடவில்லை. பாகிஸ்தான் அணி நேரடி தொடரில் விளையாட இந்தியாவுக்கு கடந்த 2012-ல் வந்திருந்தது. அதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் சிறப்பான, அன்பான வரவேற்பு கிடைக்கும் என பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஸ்வான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கிறார்கள். மேலும், இந்திய அணி பாகிஸ்தான் நாட்டில் விளையாடுவதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் சிறப்பான, அன்பான வரவேற்பு கிடைக்கும்.
முகமது ரிஸ்வான் கூறினார்.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
- இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, ஆனால் அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டது. பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நாங்கள் நடத்தபோவதில்லை என பாகிஸ்தான் கூறி வருகிறது.
இதற்கிடையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் வெளியில் வீடியோ கேம் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் சென்றனர். இவர்களை பார்த்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், அவர்களிடம், தயவுசெய்து ஒரு விஷயம் சொல்லுங்கள், நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு சூர்யகுமார் யாதவ் அது நம் கையில் இல்லை என கூறினார். இதனை வீடியோ எடுத்த பாகிஸ்தான் ரசிகரை ரிங்கு சிங், வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது.
- இந்திய அணி விளையாடாவிட்டால் அதன் பிறகு வருங்காலங்களில் இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. தொடர்களுக்கு நாங்களும் அங்கு செல்லமாட்டோம்.
துபாய்:
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரைஇறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.
ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது யோசனையை தெரிவிப்பார்கள்.
ஐ.சி.சி.யை பொறுத்தவரை இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறு நாட்டில் நடத்துவதற்கு சம்மதிக்கும்படி பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிகிறது. 10 ஆட்டங்களை பாகிஸ்தானிலும், 5 ஆட்டங்களை வேறு நாட்டிலும் நடத்தலாம் என்ற பரிந்துரையை ஐ.சி.சி. முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டால் சிக்கல் தீரும். ஆனால் அவர்கள் எதுக்கும் பிடிகொடுக்காவிட்டால், போட்டி முழுமையாக வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம்.
பாகிஸ்தானில் அரசியல் போராட்டத்தில் வெடித்த வன்முறை எதிரொலியாக, இலங்கை 'ஏ' அணி அங்கு மேலும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் பாதியிலேயே தொடரை ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், 'இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு நாட்டிற்கு மாற்றும் திட்டத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதை ஐ.சி.சி.யிடம் சில மணி நேரத்திற்கு முன்பாக தெரிவித்து விட்டோம்.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாவிட்டால் அதன் பிறகு வருங்காலங்களில் இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. தொடர்களுக்கு நாங்களும் அங்கு செல்லமாட்டோம். அதற்கு பதிலாக பாகிஸ்தான் அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்கவேண்டிய சூழல் வரும். ஐ.சி.சி. விதிப்படி, தங்கள் நாட்டு அரசாங்கம் குறிப்பிட்ட நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று எந்த அணி கூறினாலும், என்ன காரணம் என்றாலும் சரி அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வமான உத்தரவை சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய உத்தரவை இதுவரை நாங்கள் பார்க்கவில்லை' என்றார்.
- 2024 - 2027-ம் ஆண்டு வரை இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகள், பொதுவான மைதானத்தில் நடைபெறும்.
- 2028-ம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ தெரிவித்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டியை மட்டும் துபாயில் நடத்த ஐசிசி முயற்சி மேற்கொண்டது.
ஐசிசி-யின் ஹைபிரிட் மாடல் தொடரை பாகிஸ்தான் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 2026 வரையிலான ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும் 2024 - 2027-ம் ஆண்டு வரை இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகள், 2 அணிகளுக்கும் பொதுவான மைதானத்தில் நடைபெறும்.
2025-ம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. அதனை தொடர்ந்து 2026-ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இதற்கான போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
2028-ம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான அட்டவணை விரைவில் உறுதி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும்.
பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இதில் பங்கேற்கின்றனர். இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை விவரம்:-
பிப்ரவரி 19, 2025 2:30 PM கராச்சி பாகிஸ்தான் vs நியூசிலாந்து
பிப்ரவரி 20, 2025 2:30 PM நடுநிலை பங்களாதேஷ் vs இந்தியா
பிப்ரவரி 21, 2025 2:30 PM கராச்சி ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
பிப்ரவரி 22, 2025 2:30 PM லாகூர் ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
பிப்ரவரி 23, 2025 2:30 PM நடுநிலை (துபாய்/கொழும்பு) பாகிஸ்தான் vs இந்தியா
பிப்ரவரி 24, 2025 2:30 PM ராவல்பிண்டி பங்களாதேஷ் vs நியூசிலாந்து
பிப்ரவரி 25, 2025 2:30 PM ராவல்பிண்டி ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
பிப்ரவரி 26, 2025 2:30 PM லாகூர் ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
பிப்ரவரி 27, 2025 2:30 PM ராவல்பிண்டி பாகிஸ்தான் vs பங்களாதேஷ்
பிப்ரவரி 28, 2025 2:30 PM லாகூர் ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
மார்ச் 1, 2025 2:30 PM கராச்சி தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து
மார்ச் 2, 2025 2:30 PM நியூட்ரல் நியூசிலாந்து vs இந்தியா
மார்ச் 4, 2025 2:30 PM நடுநிலை அரையிறுதி (A1 vs B2)
மார்ச் 5, 2025 2:30 PM நடுநிலை அரையிறுதி (B1 vs A2)
மார்ச் 9, 2025 2:30 PM லாகூர் இறுதிப் போட்டி
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ந் தேதி தொடங்குகிறது.
- 8 அணிகளும் தங்களுடைய தற்காலிக அணியை ஜனவரி 12-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்தத் தொடரைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இது பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. எனினும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தங்களுடைய தற்காலிக அணியை ஜனவரி 12-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இதில் வீரர்கள் காயம் காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம். வீரர்களை மாற்ற பிப்ரவரி 13-ந் தேதி வரை அனுமதி உள்ளது. இங்கிலாந்து அணி மற்றுமே இந்த தொடருக்கான அணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மோதும் போட்டிகள்:
இந்தியா vs வங்கதேசம்: பிப்ரவரி 20, 2025 (துபாய்)
இந்தியா vs பாகிஸ்தான் : பிப்ரவரி 23, 2025 (துபாய்)
இந்தியா vs நியூசிலாந்து: மார்ச் 2, 2025 (துபாய்)
அரையிறுதி (தகுதி இருந்தால்): மார்ச் 4, 2025 (துபாய்)
இறுதிப் போட்டி (தகுதி இருந்தால்): மார்ச் 9, 2025 (துபாய்/லாகூர்)
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் தோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான அணிகளை வருகிற 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்த வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய பிப்ரவரி 12-வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் எம்எஸ் டோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி வருகிறது.
2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைக்கான தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டார். அதில் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அதிகாரிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
- எங்கள் நாட்டு ஊடகங்கள் உண்மையை சரிபார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.
லாகூர்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் நடைபெற லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மைதானங்களில் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் தொடங்கியது. புதுப்பிப்பு பணிகளை முடித்து பிப்ரவரி 12-ந்தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் லாகூர் மற்றும் கராச்சியில் இன்னும் பெரிய அளவில் கட்டுமான பணிகள் எஞ்சியுள்ளன. இதனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிவடையாது என்றும் எனவே இந்த போட்டி பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முழுமையாக மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதனை மறுத்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு இடத்திற்கு மாற்றப்படாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "எங்கள் நாட்டு ஊடகங்கள் உண்மையை சரிபார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் இதுபோன்ற செய்தியை வெளியிட்டு இருப்பதால் நாங்கள் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டியதாகிவிட்டது.
இது மாதிரியான செய்திகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி., அரசு, வணிக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் டிக்கெட் விற்பனை மற்றும் போட்டியை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை பாதிக்கும்.
உள்ளூர் நிருபர் ஒருவர், அனுமதியின்றி, கராச்சி மைதானத்தின் கட்டுமானப் பணிகளைப் படம்பிடித்துள்ளார். ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அதிகாரிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு விடும்.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தும். போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட எந்தவொரு யூகத்தையும் நம்ப வேண்டியதில்லை.
என்று தெரிவித்துள்ளது.
- முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக் இடம் கிடைக்கவில்லை.
- கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது ஷகிப் பந்துவீச்சு விதிமுறைக்குட்பட்டு இல்லை என கூறி ஐ.சி.சி. தடைவிதித்தது.
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான வங்காளதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக் இடம் கிடைக்கவில்லை.
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது அவரது பந்துவீச்சு விதிமுறைக்குட்பட்டு இல்லை என கூறி ஐ.சி.சி. தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் சென்னையில் நடந்த பந்து வீச்சு சோதனையிலும் அவர் தேறவில்லை. இதனால் அவரது பந்துவீச்சுக்கு தடை தொடருகிறது. இதன் காரணமாகவே ஷகிப் அல்-ஹசன் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற இருந்த அவரது கனவு கலைந்தது. பார்மின்றி தடுமாறும் விக்கெட் கீப்பர் லிட்டன் தாசும் கழற்றிவிடப்பட்டுள்ளார்.
வங்காளதேச அணி வருமாறு:-
நஜ்முல் ஷூசைன் ஷன்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், தவ்ஹித் ஹரிடாய், சவுமியா சர்கார், தன்சித் ஹசன், மக்முதுல்லா, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹூசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், பர்வேஸ் ஹூசைன், நசும் அகமது, தன்சிம் ஹசன், நஹித் ராணா.
- ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடமில்லை.
- இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான தன்னுடைய இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.
ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி:-
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி, சுப்மன் கில், யுஸ்வேந்திர சாஹல்.